ஒரு நாளில் படிப்பு பாதிக்காது என்கிறார் துரைமுருகன்
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் மோசூர் அரசு தொடக்கப்பள்ளி, சூரை அரசு உயர்நிலைப்பள்ளி, மாம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி ஆகிய இடங்களில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடந்தது . இதனால் மாணவர்கள், அவதியடைந்தனர். இதற்கிடையே, குமணன் தாங்கலில் உள்ள அரசுப் பள்ளியிலும், முகாம் நடந்தது. இதில், பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டி: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, அரசு பள்ளி திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் அரசு பள்ளியில் நடைபெறுகிறதே என கேட்கிறீர்கள். ஒரே நாளில், அப்படி எதுவும், பள்ளியில் பாடம் நடந்து விடாது. இதனால் மாணவர்களுக்கு கல்வியில் இடையூறு ஏற்படாது . இவ்வாறு அவர் கூறினார்.