உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; தினமலர் செய்தியை குறிப்பிட்டு இ.பி.எஸ்., மீது ஸ்டாலின் தாக்கு

காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; தினமலர் செய்தியை குறிப்பிட்டு இ.பி.எஸ்., மீது ஸ்டாலின் தாக்கு

சிவகங்கை: இன்னொரு கட்சித் தலைவரின் அறிக்கையை இ.பி.எஸ்., காப்பி அடித்து அறிக்கை வெளியிடுகிறார் என சிவகங்கை அரசு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசினார். அவர் குறிப்பிட்ட அந்த செய்தி, தினமலர் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.சிவகங்கையில் மருது சகோதரர்களுக்கு ரூ.1 கோடியில் சிலை அமைக்க முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது: சிவகங்கை மண்ணுக்கு வீரமும், புகழும் உண்டு. வீரமும், விவேகமும் விளைந்த மண் சிவகங்கை. ஒவ்வொரு மனிதரையும் நாடிச் சென்று உதவுவது தான் திராவிட மாடல் அரசு, எல்லோருக்கும் எல்லாம் என்று பார்த்து, பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fuj93fxf&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0ஒவ்வொருவரின் குடும்பத்திலேயும் அண்ணனாக, தம்பியாக, தந்தையாக நண்பனாக இருக்கிறேன். சிவகங்கை மாவட்டத்தில் மகளிர் உரிமைத் திட்டத்தால் 2.38 லட்சம் பேர் மாதந்தோறும் 1000 ரூபாயை பெறுகின்றனர். திருப்பத்தூரில் புதிய கூடுதல் கலெக்டர் அலுவலகம் கட்டப்படும். திருப்பத்தூரில் ரூ.50 கோடி செலவில் புதிய புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடியில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் புதிய மாநகராட்சி அலுவலகம் கட்டப்படும். மத்திய அரசின் ஓரவஞ்சனைகளை மீறித்தான் தமிழகத்தை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்கிறோம். பாவம் இ.பி.எஸ்.; இன்னொரு கட்சித்தலைவரின் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுகிறார்... படிக்கிறார்... பேசுகிறார்...பிரபல நாளிதழ், தங்கள் இணையதள பக்கத்தில், இ.பி.எஸ்., காப்பி அடித்த அறிக்கையை செய்தியாக வெளியிட்டு விட்டார்கள். காப்பி, பேஸ்ட் அறிக்கையை வெளியிடுவதன் மூலமே இ.பி.எஸ். குற்றச்சாட்டுகள் எப்படிப்பட்டவை என்பது தெரியும். மற்றொரு கட்சியின் அறிக்கையை காப்பி பேஸ்ட் செய்து வெளியிடுகிறார் இ.பி.எஸ்.இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார். நாளிதழ் பெயர் குறிப்பிடாமல், அதன் இணைய பக்கத்தில் வெளியானது என முதல்வர் ஸ்டாலின் பேசியது குறிப்பிடத்தக்கது.

இதுதான் அந்த காப்பி பேஸ்ட் அறிக்கை

காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை; மாட்டிவிட்ட இ.பி.எஸ்., அட்மின் என்ன ஆவார்? என்ற தலைப்பில், தினமலர் இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டது. இதை பார்க்க, கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்.https://www.dinamalar.com/news/tamil-nadu-news/the-copy-paste-report-betrayed-what-will-happen-to-the-eps-admin-who-got-stuck-/3834603காட்டிக் கொடுத்தது காப்பி பேஸ்ட் அறிக்கை என்ற தலைப்பில் தினமலர் சமூக வலை தளப்பக்கத்திலும் வெளியிடப்பட்டு இருந்தது. இதனை காண கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும்,பேஸ்புக்https://www.facebook.com/photo.php?fbid=1126348076203840&set=pb.100064859731256.-2207520000&type=3இன்ஸ்டாகிராம்: https://www.instagram.com/p/DFCTaLZSPGC/எக்ஸ் வலைதளம் (டுவிட்டர்) - https://x.com/dinamalarweb/status/1881214991036199245/photo/1


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 24 )

என்றும் இந்தியன்
ஜன 22, 2025 17:33

குழந்தாய் துண்டுசீட்டு ஸ்டாலின் நீ டாஸ்மாக்கநாட்டின் முதல்வரா இல்லை என்னவென்றே தெரியவில்லை . நீ செய்யும் ஒவ்வொரு காரியமும் முதல்வர் பதவிக்கு லாயக்கில்லை என்று தெள்ளத்தெளிவாகத் தெரிகின்றது. முதல்வரின் வேலை ஜன சேவை Infrastructure, Industry, Logistics related, Loanless budget துண்டு சீட்டு உளறல் சேவை அல்லவே அல்ல. எப்போ பார்த்தாலும் இங்கே ஒரு சிலை அங்கே ஒரு நூலகம் இதனால் டாஸ்மாக்கினாட்டு மக்களுக்கு என்ன ஆதாயம்???தயவு செய்து இந்த உருப்படாத நாடகத்தை நிறுத்தி விட்டு நாட்டு மக்களுக்கு மேலே சொன்னவற்றில் கவனம் செலுத்தி நல்லதை செய்யவும்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜன 22, 2025 20:11

பிரதமர், முதல்வர் உட்பட மத்திய காபினெட், இணை அமைச்சர்கள் மற்றும் மாநில அமைச்சர்கள் யாருக்கும் விஷயம் தெரிந்து, பொறுப்புணர்ந்து பணி செய்யவேண்டிய அவசியமே இல்லை. கையெழுத்துப் போடுவது மட்டுமே அவர்கள் வேலை. கூடுதல் பொறுப்பாக விமான நிலையங்களில் வெளிவாயிலில் பேட்டி கொடுப்பதைச் சொல்லலாம். அதிகாரிகள்தான் முடிவெடுப்பார்கள்.. தற்குறிகள் கவுரவமான பெரும்பதவிகளை அலங்கரிக்க இதுவே காரணம். இந்திய ஜனநாயகத்தில் உள்ள விசித்திரமான அம்சம் இது.. இதற்கு நீங்கள் யாரையாவது குறை சொல்லவேண்டும் என்றால் இப்படி ஒரு அரசியல் சட்டம் தந்ததற்காக குழுவின் தலைமைப் பொறுப்பேற்ற அம்பேத்கரைத்தான் சொல்லவேண்டும்...


என்றும் இந்தியன்
ஜன 22, 2025 17:10

இது தான் அந்த அறிக்கை இதை காப்பி பேஸ்ட் செய்ததாக துண்டுசீட்டு சொல்கின்றார் அண்ணாமலை அண்ணாமலை_கே புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியைச் சேர்ந்த, மாவட்ட அமெச்சூர் கபடி கழகச் செயலாளரும், சிறந்த சமூக ஆர்வலருமான திரு. ஜெகபர் அலி அவர்கள், கனிம வளக் கொள்ளையர்களால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில், மோடி கபடி லீக் போட்டிகள் சிறப்பாக நடைபெற, முக்கிய பங்காற்றியவர் திரு. ஜெகபர் அலி அவர்கள். இயற்கை வளப்பாதுகாப்பு, கனிமவளங்களின் கொள்ளையைத் தடுப்பது உள்ளிட்ட பல்வேறு தளங்களில் அக்கறையுடன் செயல்பட்டவர். கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் பலி கொடுத்திருக்கிறார்கள். இயற்கை வளங்களைக் காக்க வேண்டும் என்ற உயரிய எண்ணத்தில் பாடுபட்டவர் உயிரை எடுக்குமளவுக்கு. தமிழகத்தில் சமூக விரோதிகளுக்கும். கொள்ளையர்களுக்குமான ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசு அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் எனக் கனிமவளக் கொள்ளையைத் தடுக்க முயன்றவர்கள் கொல்லப்படுகிறார்கள் என்றால், ஆட்சிக்கு வந்த பத்தாவது நிமிடத்தில் மணல் கொள்ளைக்குச் செல்லலாம் என்று கூறியே ஆட்சிக்கு வந்த திமுக கொடுத்த தைரியம் இன்றி வேறென்ன? கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. திரு. ஜெகபர் அலி அவர்கள் இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை மடைமாற்றலாம் என்ற எண்ணம் இருந்தால், மிக மோசமான விளைவை திமுக அரசு எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கிறேன்.


Barakat Ali
ஜன 22, 2025 16:08

மலர் கூட்டணிக்கு கோர்த்து உடுற வேலை பார்க்குதா ...... கிக்கிக்க்கி .....


தமிழ் மைந்தன்
ஜன 22, 2025 15:32

உனக்கு துதி பாடினால் குவாட்டர் உண்டா ?


Shekar
ஜன 22, 2025 15:29

இங்கே என்ன வாழுது. யாரோ எழுதி கொடுப்பதை, மனப்பாடம் செய்ய முடியாமல் துண்டு சீட்டு பார்த்து வாந்தி எடுக்கிறோம்


selva
ஜன 22, 2025 14:38

ஒரு தலைவர் சொல்லுகின்ற கருத்துக்கு மற்றொரு தலைவர் உடன்படும்போது அதே கருத்தை கூறுவதில் என்ன தவறான புரிதலை மக்களுக்கு விளக்கம் அளிக்க தங்கள் நாளிதழ் தெளிவு படுத்து கின்றது


ஆரூர் ரங்
ஜன 22, 2025 14:30

ஸ்டிக்கர் திருடன் காப்பி பற்றி கமன்ட் அடிக்கலாமா?


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2025 14:00

தமிழை காட்டுமிராண்டி மொழி என்று சொன்ன பெறியாரை தூக்கிப்பிடிக்கும் திராவிட வந்தேறிகள் வெளியேறனும் .....


Kumar Kumzi
ஜன 22, 2025 13:47

ஓங்கோல் கூமுட்ட காப்பி பேஸ்ட் உண்மை தான் ஆனால் செய்தி உண்மை தானே


RAMAKRISHNAN NATESAN
ஜன 22, 2025 15:33

இந்த ஓசிமுடி கூமுட்ட ஸ்டிக்கர் ஓட்டுவது மட்டும் சரியா ????


jayvee
ஜன 22, 2025 13:39

EPS மிகப்பெரிய புத்திசாலி ...அண்ணாமலை சொன்னதை அப்படியே சுட்ட அட்மின்தான் இதற்க்கு காரணம் என்று சொல்லி தப்பித்துவிடுவார்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை