உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திடம் தி.மு.க.,வினர், டிஎஸ்பி பேரம்; அண்ணாமலை "பகீர்"

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த வாலிபரின் குடும்பத்திடம் தி.மு.க.,வினர், டிஎஸ்பி பேரம்; அண்ணாமலை "பகீர்"

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் தி.மு.க.,வினர், டி.எஸ்.பி., பேரம் பேரம் பேச முற்பட்டது போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமலா? என தமிழக பா. ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பி உள்ளார்.அவரது அறிக்கை: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் போலீஸ் ஸ்டேஷனில் வைத்து, இளைஞர் அஜித்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது. இது தொடர்பான வழக்கில், ஐகோர்ட் மதுரைக்கிளை , தி.மு.க., அரசுக்குப் பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குறிப்பாக, மாவட்ட எஸ். பி ஆசிஷ் ராவத்தை, அவசர அவசரமாகக் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியது குறித்துக் கடுமையான கேள்வி எழுப்பியுள்ளது நீதிமன்றம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=5s5hnaax&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இளைஞர் அஜித் குமாரை, முதல் தகவல் அறிக்கை கூடப் பதியாமல், தனிப் படை எப்படி விசாரித்தது? ராமநாதபுரம் சரக போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதி கொடுத்தார்களா? அல்லது அவர்களுக்குத் தெரியாமல், தனிப்படை விசாரித்ததா? அப்படியானால், போலீஸ், உயர் அதிகாரிகள் கட்டுப்பாட்டில் இல்லையா?ஊராட்சித் தலைவரின் கணவரான தி.மு.க.,வைச் சேர்ந்த சேங்கைமாறன், தி.மு.க.,வைச் சேர்ந்த மகேந்திரன், திருப்புவனம் தி.மு.க., நகரச் செயலாளர் காளீஸ்வரன் ஆகியோருடன், மானாமதுரை டி.எஸ்.பி.,யும் சேர்ந்து, உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினருடன் பேரம் பேச முற்பட்டது போலீஸ் உயர் அதிகாரிகள் அனுமதி இல்லாமலா?மானாமதுரை டி. எஸ்.பி., சண்முக சுந்தரம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். ஆனால், மாவட்ட எஸ். பி., ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி ஆகியோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை ஏன்? இளைஞர் அஜித் படுகொலை வழக்கிலிருந்து, போலீஸ் உயர் அதிகாரிகளைக் காப்பாற்ற தி.மு.க., அரசு முயற்சிக்கிறதா?https://x.com/annamalai_k/status/1939984601696579841?t=amJXmHjD5JNVDFNh7OOXYQ&s=19இளைஞர் அஜித்குமாரை, சீருடை அணியாத சிலர், கடுமையாகத் தாக்கும் காணொளியைப் பார்க்கவே மனம் பதைபதைக்கிறது. இனி போலீசார் மீது மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும்? இந்த வழக்கு தொடர்பாக, மாவட்ட எஸ். பி., ஆசிஷ் ராவத் மற்றும் ராமநாதபுரம் டி.ஐ.ஜி., மூர்த்தி உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகளும் விசாரணைக்கு உள்ளாக்கப்பட வேண்டும். ஐகோர்ட் மதுரைக்கிளை கூறியிருப்பதைப் போல, அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட வேண்டும். கண்துடைப்புக்காகப் பணிமாற்றம் செய்து மக்களை ஏமாற்றி விடலாம் என்று தி.மு.க., அரசு நினைத்தால், அந்த எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Kasimani Baskaran
ஜூலை 02, 2025 03:59

தீம்க்கா வைத்ததுதான் சட்டம். ஊராட்சித்தலைவருக்கு ஒருவரை காவல்துறையை வைத்து கொலை செய்யக்கூட அதிகாரம் என்றால் அந்த சாருக்கு எவ்வளவு அதிகாரம் இருந்திருக்கும்? சம்பந்தப்பட்ட பெண்ணை உயிருடன் விட்டதே தமிழக முன்னோர்கள் செய்த நல்ல காரியத்தால்தான்.


திகழ்ஓவியன்
ஜூலை 01, 2025 23:02

பெண்ணை கொன்று உடலை கூட கொடுக்காமல் எரித்து சாம்பல் பொட்டலம் கொடுத்த ஆட்சி போல இங்கு இல்லை


Ramesh Sargam
ஜூலை 01, 2025 21:11

வரும் நாட்களில் வேறு ஒரு அவல நிகழ்வு ஏற்பட்டபின்பு, இந்த நிகழ்வு மறந்து போகும். இதுவும் கடந்து போகும் என்று சொல்வார்கள் அதுபோல.


Ramesh Sargam
ஜூலை 01, 2025 20:03

நடக்ககூடாதது நடந்துவிட்டது. இதுதான் திமுக ஆட்சி ஏற்றபின் நடந்த முதல் விவகாரமா. நான்கு வருடங்களாக காவல் நிலையங்களில் நடக்ககூடாததுதான் நடந்துகொண்டு வருகிறது. அதை தடுக்க துப்பில்லை மாநில முதல்வருக்கு. பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினரிடம் விசாரிப்பதுபோல பேரம் பேசுகிறார்.


சமீபத்திய செய்தி