உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  துாய்மை பணியாளர்கள் பெயரில் பணம் பறிக்க தி.மு.க., திட்டம்: மத்திய அமைச்சர் முருகன்

 துாய்மை பணியாளர்கள் பெயரில் பணம் பறிக்க தி.மு.க., திட்டம்: மத்திய அமைச்சர் முருகன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய அமைச்சர் முருகன் அறிக்கை: மாநகராட்சி துாய்மை பணியாளர்களுக்கு, தினமும் மூன்று வேளை இலவச உணவு திட்டத்தை, இம்மாதம், 15ம் தேதி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைப்பதாக, தி.மு.க., அரசு அறிவித்துள்ளது. தனியார் மயமாக்கலை எதிர்த்து, 13 நாட்களாக போராடிய துாய்மை பணியாளர்களை, நள்ளிரவில் தி.மு.க., அரசின் காவல்துறை கைது செய்தது; அவர்கள் பல வழிகளில் போராடிக் கொண்டு இருக்கின்றனர். தனியாருக்கு தாரை வார்த்ததால், மாதம், 23,000 ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கிய பணியாளர்கள், 16,000 ரூபாய் சம்பளம் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். கோபத்தில் உள்ள அவர்களை திசை திருப்ப மூன்று வேளை உணவு என்ற நாடகத்தை, தி.மு.க., அரங்கேற்றுகிறது. 'கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன்' என, முழு மூச்சாக காலத்தை கடத்தும் தி.மு.க., அரசு, எப்படி உணவு வழங்கும் என்பதை சொல்லவா வேண்டும்? துாய்மை பணியாளர்களின் பணிகளை, வேண்டப்பட்ட தனியார் நிறுவனங்களுக்கு தாரை வார்த்து விட்ட தி.மு.க., அரசு, உணவு தயாரிக்கும் பணியையும் வேண்டப்பட்ட நிறுவனங்களுக்கு வழங்க, 'டெண்டர்' கோரி இருப்பதாக தெரிகிறது. மொத்தத்தில், துாய்மை பணியாளர்களின் பெயரை சொல்லி, ஏமாற்றி பணம் பறிக்க மட்டுமே தி.மு.க.,வுக்கு தெரியும். முதல்வர் ஸ்டாலினுக்கு, துாய்மை பணியாளர்கள் மீது துளிஅளவாவது அக்கறை இருந்தால், விளம்பர மோசடி பிரசாரங்களை கைவிட்டு, நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Appan
நவ 14, 2025 10:54

சர்க்காரியா கமிஷன் ரிப்போர்ட் பதி DMK விஞ்சான ஊழலுக்கு பெயர் போனது. ..இப்பட்டோ செய்வது இவர்களின் வழி,


என்னத்த சொல்ல
நவ 13, 2025 11:04

இதுக்குதான் மத்திய அரசின் எந்த திட்டத்தையும் இங்கு வரவிடுவதில்லை.


Indian
நவ 13, 2025 09:09

தி மு கா வை குறை சொல்பவர்களுக்கு ஒரு தகுதி வேணும் . மொதல்ல தேர்தல்ல நின்னு ஒரு கவுன்சிலர் ஆகிட்டு சொல்லுங்க ./


SUBBU,MADURAI
நவ 13, 2025 08:40

இவருக்கெல்லாம் இணை அமைச்சர் பதவி கொடுத்தது வேஸ்ட் மக்களின் வரிப் பணம் வீண்...


Mario
நவ 13, 2025 08:17

வாக்காளர் திருத்தும் மூலம் கள்ள வோட்டு போட பிஜேபி திட்டம்


பேசும் தமிழன்
நவ 13, 2025 08:52

நீங்கள் இதுவரை போட்டு கொண்டு இருந்த கள்ள ஓட்டுக்களை நீக்க போவதால் தான் உங்களுக்கு இந்த பதற்றம்.... அதனால் தான் உங்கள் விடியாத தலைவர் உளறி கொண்டு இருக்கிறார்.


vivek
நவ 13, 2025 09:03

பேச தகுதி இல்லாத லண்டன் முட்டு சந்து


vivek
நவ 13, 2025 09:03

லண்டன் கள்ள குடியேறி விரட்டபடுவான்


பேசும் தமிழன்
நவ 13, 2025 18:06

நீங்கள் லண்டனில் இருக்கும் போதும்... இங்கே உங்கள் பெயரைப் பயன்படுத்தி கள்ள ஓட்டு போட்டு வருகிறார்கள்.... அதனை நீக்க தான் வாக்காளர் திருத்தம் கொண்டு வரப்படுகிறது.


V RAMASWAMY
நவ 13, 2025 08:13

அவர்கள் எந்த திட்டமானாலும் அதன் நோக்கம் சுரண்டலே


V RAMASWAMY
நவ 13, 2025 08:12

"கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன் சரியான விளக்கம். தி = திருட்டு மு = முதல் க = கலெக் ஷன், கரப்ஷன், கமிஷன் வரை.


பேசும் தமிழன்
நவ 13, 2025 07:22

தூய்மை பணியாளர்கள் கேட்டது பணி நிரந்தரம் மற்றும் சம்பளம்.... அதை கொடுக்காமல்..... சோறு போடுகிறேன் பேர்வழி என்று அவர்களை கேவலப்படுத்த வேண்டாம்.... நீங்கள் வேலையை கொடுத்து அதற்க்கான சம்பளத்தைக் கொடுத்தால்... அவர்களே உணவை ஆக்கி சாப்பிட போகிறார்கள்.


மோகனசுந்தரம்
நவ 13, 2025 06:26

தமிழகத்திற்கு ஒரு பிரயோஜனமும் இல்லாத அமைச்சர் என்றால் அது யார்?


vivek
நவ 13, 2025 07:23

தமிழக அமைச்சர்களை மொத்தமாக இப்படி சொன்னால் எப்படி சுந்தரம்


பேசும் தமிழன்
நவ 13, 2025 07:23

நம்ம விடியல் தான்


V Venkatachalam, Chennai-87
நவ 13, 2025 20:40

இதிலென்ன சந்தேகம்? சட்டையை கிழித்து கொண்டு ஓடிய சாராய யாவாரிதான். அதுக்கு அடிஷனலா இன்னொன்னு இருக்கு. அதுக்கு பேரு பாலிடால் ன்னு சொல்றாங்க.


Ramanujam Veraswamy
நவ 13, 2025 05:14

DMK is known for scientific corruption. After all Karunanidhi is named as Father of Scientic Corruption by Sarkaria Commission.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை