உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : ஊழியர் சங்கம் எதிர்ப்பு

காலி மது பாட்டில்கள் திரும்ப பெறும் திட்டம் : ஊழியர் சங்கம் எதிர்ப்பு

சென்னை: காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் நடத்திய, 'டாஸ்மாக்' நிர்வாகம் நடத்திய பேச்சில், ஒரு தொழிற்சங்கம் கூட ஆதரவு அளிக்கவில்லை. இதனால், அத்திட்டத்தை செயல்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது. தமிழக அரசின், 'டாஸ்மாக்' நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக, பீர் மற்றும் மது வகைகளை விற்கிறது. மதுவை அருந்தி விட்டு காலி பாட்டில்களை, வனம், மலை பகுதிகள், சாலையில் துாக்கி வீசுகின்றனர். இதனால், கண்ணாடி பாட்டிலை மிதித்து, கால்நடைகள் பாதிக்கப்படுகின்றன. எனவே, காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்த, டாஸ்மாக்கிற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இத்திட்டம் தற்போது, 15 மாவட்டங்களில் உள்ள மது கடைகளில் செயல்பாட்டில் உள்ளது. இது விரைவில், அனைத்து மாவட்ட மது கடைகளிலும் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு, மது கடைகளில் பணிபுரியும் பணியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதனால், திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக, 15க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களுடன், டாஸ்மாக் அதிகாரிகள், சென்னையில் கடந்த இரு தினங்களாக பேச்சு நடத்தினர். ஒரு சங்கம் கூட ஆதரவு அளிக்கவில்லை. எனவே, இத்திட்டத்ததை செயல்படுத்துவது கேள்விக்குறியாகி உள்ளது.

இதுகுறித்து, தொழிற்சங்கத்தினர் கூறியதாவது:

மது கடைகளில், மாலை முதல் இரவு வரை கூட்டம் அலைமோதுகிறது. அந்த சமயத்தில் காலி பாட்டில்களை திரும்ப பெறுவது சிரமம்; கடைகளிலும் போதிய இடவசதி இல்லை. எனவே, இந்த பணியில் பணியாளர்களை ஈடுபடுத்த கூடாது என்று, டாஸ்மாக் அதிகாரிகளிடம் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டு விட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Muthukumaran Ilankumani
செப் 20, 2025 20:21

மதுவிலக்கு கொண்டு வந்தால் எங்களுக்கு எப்படி காசு பணம் கிடைக்கும்?? டமிலன் மது மயக்கத்தில் இருந்தா தான் எங்களுக்கு ஓட்டு போடுவான்... திருந்தி வேலைக்கு போனால் எங்களுக்கு ஓட்டு போட மாட்டான்...... திராவிட தலைகள் மைண்ட் வாய்ஸ்....


Jothivel C
செப் 17, 2025 23:56

கொஞ்சமாவது அதிகாரிகளும் சரி நீதி யார் மாண்புமிகு நீதிபதி ஐயா அவர்களும் சரி மாலை 6மணிக்கு மேல் கடைகளில் ஆய்வு செய்து பாருங்கள் அவர்களின் சிரமம் தெரியவரும். நீதிபதி ஐயா அவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என்றாலும் அதிகாரிகளுக்கு நன்றாகவே தெரியும் இருப்பினும் அரசிடம் அவர்கள் நல்ல பெயர் வாங்குவதற்காக ஊழியர்களை படியாக்கம் பார்க்கிறார்கள்.


spr
செப் 17, 2025 18:53

"காலி மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, தொழிற்சங்கங்களுடன் நடத்திய, டாஸ்மாக் நிர்வாகம் நடத்திய பேச்சில், ஒரு தொழிற்சங்கம் கூட ஆதரவு அளிக்கவில்லை" இதில் வேறு ஏதோ "உள்குத்து" இருக்கிறது. குடிக்கும் குப்பனிடம் 10 காலி மது பாட்டில்களை ஒரு குறிப்பிட்ட அரசுக்கு கிடங்கில் திரும்பக் கொடுத்தால், இன்னும் ஒரு 100 மி லி இலவசமாகக் கிடைக்குமென்றால், அவனே செய்வான் இதில் என்ன பிரச்சினை. அந்தக் கிடங்கை நிர்வகிக்க அதிகம் படிப்பறிவு தேவையில்லை. படிக்காதவர், வயதானவர் சிலரை நியமிக்கலாம் அவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும் அரசு விளம்பரம் செய்து கொள்ளலாமே


Gajageswari
செப் 17, 2025 18:04

பாட்டில் மேல்₹50 அதிகம் வைத்து விற்க வேண்டும். அப்போது பாட்டில் திரும்பி வரும் அதில் தனியாக ஆட்கள் நியமனம் செய்யலாம்


chandrakumar
செப் 17, 2025 16:55

பாட்டில் ஒன்றுக்கு பத்து ரூபாய் வாங்கும் போது மட்டும் இனிக்குதோ? வேலைசெய்ய கசக்கு தாக்கும்....


Vasan
செப் 17, 2025 09:51

மதுவை மண் பாட்டிலில் கொடுக்கலாமே.


Nation First
செப் 17, 2025 08:27

பொருளாதாரத்தில் பின் தங்கிய பீகாரில் பெண்மணிகளின் கோரிக்கையை ஏற்று 2013ம் ஆண்டிலிருந்து மது விலக்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மதுவிலக்கு அமல் படுத்துவதில் என்ன பிரச்னை ?


Suppan
செப் 17, 2025 16:04

நாங்க எவ்வளவு சாராயத் தொழிற்சாலைகளை திறந்திருக்கோம். அவைகளையெல்லாம் மூடச்சொல்றீங்களா? எங்களை நம்பி எவ்வளவு அரசியல்வாதிகள், கட்சிகள். குடிகாரர்கள் இருக்கின்றனர். ஒட்டு மொத்த தமிழகத்தையும் குடிகார மாநிலமாக்க எங்கள் விடியல் உறுதி பூண்டுள்ளார். இந்த வருமானத்தை நம்பி எவ்வளவு இலவசங்களை விடியல் அள்ளித்தெளிச்சிருக்கிறார் என்று தெரியுமா? பொசுக்குன்னு சொல்லீட்டிங்களே


duruvasar
செப் 17, 2025 08:16

அவர்களே சொல்வது சரியே ஒரே சமயத்தில் இரு கலெக்ஷனை சரிவர செய்யமுடியாது. லாபம் தரும் செயலை மட்டும்தான் செய்யமுடியும். இந்த வேலையை ம.செ கண கச்சிதமாக செய்வார்களே .


Subburamu K
செப் 17, 2025 07:06

Employees union cannot decide the collecting the empty bottles. But at the same time they can demand more perks. First of all, government must stop selling liquor directly, Retail outlets may be given to private traders with strict rules. Tasmac employees may be given license to start retail outlets


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை