உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முஸ்லிம்களுக்கு பா.ஜ., செய்த அளவுக்கு தி.மு.க., செய்யவில்லை: அண்ணாமலை

முஸ்லிம்களுக்கு பா.ஜ., செய்த அளவுக்கு தி.மு.க., செய்யவில்லை: அண்ணாமலை

சென்னை : தமிழக பா.ஜ., சிறுபான்மையினர் அணி சார்பில், ரமலான் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி, சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியில், பா.ஜ., மாநில இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு பிரிவு தலைவர் அமர்பிரசாத் ரெட்டி வரவேற்புரை ஆற்றினார்.

அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேசியதாவது:

பா.ஜ., கூட்டணியில் அங்கம் வகித்தவர்கள் தான் தி.மு.க.,வினர். இன்று, ஓட்டு வங்கி அரசியலுக்காக, சிறுபான்மையினரின் ஓட்டுகளை வாங்க வேண்டும் என்பதற்காக, பா.ஜ.,வுக்கு எதிராக மக்களை திசை திருப்பும் செயலில் ஈடுபட்டு வருகின்றனர். பிற மாநிலங்களில், சிறுபான்மையின மக்கள் பா.ஜ.,வுக்கு எப்படி ஓட்டளிக்கின்றனரோ, அதேபோல், தமிழகத்திலும் ஆதரவு அளிக்கும் காலம் வந்து கொண்டிருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு தலைவர் பன்னீர்செல்வம் பேசும்போது, ''ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்ட கட்சி பா.ஜ., எத்தனை முறை லோக்சபா தேர்தல் வந்தாலும், மோடி தான் பிரதமர். அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் தலைவர் மோடி தான்,'' என்றார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை பேசியதாவது:

பிரதமர் மோடி ஆட்சியில், நாட்டில் சிறுபான்மையின மக்கள் அதிகம் வாழும் மாவட்டங்களில், பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், 37 சதவீத வீடுகள் சிறுபான்மையின மக்களுக்கு வழங்கப்படுகின்றன. 'முத்ரா' கடன் திட்டத்தில், 32 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில், 36 சதவீதம் இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தில், 33 சதவீதம் பேர் இஸ்லாமியர்கள். இஸ்லாமிய பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்க மத்திய அரசு, 51,000 ரூபாய் வழங்குகிறது. நோன்பு திறந்த பின் வீட்டிற்கு சென்று, 10 நிமிடம் மனசை திறந்து, பா.ஜ., எங்கேயாவது சிறுபான்மையின மக்களுக்கு எதிரியாக இருந்திருக்கிறதா என்று, நினைத்து பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களுக்கு பா.ஜ., செய்த அளவுக்கு தி.மு.க., செய்யவில்லை; ஆனால், சிறுபான்மையின ஆதரவாளராக தன்னை ஸ்டாலின் காட்டிக் கொண்டிருக்கிறார்.உலகில், 20 நாடுகள் தங்களின் உயரிய விருதை பிரதமர் மோடிக்கு வழங்கியுள்ளன. அதில், ஏழு இஸ்லாமிய நாடுகள். ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட உலக நாடுகள், பிரதமர் மோடிக்கு, சிவப்பு கம்பளத்தை விரித்து வரவேற்பு அளிக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

P. SRINIVASAN
மார் 26, 2025 15:33

பிஜேபி முஸ்லிம்களுக்கு செய்த அந்த நல்லது கொஞ்சம் லிஸ்ட் போட்டு சொல்றிங்களா அண்ணாமலை.


TRE
மார் 26, 2025 13:41

ஏன் மதத்தை வச்சி அரசியல் செய்யும் கட்சி பிஜேபி மக்களை மதத்தைவச்சி பிளவு படுத்துறது நீதிமன்றம், எலெக்ஷன் கமிஷன் வச்சு fraud பண்ணறது இத தவிர பிஜேபி என்ன.....


SUBRAMANIAN P
மார் 26, 2025 14:22

முதல்ல உன் முதுகுல இருக்குற அழுக்கை கழுவிட்டு அடுத்தவன் குறையை அலசு. திமுக போல மக்களை ஏமாற்றி பிழைக்கும் ஒரு கட்சியை உலகிலேயே பார்க்க முடியாது.


Rajah
மார் 26, 2025 10:03

ஒரு பாஜக ஆதரவாளன் என்ற முறையில் இந்த செயலை நான் கண்டிக்கின்றேன். திராவிட கட்சிகளும் ஏனைய கட்சிகளும் வாக்கு வங்ககிக்காக கஞ்சி குடிக்கலாம். ஆனால் நான் இதை பாஜாகாவிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை. முஸ்லிம்களுக்கு பாஜக நல்லது செய்திருந்தால் அதை அவர்கள் உணர்ந்து வாக்கு அளிக்க வேண்டும். இப்படியான நிகழ்வுகளில் பங்கெடுத்து உங்களை நியாயப்படுத்த வேண்டிய அவசியமில்லை. இது ஒரு முஸ்லிம்களின் மதக் கடமை. அதை அவர்கள் செய்யலாம். அதில் இஸ்லாமிய பாஜக உறுப்பினர்கள் கலந்து கொள்ளலாம். இன்று இப்படிப்பட்ட மத நிகழ்வுகள் ஒரு அரசியல் வியாபாரமாக மாறிவிட்டது. தமிழக பாஜகவின் செயல் வேதனை அளிக்கின்றது.


chennai sivakumar
மார் 26, 2025 16:14

இப்போது எல்லா கட்சியினருக்கும் மதம் தான் பிடித்து இருக்கிறது


மூர்க்கன்
மார் 26, 2025 07:34

அப்போ ஹிந்துக்கள் என்ன இளிச்சவாயர்களா??


rmr
மார் 26, 2025 06:21

அவனுங்க என்ன செஞ்சாலும் திமுகவுக்கு தான் வோட்டு போடுவானுங்க அவுங்க இப்போ சிறுபான்மையினர் இல்லை அவனுங்க சலுகைகளை நீக்குங்க முதல. மசூதி சர்ச் எல்லாத்தையும் அறநிலை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வாங்க .


கிஜன்
மார் 26, 2025 05:21

போனோமா .... கஞ்சிய குட்ச்சோமா ...வந்தோமான்னு இருக்கணும் ... அவங்க உங்கள காமடி பண்ணச்சொன்னாங்களா ?


Bhakt
மார் 26, 2025 03:21

உண்மை.


தமிழன்
மார் 26, 2025 02:57

இந்த காமெடியை படித்தவுடன் வயிறு வலிக்க சிரித்தேன்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை