உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்

சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்

சேலம்:இந்தியன் ஆயில் நிறுவன தெற்கு மண்டல தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் அறிக்கை: எல்.பி.ஜி., சிலிண்டர் லாரி உரிமையாளர் சங்கம், ஆக., 1 முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில், லாரி உரிமையாளர் சங்கத்துடன் பேச்சு நடத்தப்பட்டது. இதன்படி, அவர்கள் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற ஒப்புக்கொண்டனர். அதனால் வாடிக்கையாளர்களுக்கு சிலிண்டர் வினியோகம் தடையின்றி தொடரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !