உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சலுகை மழையில் நனையும் வெளிநாட்டு கைதிகள்: சிறை காவலர்கள் தாக்கப்படும் அவலம்: கண்டுகொள்ளாத கூடுதல் டி.ஜி.பி.,

சலுகை மழையில் நனையும் வெளிநாட்டு கைதிகள்: சிறை காவலர்கள் தாக்கப்படும் அவலம்: கண்டுகொள்ளாத கூடுதல் டி.ஜி.பி.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: புழல் பெண்கள் சிறையில், நைஜீரிய கைதியால் தாக்கப்பட்ட தலைமை காவலர் சரஸ்வதி, 'இது சிறை காவலர்களின் இருண்ட காலம்; இதற்கு, கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் தான் காரணம்' என்று குற்றம் சாட்டினார்.அவர் கூறியதாவது: புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு கைதிகளால், சிறை காவலர்கள் தொடர்ந்து தாக்கப்படுகின்றனர். இதை யாரிடம் தெரிவித்தால், எங்களுக்கு விடிவு காலம் பிறக்கும் என்று தெரியவில்லை. நாங்கள் மிகுந்த மன உளைச்சலில் உள்ளோம். இதற்கு, சிறைத்துறை கூடுதல் டி.ஜி.பி., மகேஷ்வர் தயாள் தான் காரணம்.வெளிநாட்டு கைதிகள், மொபைல் போன் வைத்திருந்தாலோ, அவர்கள் மற்ற கைதிகளை அடித்து பிரச்னை செய்தாலோ, அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், அவர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டு இருந்தாலும், தண்டனை தராமல் அவர்களிடம் சிரித்து பேசி மகிழ்கிறார். அவர்களை பார்ப்பதற்காகவே சிறைக்கு வருகிறார்.அவர்களுக்கு ஏராளமான சலுகைகளையும், கூடுதல் டி.ஜி.பி., வழங்கி உள்ளார். ஆனால், எந்த குற்றமும் செய்யாமல், நாங்கள் தான் கைதிகள் போல அடைக்கப்பட்டு உள்ளோம். வெளிநாட்டு கைதிகள் இரவில் நிர்வாணமாக திரிகின்றனர். நேற்று முன்தினம் புழல் பெண்கள் சிறையில், கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.அப்போது தேவையில்லாமல், கைதி அறையில் இருந்து வெளியே வர முயன்ற, போதைப்பொருள் வழக்கில் தண்டனை பெற்ற, நைஜீரிய நாட்டைச் சேர்ந்த மோனிகாவை, நான் தடுத்தேன்.இதனால், என் மீது அவர் கொலைவெறி தாக்குதல் நடத்தினார். ரத்த வெள்ளத் தில் கிடந்த என்னை, 108 ஆம்புலன்ஸ் வாகனத்தில், ஸ்டான்லி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், உதவிக்கு ஒரு காவலரை கூட அனுப்பி வைக்கவில்லை.எங்கள் கூடுதல் டி.ஜி.பி., சிறை காவலர்கள் நலனை கருத்தில் கொள்வதே இல்லை. நான் சிறைத் துறையில், 20 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறேன். இது எங்களின் இருண்ட காலம். இதற்கு கூடுதல் டி.ஜி.பி., மகேஸ்வர் தயாள் தான் காரணம்.இவ்வாறு அவர் கூறினார்.சிறை தலைமை காவலர் சரஸ்வதி தாக்கப்பட்டது குறித்து, புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூலை 16, 2025 13:24

நைஜீரியர்களின் தொழிலே அதுதான் போல .......


surya krishna
ஜூலை 14, 2025 21:05

dravidiya model


Manalan
ஜூலை 14, 2025 19:08

ஐயோ ஐயய்யோ என்ன ஒரு ஆசை


அசோகன்
ஜூலை 14, 2025 18:06

கொடுமையில் சிறந்த ஆட்சி திருட்டு.... தி... ஆட்சிதான். மக்கள் சாராயம் குடித்து இதை கொண்டாடவேண்டும்


என்றும் இந்தியன்
ஜூலை 14, 2025 17:03

இது இன்று நேற்றா நடக்கின்றது. சசிகலா சிறையில் இருக்கும் போது வெளியே சென்று வந்தாளே அதாவது பணம் கொடு சிறையில் கூட கொண்டாட்டம் நிகழ்த்தலாம் என்று திருட்டு திராவிட அறிவிலி மடியல் அரசின் ஆட்சியில் சர்வ சாதாரணம்.


Perumal Pillai
ஜூலை 14, 2025 14:39

ரசனை ஆளுக்கு ஆளு வேறுபடும் .


கண்ணன்,மேலூர்
ஜூலை 14, 2025 15:19

இந்த திமுக திராவிடமாடல் ஆட்சி எப்போது வந்ததோ அப்பயிருந்தே தமிழகத்துக்கு இருண்ட காலம்தான். நல்ல காலம் பிறப்பதற்கு இன்னும் ஒரு பத்து மாதம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுமையாக இருக்க வேண்டியதுதான் நம் தலைவிதி....


JAGADEESANRAJAMANI
ஜூலை 14, 2025 14:31

அந்த பெண்காவலர் அழுதுகோண்டே பேசும் காணொளியை பார்த்தேன். மிக பரிதாபமாக இருக்கிறது. இது போன்று பணத்திற்காக சோரம் போகும் உயர் அதிகாரிகளை கைது செய்து தண்டிக்கப்பட வேண்டும்.கர்மா வீண்போகாது.


செல்வேந்திரன்,அரியலூர்
ஜூலை 14, 2025 15:27

இந்த அறிவாலய அடிமை ஊபிஸ்கள் உடனே உபிக்கு அதாவது பிளைட் பிடித்து உத்திரபிரதேசத்திற்கு ஓடி விடுவான்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 14, 2025 12:32

தமிழகத்தில் ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் பெண்களின் நிலை ? ஓசிக்கு பிறந்த அமைச்சர்களால் பெண்கள் சொல்லொண்ணா துயரம் அனுபவிப்பதை எப்போதுதான் தட்டிகேட்கமுடியும் நெபொடிசா மன்னரே


Ramesh Sargam
ஜூலை 14, 2025 12:07

தமிழகத்தில் மட்டும்தான் இப்படி நடக்கும்? எப்படி? காவல் நிலையத்தில் விசாரணை என்கிற பெயரில் அடி, உதை, கொலை. அதே காவல் நிலையத்தில் சிறிய பதவியில் இருக்கும் காவலர்களுக்கு, பெரிய பதவியில் இருக்கும் பெரிய அதிகாரிகளால் மரியாதையின்மை. இப்பொழுது சிறைச்சாலையில் உள்ள சிறிய பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு அங்குள்ள குற்றவாளிகளால் கொடுமை. அதை கண்டுகொள்ளாமல் இருக்கும் கூடுதல் டிஜிபி மீது குற்றச்சாட்டு. தமிழகத்தில் ஆட்சி என்று ஒன்று நடக்கிறதா? முதல்வர் என்பவர் இருக்கிறாரா? அவருக்கு இதுபோன்ற அவலங்கள் தெரியாதா? இல்லை அவருக்கு தெரிந்துதான் இப்படி அக்கிரமங்கள், அட்டூழியங்கள் எல்லாம் நடக்கிறதா?


Indian
ஜூலை 14, 2025 12:35

சும்மா எதெற்கெடுத்தாலும் , தமிழத்தில் மட்டும் தான் என சொல்லாதே , ..உ பி ரொம்ப யோக்கியமா ?


Nagendran,Erode
ஜூலை 14, 2025 15:24

ஏலே மூர்க்கனே நாங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுத்தது தமிழகத்தில் உள்ள திராவிட திமுக அரசை அதனால் இந்த திராவிட மாடல் அரசைதான் கேள்வி கேட்க முடியும் நீ உடனே உபிக்கு ஏன் ஓடுற? நீ ஓட வேண்டியது உன் டொப்பிள் கொடி நாட்டுக்கு....


Indian
ஜூலை 14, 2025 15:58

..நீ எதை வைத்து என்னை மூர்க்கன் என்கிறாய் , நானும் இந்து தான் ...தி மு க வை ஆதிரித்து எழுதினால் மூர்க்கனா ??


krishna
ஜூலை 14, 2025 17:08

THIRUTTU THIYAMUKKA DRAVIDA MODEL KUMBALUKKU MUTTU KODUTHAAL ANGI ILLAI LUNGI AAGA IRUKKA VENDUM.NEE HINDHU ENDRAAL UNNAI PONDRA VEKKAM MAANAM SOODU SORANAI ILLADHA JENMANGALAI ULAGIL ENGUM PAARKKA MUDIYAADHU.


krishna
ஜூலை 14, 2025 17:09

NEE VASIPPADHU THAMIZH NAATIL.EEN UP UP ENA KEVALAMA MADAI MAATRUGIRAAI 200 ROOVA OOPIS KEVALAME


venugopal s
ஜூலை 14, 2025 18:06

பயப்பட வேண்டாம் நண்பரே, சங்கிகள் எல்லோரும் ஓவராக குரைப்பார்களே தவிர கடிக்க மாட்டார்கள், தைரியம் இல்லாத கோழைகள்!


krishna
ஜூலை 14, 2025 21:56

EERA VENGAAYAM VENUGOPAL SANGI ENDRAAL DHEIVIGAM DESA PATTRU.UNNAI PONDRA AGILA AGILA ULAGA KEVALA 200 ROOVAA OOPIS GOPALAPURAM AAYUTKAALA KOTHADIMAI ENDRAAL 200 ROOVAA OSI QUARTER. SANGI ENA KADHARU.MIKKA MAGIZCHI.


Muralidharan S
ஜூலை 14, 2025 11:27

முதல்வரின் கீழ் உள்ள காவல் துறை, இவர் புகாரின் பேரில் தீர விசாரித்து குற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா ? அல்லது ஊடகங்களில் பேட்டி குடுத்து இருப்பதற்காக இவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுமா ??. என்ன என்னவெல்லாமோ நடக்கிறது தமிழகத்தில்.. மர்மமாய் இருக்கிறது...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை