உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு

பெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.944 கோடியை விடுவித்தது மத்திய அரசு

சென்னை: பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக ஏற்பட்ட சேதத்தை சீரமைத்ததற்காக தமிழகத்திற்கு ரூ.944.80 கோடியை மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து மத்திய அரசு விடுவித்து உள்ளது.சமீபத்தில் மாமல்லபுரம் - காரைக்கால் அருகே புதுச்சேரியில் கரையை கடந்ந்த பெஞ்சல் புயல் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. பாதிப்புகளை சரி செய்ய தேவையான உதவி செய்யப்படும் என மத்திய அரசு கூறியது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=m7pjqjx1&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய குழுவினர் சென்னை வந்துள்ளனர். இவர்கள், சென்னையில் ஸ்டாலினை இன்று சந்தித்து ஆலோசனை நடத்திவிட்டு நாளை பாதிப்புகளை பார்வையிடுகின்றனர். புதுச்சேரிக்கும் செல்ல உள்ளனர்.இந்நிலையில், புயல் பாதிப்பு சீரமைப்பு பணிக்காக, மாநில பேரிடர் நிதியில் இருந்து ரூ.944.80 கோடியை தமிழகத்திற்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. மத்திய குழுவின் அறிக்கைக்கு பிறகு கூடுதல் நிதி வழங்கப்படும் எனக்கூறியுள்ள மத்திய உள்துறை அமைச்சகம், இதுவரை 28 மாநிலங்களுக்கு 21,718 கோடி விடுவித்துள்ளது. இயற்கை பேரிடரால் பாதிக்கப்படும் மாநிலங்களுக்கு மத்திய அரசு உறுதியாக இருக்கும் எனவும் கூறியுள்ளது.முதல்வர் கோரிக்கை சென்னையில் முதல்வர் ஸ்டாலினை மத்திய குழுவினர் சந்தித்து பேசினர். அப்போது ஸ்டாலின் கூறியதாவது: பெஞ்சல் புயல் பாதிப்பு காரணமாக 33 பேர் உயிரிழந்துள்ளனர். வரலாறு காணாத அளவிற்கு மழை பெய்ததால் சேதம் ஏற்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் அதிகம் நிதி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 14:05

குடும்பத்துக்கு.... சாரி .... வெள்ள பாதிப்புக்கு நிதி கொடுக்கலை என்று புரண்டு அழுதால் தமிழகத்தில் தேறுவது கடினம் .... தேர்தல் நேரம் என்று மத்தியம் உணர்ந்திருக்கலாம் ....


தர்மராஜ் தங்கரத்தினம்
டிச 07, 2024 14:02

ஒன்றிய அரசுன்னு சொல்ல மறந்துட்டேன்..... ஹிஹிஹி ....


Ramesh Sundram
டிச 07, 2024 12:36

ஒரு நாள் டாஸ்மாக் collection கொடுத்தாலே போதும் நமது வெள்ள நிவாரண நிதிக்கு ஒரு நாள் லஞ்ச காலெக்ஷன் நமது சார் பதிவாளர் அலுவலகம் RTO மற்றும் வருவாய் துறை /தாலுகா அலுவலகத்தின் ஊழியர்கள் இவர்களது லஞ்ச பணம் இந்தியாவுக்கே கடன் கொடுக்கும் அளவிற்கு உயர்ந்தவர்கள் இந்த தமிழகத்தில்


Kasimani Baskaran
டிச 07, 2024 07:18

சிறிதளவு டோக்கனாக வாங்கி அதை யோக்கியன் போல செலவு செய்து கணக்குக்காட்டி ஒருலட்சம் கோடி கேட்கவேண்டும் என்ற ஆசையில் மண் விழுந்துவிட்டது. இப்படி நடக்கும் என்று தெரிந்து இருந்தால் முதலிலேயே அதிகமாக கேட்டு இருப்பார்கள். திராவிட எதிர்ப்பு, ஆதரவு ஊடங்கங்கள் சொன்னவற்றை கூட்டிக்கழித்துப்பார்த்தால் சென்னை தவிர்த்த இடங்களில் சேதம் அதிகம். ஆளும் தீம்க்கா அரசு அதை கண்டுகொள்வதாக இல்லை. இது தீம்காவுக்கு நல்லதல்ல என்பதை உடன் பிறப்புக்கள் எடுத்துச்சொல்லவில்லை என்பது படு சோகமானது.


Mani . V
டிச 07, 2024 06:05

இது அவுங்க ஒரு குடும்பத்துக்கே பத்தாதே.


xyzabc
டிச 07, 2024 01:38

New year bonus for dmk ministers? Dravida model wins.


பாமரன்
டிச 07, 2024 00:13

பகபகன்னு எரியும் பகோடாஸ் கவனிக்க... இந்த தொள்ளாயிரத்து சொச்சம் கோடி விதிப்படி தமிழ் நாட்டிற்கு கொடுக்க வேண்டிய தவனை தான்...‌ஒரு தவனையை முன்னதாக கொடுக்கிறார்கள்..‌அவ்ளோதான்... அதற்காக மத்திய அரசை பாராட்டலாம்... மற்றபடி இப்போ வந்திருக்கும் மத்திய குழுவின் அறிக்கை படி இந்த குறுப்பிட்ட புயல் சேதத்துக்கு சிறப்பு நிவாரணம் வழங்கப்படும்... படலாம்... இல்லைன்னா இதுவரை இருக்கும் நடைமுறை படி தமிழ் நாடுங்கறதால பிம்பிளிக்கி பிளாக்கி கூட சொல்லப்படலாம்... பார்ப்போம்...


anonymous
டிச 06, 2024 23:40

944 கோடியை கோபாலபுரம் கோடவுனில் வைத்திருந்தோம். கரயான் அரித்து விட்டது. புயலில் பாதிக்கப்பட்ட மக்களைக் காக்க உடனடியாக மனிதாப அடிப்படையில் ஒரு ஐம்பதாயிரம் கோடி ரூபாய் உடனே விடுவிக்க வேண்டும் என் துணை முதல்வர் இன்று அறிக்கைவிடலாம்.


T.sthivinayagam
டிச 06, 2024 23:32

தட் ஈஸ ஸ்டாலின் பவர்


பாமரன்
டிச 06, 2024 22:53

இங்கே பொருமியிறுக்கும் உண்ட வீட்டுக்கு ரெண்டகமா மட்டுமே யோசிக்க தெரிஞ்ச பகோடா பாய்ஸ் வயிற்றெரிச்சல் புரிந்து கொள்ள முடிகிறது... இவிங்க தாங்கள் காவடி தூக்கும் மத்திய அரசையே தூற்றும் மனவியாதியில் போயிட்டாங்க... மத்திய அரசின் இந்த முடிவு பாராட்டுக்குரியது... எதுக்கும் நிம்மிக்கு இந்த நியூஸ் போகாமல் பார்த்துக்கனும்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை