உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர்

ராமேஸ்வரம்: விடுமுறை தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.நேற்று ஞாயிறு விடுமுறை தினத்தில் தமிழகத்தின் பல பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் வாகனம் மூலம் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். முதலில் கோயில் அக்னி தீர்த்த கடலில் நீராடி விட்டு கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களை பக்தர்கள் நீராடினார்கள்.பின் கோயில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிக வாகனங்கள் வருகையால் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் அக்னி தீர்த்த கடற்கரை வரை சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை