உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையில் இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் ஆலோசனை: விருந்திலும் பங்கேற்பு

நெல்லையில் இபிஎஸ் - நயினார் நாகேந்திரன் ஆலோசனை: விருந்திலும் பங்கேற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருநெல்வேலி: நெல்லை சென்றுள்ள அதிமுக பொதுச் செயலர் இபிஎஸ், நயினார் நாகேந்திரனை, அவரது வீட்டில் சந்தித்து தனியாக ஆலோசனை நடத்தினார்.அதிமுக -பாஜ இடையே கடந்த ஏப்ரல் மாதம் கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இரு கட்சிகளுக்கும் இடையே உள்ள நெருடல் மற்றும் முரண்பாடுகளை களையும் விதமாக , 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' என்ற பெயரில், தமிழகம் முழுதும் பிரசார பயணம் மேற்கொள்ளும் இபிஎஸ்- ஐ தன் வீட்டுக்கு வரவழைத்து விருந்து வைக்க முடிவெடுத்து, அதற்கான ஏற்பாடுகளை செய்தார் தமிழக பா.ஜ., தலைவர் நாகேந்திரன். இதனை இபிஎஸ் ஏற்றுக்கொண்டார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yceko9h2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேற்று முன்தினம் கோவில்பட்டியில் நடந்த பிரசார பயணத்திலும் நயினார் நாகேந்திரன் பங்கேற்று பேசினார். இந்நிலையில், இன்று இரவு இபிஎஸ் நயினார் நாகேந்திரன் வீட்டுக்கு சென்றார். அங்கு மாடியில் உள்ள தனியறையில் இருவரும் தனியே ஆலோசனை நடத்தினர். கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாக தெரிகிறது.இதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்து நடத்தப்பட்டது. இதில் பாஜக முக்கிய தலைவர்கள் தமிழிசை, பொன் ராதாகிருஷ்ணன், மத்திய அமைச்சர் முருகன், அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் வேலுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
ஆக 04, 2025 06:58

நல்லா வயிறார சாப்புடுங்கோ....


vivek
ஆக 04, 2025 07:48

அதுல மிச்சம் ஏதும் உனக்கு கிடைக்கலையா கோவாலு


மோகனசுந்தரம்
ஆக 04, 2025 06:39

எப்படி இருந்த பிஜேபியை இப்படி ஆக்கிவிட்டார் நைனார் நாகேந்திரன். நாகேந்திரன் பழனியாண்டியின் கை பாவை ஆகிவிட்டார். இனி பிஜேபி கரை ஏறுவது மிக மிக கடினம் நோட்டாவின் கீழ் தான் செல்லும்.


Haja Kuthubdeen
ஆக 04, 2025 10:49

முதலில் மட்டும் நாற்பதுக்கு நாற்பதில் ஜெயித்துட்டு இப்ப ரொம்ப பலகீனமாகி விட்டதா நினைப்பா? கூட்டணி கட்சி தலைவரையே எதிர்த்து பேசனும் பத்திரிக்கையில் பறபறப்பா செய்தி வரனும். அதானே ஆச..


Kasimani Baskaran
ஆக 04, 2025 03:59

மோடியே இவர்களுக்கு தண்ணீர் தெளித்துவிட்டார் என்றுதான் தோன்றுகிறது. பங்காளிகளை ஜெயிக்க வைக்க தீவிரமாக உழைக்கும் இதுகளால் தமிழகத்துக்கு நன்மை எதுவும் கிடையாது.


Murugesan
ஆக 03, 2025 23:23

தமிழக பாஜகவை இனி எந்த ஜென்மத்திலும் வெற்றிபெற முடியாத அளவுக்கு கொண்டு சென்று விட்டனர் , பாஜக தொண்டர்களும் , மக்களும் இந்த சந்தர்ப்ப வாத ஒட்டு போட மாட்டாங்க,


T.sthivinayagam
ஆக 03, 2025 22:38

இருவரும் முன்னாள் முதலமைச்சர் ஜெயல்லிதாவல் தண்டிக்கபட்டவர்கள் காரணம் மக்களுக்கு தெரியும்


Ramesh Sargam
ஆக 03, 2025 22:13

இந்த விருந்தும், மருந்தும் நாளை இவர்கள் கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் தொடரவேண்டும். தொடருமா? இல்ல புட்டுக்குமா. அப்படி புட்டுக்கொண்டால், திமுக காட்டில் மீண்டும் மழை. அந்த மழை வராமல் இவர்கள் பார்த்துக்கொள்ளவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை