உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு அக்கறை இல்லை

தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு அக்கறை இல்லை

சென்னை : மாறி மாறி குற்றச்சாட்டு சொல்வதை தவிர, மக்கள் மீது அக்கறை இல்லை; நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணமும் இல்லை' என, தி.மு.க., - அ.திமு.க., மீது சென்னை உயர் நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டு மதுரையில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜு பேசினார். முதல்வரை அவதுாறு செய்யும் விதமாக பேசியதாக, ராஜு மீது மதுரை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ராஜு மனு தாக்கல் செய்தார்.

உத்தரவு

மனு, நீதிபதி வேல்முருகன் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசவில்லை என்றும், எதிர்க்கட்சி எம்.எல்.ஏ., என்ற முறையில் ஜனநாயக கடமை ஆற்றியதாக ராஜு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிட்டார்.'முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் பேசியதால், வழக்கை ரத்து செய்யக்கூடாது' என, அரசு தரப்பு வழக்கறிஞர் வாதாடினார்.இரு தரப்பு வாதங்களுக்கு பின், செல்லுார் ராஜு பேச்சில் அவதுாறு எதுவும் இல்லை என்று கூறி, அவர் மீதான வழக்கை ரத்து செய்து, நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.கடந்த 2022ல் அ.தி.மு.க., பொதுக்குழு கூட்டம் நடந்தபோது, ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்துக்குள் அத்துமீறி நுழைந்து, ஆவணங்களை எடுத்துச் சென்றதாக, முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் மீது தொடரப்பட்ட வழக்கு, சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லாததால், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றக் கோரி, முன்னாள் அமைச்சர் சண்முகம் தாக்கல் செய்த மனுவும், நீதிபதி வேல்முருகன் முன், விசாரணைக்கு வந்தது. 'வழக்கு தொடர்பாக 114 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டு, சைதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளன; 300க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்பட்டு உள்ளது; விரைவில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும்' என, அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.சம்பவம் நடந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டதால், விரைந்து விசாரணையை முடித்து, இறுதி அறிக்கையை தாக்கல் செய்யும்படி, சி.பி.சி.ஐ.டி.,க்கு, நீதிபதி உத்தரவிட்டார்.

சாதனைகள் இல்லை

இந்த இரண்டு வழக்குகளின் விசாரணையின்போது, கட்சிகளின் பெயரை குறிப்பிடாமல் தி.மு.க., - அ.தி.மு.க., அரசியலை நீதிபதி வேல்முருகன் விமர்சித்தார். அவர் கூறியதாவது:இரண்டும் ஒன்றுக்கு ஒன்று சளைத்தது அல்ல. நாட்டுக்கு நல்லது செய்யும் எண்ணம், இரண்டுக்கும் இல்லை. மாறி மாறி ஒருவரை ஒருவர் குறை கூறுவதையே வாடிக்கையாக வைத்துள்ளன. இருப்பை தக்கவைத்துக் கொள்ள, இருவரும் மாறி மாறி குறை கூறிக் கொண்டு இருக்கின்றன. இரு தரப்பிலும் சொல்லக் கூடிய அளவில் சாதனைகள் இல்லை. இப்படி பேசிக் கொண்டிருந்தால், அடுத்த தலைமுறை எப்படி உருப்படும்?ஜனநாயகத்தை வலுப்படுத்துகிறோம் என்ற போர்வையில், ஒரு கட்சி, மற்றொரு கட்சியை குற்றம் சாட்டும் நிலை தான் உள்ளது. கல்லுாரி மாணவியரை மனசாட்சியே இல்லாமல் எரித்த கட்சியினர், தற்போது தண்டனை குறைப்பு பெற்று விடுதலையாகி, அவர்களுக்கு தியாகி பட்டம் கொடுத்ததெல்லாம் இங்கு தான் நடக்கின்றன.இரண்டு கட்சியினருக்கும் மக்களைப் பற்றி அக்கறை இல்லை. அவரவர் கட்சியைப் பற்றி மட்டும் தான் அக்கறை இருக்கிறது. உங்கள் வழக்குகளை மட்டும் விசாரித்தால் போதுமா; வேறு வழக்குகள் இல்லையா? எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தாலும், அதே போலீஸ் தான் பணியில் இருக்கின்றனர். தேவையின்றி, போலீசாரை குற்றஞ்சாட்ட வேண்டாம். இவ்வாறு நீதிபதி கூறினார்.

'பேச்சில் கண்ணியம் தேவை'

முதல்வரின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாக, சி.வி.சண்முகம் மீது விழுப்புரம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரும் மனுவும், நீதிபதி வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தது. அவருக்கு எதிரான மற்ற வழக்குகளையும் சேர்த்து விசாரிப்பதாக கூறி, விசாரணையை வரும் 22க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.அப்போது, நீதிபதி வேல்முருகன் கூறியதாவது:ஆளுங்கட்சியினரின் தவறுகளை சுட்டிக்காட்டுவது, எதிர்க்கட்சியின் ஜனநாயக கடமை என்றாலும், அதில் கண்ணியம் தேவை. எச்சரிக்கையுடன், கண்ணியத்துடன் பேச வேண்டும். தேர்தலின்போது, வாக்குறுதிகள் அளிப்பது, உலக நடைமுறை தான். ஆனால், வாக்குறுதிகளை நிறைவேற்றாததை சுட்டிக்காட்டலாம். அந்த காலம் போல் இப்போது இல்லை. அடுத்த தலைமுறையினர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். தலைமுறை மாறி விட்டது. நாம் பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை. சட்டம் படித்துள்ள சண்முகம் சாதாரண நபர் அல்ல; முன்னாள் சட்ட அமைச்சர். அவர் பொறுப்புடன் பேச வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 36 )

theruvasagan
நவ 16, 2024 22:14

நீதிபதி தெரிவித்த கருத்துக்கள் வழக்கை ஒட்டியோ அல்லதுசட்ட வரைமுறைக்கு உட்பட்டதான கருத்துக்களா. அப்படியென்றால் அது தீர்ப்பில் இடம் பெற வேண்டும். அப்போதுதான் அதற்கு அங்கீகாரம் கிடைக்கும். மற்றபடி தன்னுடைய தனிப்பட்ட அபிப்ராயங்களை வாய்மொழியாக தெரிவிக்கும்போது அந்த கருததுக்கள் ஒரு பிரசங்கம் மாதிரிதான் எடுத்துக் கொள்ளப்படும். அதற்கு சட்ட வலிமை கிடைக்காது. அதனால் எந்த மாற்றமும் ஏற்படாது.


Sree
நவ 16, 2024 18:14

அதை விட கேவலம் ஒரு கோர்ட் தண்டனை வழங்கி ஜெயிலுக்கு அனுப்பிய எம் எல் ஏ வை விடுதலை செய்து அமைச்சர் ஆக்கியது


SUBRAMANIAN P
நவ 16, 2024 15:13

இந்த கோர்டுகளுக்கு இதுவே இப்பதான் தெரியுது. அப்போ ஒரு கேசு முடிய இருவது, இருவத்தைஞ்சு வருஷம் ஏன் ஆகாது.. ரொம்ப சுறுசுறுப்பா இருக்காங்க. இந்தியா வல்லரசு ஆயிரும்


sundaran manogaran
நவ 16, 2024 13:02

அரசியல் கட்சிகளின் உண்மை முகத்தை நீதிபதி தோலுரித்து காட்டியுள்ளார்.ஆனால் மக்களுக்கு புரியவில்லையே..


hariharan
நவ 16, 2024 12:40

ஏன் இந்த கேடுகெட்ட மக்கள் திராவிடம் இல்லாத கட்சிக்கு ஒருமுறை வாக்களித்தால் என்ன? ஓவ்வொறு கட்சியும் சில குறிக்கோள்களுடன் செயல் படுகின்றன. ஆனால் இந்த திராவிட கட்சிகளுக்கு ஒரே குறிக்கோள் வேறு யாரும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. கச்சத்தீவை தாரைவார்த்தது, தேர்தல் சமயத்தில் பிரபாகரன் இறந்ததை தாமதப்படுத்தி வெளியிட வற்புறுத்தியது, ராஜபக்ஷேவிடம் வரிசையாக நின்று கைகைகட்டி பரிசுகள் வாங்கியது, நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன்..... என்று பல வாக்குறுதிகள் வழங்கியது, தான் பங்கேற்ற மத்திய அரசு ஆட்சிகளில் தமிழகத்தின் தேவைகளை நிறைவேற்றாதது, பிரபாகரனின் தாயார் இங்கு சிகிச்சை அளிக்க மறுத்தது, கொடநாட்டில் மர்மமான முறையில் நடந்த சாவுகள், தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கில் குற்றவாளிகள் மூவருக்கும் சாதகமாக அரசு வழக்கறிஞர் வாதாடி விடுதலையானது, இந்திராவை மதுரையில் ஆட்களை ஏவிவிட்டு அடித்தது, அந்த ரத்தக்கறைக்கு அன்றைய முதல்வர் விளக்கமளித்தது என பல நினைவுகள் கண்முன்னே வந்து போகிறது. மக்கள் சிறிதளவாவது மாற்றி யோசிக்க வேண்டாமா?


S.Martin Manoj
நவ 16, 2024 12:21

இரண்டு திராவிட கட்சிகளும் இல்லை என்றால் இவரெல்லாம் நீதிபதி ஆகியிருக்க முடியாது,மற்ற மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்றிருப்பார்


Duruvesan
நவ 16, 2024 16:50

எங்கப்பா படிக்க வெச்சார் நான் என்ஜினீயர் ஆனேன்,


Anantharaman Srinivasan
நவ 16, 2024 11:45

திராவிட கட்சிகள் ஆட்சிக்கு வந்து 57 வருஷத்துக்கு பிறகு தி.மு.க., அ.தி.மு.க.,வுக்கு நாட்டின் மீது அக்கறை இல்லையென நீதிபதியின் கருத்து. இதைத்தான் 1967 லேயே தீர்க்கதரிசி காமராஜர் திராவிடமென்பது குட்டையில் கூறிய மட்டையென்று கணித்து காட்டினார்.


நக்கீரன் (நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே)
நவ 16, 2024 11:39

இப்படி வெறுமனே கூறி என்ன நடக்கப்போகிறது? மக்கள் திருந்தி இந்த திருட்டு திராவிடத்தை ஒழித்தால் மட்டும்தான் அடுத்த தலைமுறையை காப்பற்ற முடியும்.


Sampath Kumar
நவ 16, 2024 11:34

இந்திய சட்ட துறை தான் இதுக்கு முக்கிய காரணம் அதில் உள்ள ஓட்டைகாலை பயன்ப்டுத்தி ஊழல் மற்றுமிது போன்று அவதூறு பேச்சுக்கள் எல்லாம் யாஎளிதாக நடைபெறுகிறது மற்ற படி நீதிபதி விமர்சிப்பதுபோல கல்ஸ்ட்ங்களின் ஆட்சி மக்களுக்கானது குறைகள் இல்லாமல் இல்லை அதற்காக மக்களை பற்றி எண்ணமே இல்லை என்று ஒட்டுமொத்தமாக நிராகரிப்பது தவறு மத்தியில் ஆளும் பிஜேபி ஆட்சியில் மணிப்பூர் சம்பவம் நினைக்குவார்க்கிறது மக்களை பற்றி அக்கறை இருந்தால் பிஜேபி அரசு அதனை சரிசெய்து இருக்க முடியும் மோடி ந்த பக்கமே தலை வைத்து படுக்கவில்லையே தாய் என்னவென்று சொல்வது பிஜேபி அடிவருடிகள் என்னத்துக்கு வலிமை சேர்ப்பதாக உள்ளது சட்டத்தை மாற்றுங்கள், கடுமையாக்குங்கள் அது சாலா சிறந்த ஓன்று.


hari
நவ 16, 2024 13:09

சம்பத் போன்ற கொத்தடிமைகள் தான் திராவிட வளர காரணம்


krishna
நவ 16, 2024 13:13

EERA VENGAAYAM SAMPATH KUMAR MURASOLI THUDAITHA MOOLAYODU MANIPUR KURITHU ONNUM THERIYAAMA ULARAADHE.ANGU ANGI KOOTAM KANJA PONDRA BODHAI PAYIR VILAIVIPPADHAI BJP ARASU THADUTHU SARI SEIDHU KONDU IRUKKIRADHU.AAMAM NAATHAM PIDITHA TASMAC KANJA MANAL KANIMAVALA KOLLAI DRAVIDA MODEL AATCHIKKU 200 ROOVAA COOLIKKU EPPADI VEKKAM ILLAMA MUTTU KODUKKARA.


sankaranarayanan
நவ 16, 2024 11:06

இருவருக்குமே திராவிட நாடுதான் முக்கியம் திராவிட மக்களின் முன்னேற்றத்தைப்பற்றிய சிந்தனையே கிடையாது இருவரும் போட்டி போட்டுகொண்டு அவரவர்கள் அரசியல் தலைவர்களுக்கு அங்கங்கே அவர்கள் பெயரில் சிலைகளை - சாலைகள்- பேனர்கள் - பூங்காக்கள் - பள்ளிகள் - அண்ணாதான் கூடங்கள் - மாளிகைகள் - அலுவலகங்கள் - சந்தைகள் - மய்யே இல்லாத பேனாக்கள் - அணியும் சட்டைகள் - புடவைகள் - படிப்பகங்கள் - இன்னும் ஏராளம் ஏராளம் இவைகளுக்கு மக்கள் பணத்தை வீணாக செலவு செய்து, மக்களுக்கு தேவையான முன்னேற்றங்களுக்கு எதுவுன்மே செய்வதில்லை இந்த விஷயங்களில் நீதிபதி அவர்கள் கூறியது முற்றிலும் உண்மை உண்மை உண்மை எந்த கருத்து வேறுபாடும் கிடையவே கிடையாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை