உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 200 அல்ல 234 இலக்கை மாற்றியது தி.மு.க.,

200 அல்ல 234 இலக்கை மாற்றியது தி.மு.க.,

நடிகர் விஜய் பேச்சு, தி.மு.க.,வையும், அதன் அமைச்சர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது. '200 அல்லது 234 தொகுதிகளில் வெற்றி' என, 2026 சட்டசபை தேர்தலுக்கான தி.மு.க.,வின் இலக்கையும் மாற்ற வைத்திருக்கிறது. 'வரும், 2026ல் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில், தி.மு.க., கூட்டணி, 200 தொகுதிகளில் வெற்றி பெற்றாக வேண்டும்; அதற்கேற்ப இலக்கு நிர்ணயித்து, கட்சியினர் களத்தில் வேலை பார்க்க வேண்டும்' என சமீபத்தில் நடந்த கட்சி எம்.பி.,க்கள் கூட்டத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பேசினார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yfev5z61&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதையடுத்து, அமைச்சர்களும் செல்லும் இடமெல்லாம், '200 தொகுதிகளை இலக்காக வைத்து, தி.மு.க., வெற்றி பெற வேண்டும்' என்று, கட்சியினர் மத்தியில் பேசத் துவங்கினர். கட்சி நிகழ்ச்சிகளிலும் இந்த முழக்கம் ஒலித்தது. எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமையின்மை தொடரும் நிலையில், தி.மு.க., எதிர்பார்த்த வெற்றியை அடுத்த தேர்தலில் பெறக்கூடும் என, பலரும் பேசத் துவங்கினர். இந்த நிலையில் தான், அம்பேத்கர் நுால் வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 'இறுமாப்புடன் 200 தொகுதிகளை வெல்வோம் என, எகத்தாள முழக்கமிடுகின்றனர். சுய நலத்திற்காக, தி.மு.க., அமைத்துள்ள கூட்டணி கணக்குகளை, 2026 சட்டசபை தேர்தலில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவர்' என்றார். இது, தி.மு.க.,வை கொந்தளிக்க வைத்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் கோபமாகி, கட்சியின் மூத்த தலைவர்களுடன் போனில் பேசியிருக்கிறார்; சிலரை வீட்டுக்கு அழைத்தும் பேசியிருக்கிறார். அதன் வெளிப்பாடு தான், தி.மு.க., முழக்கத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம். '200 அல்ல, 234 தொகுதிகளில் வெற்றி' என, அமைச்சர்கள் பேச ஆரம்பித்துள்ளனர். ''களத்திற்கே வராதவர்கள் எல்லாம் கண்டதை பேசுகின்றனர். 200 அல்லது 234 தொகுதிகளிலும் தி.மு.க., வெற்றி பெறும். அதற்கான முழு வேகத்தோடு இனி செயல்படுவோம்,'' என்றார், அமைச்சர் சேகர்பாபு.துாத்துக்குடியில் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனும், புதுக்கோட்டையில் பேட்டி அளித்த ரகுபதியும், திருச்சியில் பேட்டி அளித்த அமைச்சர் மதிவேந்தனும், 200க்கும் கூடுதலான இடங்களில் வெற்றி பெறுவோம் என்று தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: கூட்டணி கட்சியினர் அதிருப்திக்கு ஆளாகி விடக்கூடாது என்பதில் முதல்வர் கவனமாக இருப்பார். ஆனாலும், அவர்களின் எதிர்பார்ப்புகள் அதிகமான பின், அதிருப்தியை தவிர்க்க முடியவில்லை. தி.மு.க.,வுக்கு தேர்தல் வியூகம் வகுத்து தந்த பிரஷாந்த் கிஷோருக்கு உதவியாக செயல்பட்டவர் ஆதவ் அர்ஜுனா. தி.மு.க., தலைமையுடன் முரண்பட்டு வெளியேறினார். பணபலமிக்கவர் என்பதால், விடுதலை சிறுத்தைகள் கட்சியில் உடனடியாக இடமும், துணை பொதுச்செயலர் பதவியும் கிடைத்தது. லோக்சபா தேர்தலில் 'சீட்' தர மறுத்து முட்டுக்கட்டை போட்டதால், தி.மு.க.,வுக்கு எதிராக செயல்படவும், விஜயுடன் கைகோர்க்கவும் வைத்திருக்கிறது. புத்தக வெளியீட்டு விழாவில், புத்தகம் பற்றி பேசுவது தான் மரபு. அதை மீறி அரசியல் பேசினார் விஜய். எங்கள் தேர்தல் இலக்கை விமர்சித்து வம்பு இழுத்திருக்கிறார். அதனால், பதிலடி கொடுக்க கட்டளையிட்டது மேலிடம். இனி கட்சி நிர்வாகிகளும், அமைச்சர்களும் இதையே எதிரொலிப்பர். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 71 )

Narayanan
டிச 11, 2024 11:09

தமிழ்மக்கள் 234 தொகுதிகளையும் கொடுத்தால் வரிச்சுமை மூலம் அழித்துவிடுவார்கள் . மேலும் ஹிந்து, மற்றும் கோவில்கள் அழிக்கப்பட்டுவிடும் . கவனம் தேவை . திராவிட கட்சிகளின் ஆதிக்கம் ஒழிந்தால்தான் தமிழ்நாட்டுக்கு நல்லது . இதில் பெண்கள்தான் கவனமாக இருக்கவேண்டும் . உங்களின் கடவுள் பக்தி கோவிலுக்கு போவதுடன் நின்றுவிடக்கூடாது . ஹிந்து எதிர்ப்பாளர்களை ஒதுக்கவேண்டும் . செய்வீர்களா


Dwarakanath Putti
டிச 10, 2024 07:15

ஒருத்தன் ஆந்திராவில் வை நாட் 175 னு சொன்னான் 11 சீட் அவனுக்கு மக்கள் பரிசாக கொடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்து கூட இல்லாம செஞ்சி விட்டுட்டாங்க டோப்பா மண்டயன் உனக்கும் அதயே நிலைமைதான்


Kudumi
டிச 09, 2024 13:30

தங்களை இப்படி எல்லாம் சொல்லுகிறார்கள் என்று தெரிந்தும் நான் இன்னும் அப்படியே இருப்பேன் என்று இருப்பதை பார்த்தல், ஈ வே ரா சொன்ன 21ம் பக்கம் உண்மை தான் போல.


S Ramkumar
டிச 09, 2024 10:05

234 திமுகவிற்கு சாத்தியமே. அதிமுகா வாக்குகளை தவிர பிரிக்கும். பாஜாகா அணியினருக்கு வெற்றிபெறும் அளவுக்கு வாக்குகள் விழாது. ஆகவே திமுகா கூட்டணி கண்டிப்பாக 200 பெரும்.


Oviya Vijay
டிச 08, 2024 22:47

சங்கிகளுக்கு தெரிந்ததெல்லாம் இங்கே கூவிக் கொண்டிருப்பது போல் ஓசி, குவாட்டர், உபி, கோபாலபுரம் கொத்தடிமை, 200 ரூபாய், திராவிஷ மாடல் என்பது தான். பாவம் சங்கிகள்... இதை விட வேறு என்ன சொல்வதென்று அவர்களுக்கும் தெரியாது. பதில் சொல்வதற்கு உருப்படியாக வேறொன்றும் அவர்களால் எழுதவும் முடியாது... பாவம். வீட்டில் கனவில் கூட மேற்கண்ட வார்த்தைகளை பினாத்திக் கொண்டு அவரவர் தம் மனைவிகளிடம் அடி வாங்கிக் கொண்டிருப்பார்கள் போல்...


Jay
டிச 08, 2024 22:31

மன்னர் ஆட்சியை நிலை நிறுத்த பலத்த முயற்சி.


கல்யாண்
டிச 08, 2024 22:03

254 கூட சொல்லாமே


Mohan
டிச 08, 2024 21:27

த.வெ.க. விஜய் தனது சினிமா கவர்ச்சியினாலும், ரசிகர் மன்றத்திற்கு காசு கொடுத்ததாலும் ஒரு நாள் மாநாட்டிற்கு கூட்டம் வரவைத்ததை வைத்து அவர் பெரிய அரசியல் தலைவர் ஆகிவிட்டதாக நினைக்கிறார். மிகவும் சாமர்த்தியமாக திமுக அனுதாபிகளை தன்பக்கம் இழுக்க தமிழை கேவலம் என்று சொன்ன ராமசாமி பெரியாரையும், திராவிடத்தையும் வைத்துள்ளார். விசிக அனுதாபிகளை இழுக்க அம்பேத்கரையும், பெண்களை தன்பக்கம் இழுக்க வேலு நாச்சியாரையும்,நாம்தமிழர் அனுதாபிகளை இழுக்க தமிழ் தேசியத்தையும், கமயூனிஸ்டுகளை இழுக்க நீதிபதி சந்துருவையும்- இப்படி யாரோ கொடுத்த ஐடியாபடி தூக்கிவைத்து வீரவசனம் பேசுகிறார். கூட்டம் ஓட்டாக மாறுவதில்லை. சிவாஜி, விஜயகாந்த்,சரத் குமார், டி.ராஜேந்தர் ஆகியோரே சாட்சி. எந்த ஒரு ஊராட்சி தேர்தல்ல கூட எலக்ஷனில் நின்று ஜெயித்த அனுபவம் இல்லாத விஜய் ஜெயித்தவர்களை விட அதிகமாக பேசுவது அவருக்கு வெற்றி தேடித் தராது. ஒரு தனிமனிதன் திடீரென்று நடிப்பிலிருந்து அரசியலுக்கு வந்தவுடன் வெற்றி பெற்று முதல்வர் ஆவோம் என நினைப்பது அறிவுடைமை ஆகாது. மக்களுக்கான தேவையை அறிவது தான் முதல்படி. அதை சரியாக செய்யட்டும் அவர்.


M Ramachandran
டிச 08, 2024 20:12

இது ஊடல்லா அல்லது நிஜமா


M Ramachandran
டிச 08, 2024 20:09

என்றுமே தீ யா முக்கா புள்ளிகள் கணக்கில் பூஜ்யம். முக்கி முக்கி வரவளைப்பார்கள் வார்த்தைகளை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை