தனுஷ், ஐஸ்வர்யா விவாகரத்து குடும்ப நல கோர்ட் தீர்ப்பு
சென்னை:நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவருக்கும் பரஸ்பரம் விவாகரத்து வழங்கி, சென்னை குடும்ப நல நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.நடிகர் ரஜினி மகளும் இயக்குனருமான ஐஸ்வர்யாவை, 2004ல் நடிகர் தனுஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டார்; இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் பிரிவதாக, 2022 ஜனவரியில் அறிவித்தனர். பிரச்னையை தீர்க்க, அவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டனர். இருப்பினும், விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில், பரஸ்பரம் இருவரும் விவாகரத்து கோரி, கடந்த ஏப்ரலில், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுவை, முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி எஸ்.சுபாதேவி விசாரித்தார். இரு முறை தனுஷ், ஐஸ்வர்யா ஆஜராகாததால் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.கடந்த 21ல், வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகி, பரஸ்பரம் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கில், நீதிபதி சுபாதேவி அளித்த தீர்ப்பில், தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோருக்கு விவாகரத்து வழங்குவதாகவும், 2004ல் நடந்த திருமண பதிவை ரத்து செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.