உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  திருமாவளவனை அடியாள் போல தி.மு.க., பயன்படுத்துகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

 திருமாவளவனை அடியாள் போல தி.மு.க., பயன்படுத்துகிறது: ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''திருமாவளவனை அடியாள் போல, தி.மு.க., பயன்படுத்துகிறது,'' என, த.வெ.க., தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். மாமல்லபுரத்தில் நேற்று நடந்த, த.வெ.க., செயல் வீரர்கள் கூட்டத்தில், அவர் பேசியதாவது: தேர்தல் கமிஷனில், விஜய் ரசிகர் இருந்து கையெழுத்து போட்டதால், நமக்கு விசில் சின்னம் கிடைத்திருக்கிறது. தி.மு.க., அமைச்சர்கள், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில், த.வெ.க., 'ஸ்லீப்பர் செல்' இருக்கின்றனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், என்னை திட்டிக் கொண்டே இருக்கிறார். அவரது கட்சி த.வெ.க.,வுக்கு மாறி விட்டது. தற்போது, அவருடன் 20 பேர் தான் அங்கு இருக்கின்றனர். திருமாவளவனை அடியாள் போல் தி.மு.க., பயன்படுத்துகிறது. கடந்த 2021க்கு பின், திராவிடம் என்பதற்கு முன், 'திருட்டு' என்பதை இணைத்து, 'திருட்டு தி.மு.க.,'வாக்கி விட்டனர். இந்த ஆட்சியில் என்ன சாதனை செய்து விட்டனர்; அதை முறியடிக்கப் போவதாக முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். த.வெ.க., தலைவர் விஜயின் பெயரை சொல்வதற்கே, ஸ்டாலின் பயப்படுகிறார். வி.சி., மற்றும் கம்யூனிஸ்ட் கட்சியினர், தி.மு.க.,வை 'ஊழல் செய்யாத கட்சி' என சொல்வரா? முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, இரண்டு நிமிடம், ஈ.வெ.ரா-மசாமி பற்றி பேசினால், துாக்கு மாட்டிக் கொள்கிறேன். வரும் தேர்தலில், 5,000 கோடி ரூபாயை இறக்கி, ஓட்டுக்கு 2,000 ரூபாய் கொடுப்பர். இவ்வாறு அவர் பேசினார். பொதுச்செயலர் ஆனந்த் பேசியதாவது: தொண்டர்கள் மட்டுமின்றி, பொது மக்களும், இப்போது விசில் அடிக்கின்றனர். அடுத்த முதல்வர் விஜய் தான் என, வாயால் சொன்னால் மட்டும் போதாது. சட்டசபை தேர்தலின்போது கடைசி வரை பூத்தில் இருக்க வேண்டும். ஓட்டுப்பதிவு நாளன்று, கடைசி நேரத்தில், நீங்களும் 20 கள்ள ஓட்டு போட்டுக் கொள்ளுங்கள் என சொல்வர்; அதை செய்யாதீர். உங்களை நம்பியே, சினிமாவில் உச்சத்தை விட்டு, விஜய் வந்திருக்கிறார். அவருக்காக உழைத்து, கைமாறு செய்யவேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 33 )

நரேந்திர பாரதி
ஜன 27, 2026 04:16

அடியாள், கட்டப் பஞ்சாயத்து, போதை விற்பனை, கள்ளச் சாராயம்...யாருக்கு என்ன வேலை தெரியுமோ, அதைத்தான் அவங்ககிட்ட கொடுக்க முடியும் அது சரி, அவரு கூட இருந்தப்ப உன்னோட கண் குருடா போயிடுச்சோ? நீ ஜோசப்புக்கு அடியாள்...அவரு தீயசக்தி அடியாள்...அவ்வளவுதான் வித்தியாசம், தம்பி. ஆக, ஆக, நீங்க ரெண்டு பேருமே தமிழ் நாட்டுக்கு தேவையில்லாத ஆணிகள்தான்


Senthoora
ஜன 26, 2026 17:22

இவர் நல்லவிஷயம் சொன்னார், கூட்டணி என்ற பெயரில் யார், யார் அடியலகவைத்து மாநிலங்களில் ஆட்சி செய்கிறார்கள் என்று சொல்லாமல் சொல்லி இருக்கிறார், விஜய் ஆட்சிக்குவந்தால் ஏலாமணிலத்திலும் ஏர் போர்ட் வரும், ஏன்னா விஜய் சொந்த விமானத்தில்தான் வருவார், யாராவது சொந்த விமானம் வாங்கினால் அவன்தான் இந்தியாவின் பிச்சைக்காரன். மக்கள் பணத்தில் வாங்கியது, அது ஓடிநாளும், ஓடடாவிட்டாலும் வாடகை கொடுக்கணும், பைலட்டுக்கு சம்பளம், போகும் இடத்தில் பார்க்கிங் FEES கட்டணும், இதை எல்லாம் பார்த்தல் விமானத்தின் விலையை விட இவர் வருஷா வருஷம் கட்டணும், பைனலை ஒட்டாண்டி ஆகிவிடுவார்.


பேசும் தமிழன்
ஜன 26, 2026 15:16

அறிவாலயத்தின் எடுபிடி அவர்... எவ்வளவு கூவுகிறாரோ.... அதற்க்கு தகுந்தபடி கூலி கிடைக்கும்.... அதனால் தான் சத்தம் அதிகமாக இருக்கிறது.


ராமகிருஷ்ணன்
ஜன 26, 2026 14:20

திமுகவின் அல்லக்கை அடியாட்கள் கூட்டத்தில் இருந்து வெளியே வந்து விசிலடிச்சான் குஞ்சுகளின் அடியாட்கள் கூட்டத்தில் சேர்ந்த கள்ள நோட்டு பணக்கார அடியாள் சொன்னால் உண்மையாக தான் இருக்கும்.


ஜித்திஸ்
ஜன 26, 2026 13:37

திருமா அடியாட்களின் தலைவர். கூட்டணி தலைவரின் அடியாள் திருமா. இந்த அடியாளிடம் இருந்த நீங்களும் அடியாள். என்ன படித்த பணக்கார அடியாள் நீங்கள்.


Minimole P C
ஜன 26, 2026 15:11

well said.


Ravichandran
ஜன 26, 2026 13:22

தா வே க ஒரு துஷ்ட சக்தி நமது இளைய தாழ்அய்முறையில் சிலர் கன்முடி தனமாக ஆதரவு தருகிறார்கள் . எந்த கொள்கையும் இல்லத கட்சி . விஜய் புலி படத்தில் மறைத்த வரு வாய்க்காக 1.5 கோடி ஐடி பெனால்டி போடப்பட்டுள்ளது . இவர் திமுக்கவை தீய சக்தி என்று சொல்ல அருகதை இல்லை .


ஆகுயர்த்தோன்
ஜன 26, 2026 12:54

அண்ணாமலை சொன்ன மாதிரி மாமனார் உழைப்பில் வாழும் நீ இதை எல்லாம் பேசலாமா என்றாவது நீ உழைத்து இருக்கியா இப்ப தெரிகிறது உனக்கு ஏன் DMK சீட்டு கொடுக்காமல் துரத்தியது என்று


Pandi Muni
ஜன 26, 2026 12:41

ஆட்சி மாறட்டும்


ramesh
ஜன 26, 2026 12:12

என்ன ஆதவ் மைக் கிடைத்தால் என்ன வேண்டுமானாலும் பேசுவியா . டெல்லி இல் நவ துவாரத்தையும் பொத்தி கொண்டு நின்றாயே அதற்குள் மறந்தது விட்டதா . விஜயை பார்த்து ஸ்டாலினுக்கு பயமா. உன்னை எல்லாம் ஒரு ஆளாகவே அவர் நினைக்க வில்லையே . பேசுவதை எல்லாம் இப்போதே பேசிவிடு . தேர்தல் முடிந்த பிறகு இதற்கு எல்லாம் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும்


ramesh
ஜன 26, 2026 12:07

விஜய் எங்களுக்காக எதை விட்டு விட்டு வந்தார் புஸ்ஸி? . இவர் நடித்தால் எங்களுக்கு என்ன ?நடிக்காம இருந்தால் எங்களுக்கு என்ன ?அவருக்கு நாங்கள் என்ன கைமாறு செய்ய வேண்டும் . அவர் இது வரையில் சம்பாதித்த பணத்தில் 1 பைசாவாவது எங்களுக்கு செலவு செய்து இருப்பாரா?


சமீபத்திய செய்தி