தி.மு.க., - எம்.எல்.ஏ.,விடம் ஐ.டி., அதிகாரிகள் விசாரணை
தேனி:தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தி.மு.க., -- எம்.எல்.ஏ., மகாராஜன், அவரது தம்பி அ.தி.மு.க., ஒன்றிய செயலர் லோகிராஜன் ஆகியோரிடம் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். அவர்களின் நிறுவனங்களில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை பறக்கும் படையினர் மாலை, 4:00 மணியளவில் விசாரணை நடந்தினர். விசாரணை முடிவில் ஆவணங்கள் ஏதும் கைப்பற்றவில்லை. விசாரணை முடிந்து நேற்றிரவு, 8:30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் புறப்பட்டு சென்றனர். முன்னர் இருவரும் அரசு ஒப்பந்ததாரர்களாக இருந்தனர். இது குறித்து, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் லோகிராஜனிடம் கேட்ட போது, ''எந்த சோதனையும் எங்களிடம் நடத்தவில்லை,'' என்றார்.