உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது: அன்புமணி பேட்டி

தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது: அன்புமணி பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்கும் திமுகவுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது என பா.ம.க., தலைவர் அன்புமணி நிருபர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.இது குறித்து அன்புமணி கூறியதாவது: முல்லைப்பெரியாறு அணை மற்றும் மேகதாது உள்ளிட்ட விவகாரங்களில் திமுக அரசு கவனம் செலுத்த வேண்டும். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடகா அரசு செயல் கண்டிக்கத்தக்கது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்கும் தி.மு.க.,வுக்கு சமூகநீதி பேச உரிமை கிடையாது. ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சி துவங்கி உள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கொள்கிறேன். அண்ணாத்துரை நினைவு நாளான இன்று, தமிழகத்தில் இனி படிப்படியாக மது விலக்கை கொண்டு வருவோம் என்ற அறிவிப்பு வரும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். தமிழகத்தில் அனைத்து இடங்களில் கஞ்சா விற்பனை நடந்து வருகிறது. போலீசாருக்கு தெரியாமல் யாரும் கஞ்சா விற்க முடியாது. கஞ்சா விற்பனை கட்டுப்படுத்த போலீசார் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ