உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / டவுட் தனபாலு: புகையிலை பொருட்களை விற்ற 6,500 கடைகளுக்கு சீல்

டவுட் தனபாலு: புகையிலை பொருட்களை விற்ற 6,500 கடைகளுக்கு சீல்

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன்:

பள்ளி, கல்லுாரி வளாகங்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில், மாநிலம் முழுதும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்த, 6,500 கடைகள் மூடப்பட்டு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளன.

டவுட் தனபாலு:

நல்ல விஷயம் தான்... ஆனாலும், 'சீல்' வைக்கப்பட்ட, 6,500 கடைகளில் எத்தனை கடைகள், அபராதம் கட்டியோ அல்லது கட்டாமலோ மீண்டும் திறக்கப்பட்டுள்ளன...? அவற்றில் மீண்டும் புகையிலை பொருட்கள் விற்பனை நடக்கலை என்பதை எல்லாம் அமைச்சர் உறுதிப்படுத்தினாரா என்ற, 'டவுட்' வருதே!---

அ.தி.மு.க., பொதுச் செயலர் இ.பி.எஸ்.,:

எங்களுக்கு எஜமானர்கள் தமிழக மக்கள். அவர்கள் தான் எங்களுக்கு ஓட்டளிக்கின்றனர். அவர்கள் குரல் பார்லிமென்டில் ஒலிக்க, கட்சி நடத்துகிறோம். பதவிக்காக, நாங்கள் அடிமையாக இருந்ததில்லை. மக்களுக்கு சேவை செய்வது தான் எங்கள் நோக்கம்.

டவுட் தனபாலு:

எல்லா கட்சிகளுமே, 'மக்களுக்கு சேவை செய்வதே எங்கள் கொள்கை' என்று தான் முழங்குகின்றன... ஆனா, நிஜத்தில் எந்த அரசியல் கட்சியாலும், மக்களுக்கு எந்த சேவையும் கிடைக்கலை என்பது தான், 'டவுட்'டே இல்லாத உண்மை!---

பா.ஜ.,வைச் சேர்ந்த ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார்:

டில்லிக்கு சென்று விவசாயிகள் போராட்டம் நடத்துவதில், எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. அவர்கள் போராடும் விதத்தில் தான் பிரச்னை உள்ளது. டிராக்டர், லாரிகளில் சென்று போராடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

டவுட் தனபாலு:

ராஜஸ்தான், பஞ்சாப் மாநிலங்கள்ல இருக்கிற விவசாயிகள் எல்லாம், நடந்தே டில்லிக்கு போய் போராட்டம் நடத்தணும்னு சொல்ல வர்றீங்களா...? அப்படி அவங்க பாதயாத்திரையா டில்லி போய் சேர்றதுக்குள்ள, லோக்சபா தேர்தலே முடிஞ்சிடும் என்பதில், 'டவுட்'டே இல்லை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

shyamnats
பிப் 17, 2024 11:58

புகையிலை மட்டுமே போதை , டாஸ்மாக் சரக்கு உடலுக்கும் மனதுக்கும் ஊட்டம் தரும் சத்துணவு என்றே அரசு கருதுவதாக தோன்றுகிறது. மது விற்பனையை அதிகப்படுத்த அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அப்படியிருக்கிறது. அரசு விற்பனையை மட்டும் கட்டுப்படுத்துகிறது. ஆனால் மது உற்பத்தியையும் தனியாரிடம் இருந்து பிடுங்கி அரசே நடத்தலாம் வருமானம் நேரடியாக அரசுக்கே போய்ச் சேரும்.


Indhiyan
பிப் 17, 2024 06:42

எல்லாரும் சாராயம் குடிக்கலாம். விஸ்கி, பிராண்டி, ரம், பீர் இதெல்லாம் குடிக்கலாம். அரசே ஊத்தி ஊத்தி குடுக்கும். புகையிலை கூடாது. இப்படிக்கு வெக்கம் கெட்ட திமுக அரசு. காலேஜில் இருந்து கொஞ்சம் தள்ளி டாஸ்மாக் இருந்தால் மாணவர்களுக்கு பீர் வாங்க தெரியாது?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை