உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிய தலைமுறை சேனலை முடக்குவதா?

புதிய தலைமுறை சேனலை முடக்குவதா?

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி அறிக்கை: அரசு, 'கேபிள் டிவி' நிறுவன ஒளிபரப்பில் இருந்து, 'புதிய தலைமுறை' செய்தி சேனல், தி.மு.க., அரசால் முடக்கப்படுவதாக செய்திகள் வருகின்றன. கடந்த சில நாட்களாக முற்றிலுமாக தடை செய்யப்பட்டிருந்ததாக தகவல் வரும் நிலையில், இதுகுறித்து பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் எழுந்தது. அதனால், தற்போது சில இடங்களில் மட்டும் வருவது போல் செய்து, பல இடங்களில் தடையை தொடர்ந்து வருகிறது, விஞ்ஞான தகிடுதத்தங்களுக்கு பெயர் போன தி.மு.க., அரசு. பாசிச போக்கின் மொத்த உருவமாக மாறிவிட்ட தி.மு.க., அரசு, ஊடகங்களில் தப்பித்தவறிக் கூட, தங்களுக்கு எதிரான செய்திகள் வந்துவிடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறது. அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில், மக்களாட்சியின் நான்காம் துாணான ஊடகங்களுக்கு முக்கிய பங்கு உண்டு. அவற்றை திருத்துவதற்கான வாய்ப்பாக கருதாமல், பழிவாங்கும் நோக்கில் இருட்டடிப்பு செய்து முடக்க நினைப்பது கண்டனத்திற்குரியது. எனவே, உடனடியாக அரசு கேபிளில், புதிய தலைமுறை சேனலின் ஒளிபரப்பு தொடரப்படுவதை, தி.மு.க., அரசு உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Sathya Gold
அக் 07, 2025 21:09

அனைத்தும் தங்கள் வசம் இருந்தால் அனைத்தும் நடந்தேறும் என்பதற்கு சான்று இது... மன்னராட்சி, வாரிசு ஆட்சி இரண்டும் ஒன்றே, மக்களுக்கு எலும்பு துண்டு இலவசங்கள்


சுந்தரம் விஸ்வநாதன்
அக் 07, 2025 09:17

ஒருகாலத்தில் மிகவும் பிரபலமாகவும் அதே நேரத்தில் சன் டிவிக்கு போட்டியாகவும் இருந்த ராஜ் டிவிக்கு கொடுக்காத தொல்லைகளா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை