உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாய் கூட பட்டம் வாங்குது; பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை: திமுக., ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை

நாய் கூட பட்டம் வாங்குது; பட்டப்படிப்பு திராவிட இயக்கம் போட்ட பிச்சை: திமுக., ஆர்.எஸ்.பாரதி சர்ச்சை

சென்னை: ''இப்போது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை'' என சர்ச்சைக்குரிய வகையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியுள்ளார்.நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், நீட் தேர்வு மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திமுக மாணவரணி சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய பா.ஜ., அரசு கண்டித்து இன்று (ஜூலை 3) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது: https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ndfrp711&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த ஆர்ப்பாட்டம் இந்தியாவின் கவனத்தை ஈர்க்கக் கூடிய வகையில் அமைந்திருக்கிறது. பார்லிமென்டில் நீட் தேர்வு குறித்து விவாதிக்க வேண்டும் என்ற குரல் வந்த போது சபாநாயகர் ஒப்புக்கொண்டார். ஆனால் பிரதமர் மோடி பயந்து கொண்டு பதில் சொல்ல எதுவும் காரணம் இல்லாததால், இன்று முடிய இருந்த லோக்சபாவை நேற்று முடித்து வைத்திருக்கிறார். இது திமுக.,விற்கு கிடைத்த வெற்றி.

நல்ல காலம் திரும்புகிறது

நீட் தேர்வை இன்று, நேற்று அல்ல எப்போது அறிமுகப்படுத்தினார்களோ அன்றிலிருந்து எதிர்க்கும் இயக்கம் திமுக. கருணாநிதி, ஜெயலலிதா இருக்கும் வரை தமிழகத்தில் நீட் நுழையவில்லை. ராகுல் இந்த நீட் தேர்வு விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டதை நான் மனமார பாராட்டுகிறேன். நீட் தேர்வு வருவதன் நோக்கமே நம்மை அழிக்க தான். நீட் தேர்வு ஒழுங்காக நடந்ததா? உலகின் அனைத்து முறைகேடுகளும் நீட் தேர்வில் தான் நடத்துள்ளது. ஒரு நல்ல காலம் திரும்பிக் கொண்டிருக்கிறது.

பிச்சை

யாராக இருந்தாலும் இந்த இயக்கத்தோடு போராட வேண்டும் என்ற நிர்பந்தம் வந்துள்ளது. நேற்று கட்சி ஆரம்பித்த விஜய்யாக இருந்தாலும் இதை ஆதரிக்கின்றனர். மக்களுக்கான ஆதரவு யார் கொடுத்தாலும் அதை வரவேற்பவர் தான் முதல்வர் ஸ்டாலின். நான் படித்தபோது பி.ஏ படித்தாலே போர்டு வைத்து கொள்வார்கள். இப்போது நாய் கூட பி.ஏ பட்டம் வாங்குகிறது. எங்கள் பட்டப்படிப்புகள் குலம், கோத்திர பெருமையால் வரவில்லை; எங்கள் பட்டப்படிப்புகள், டாக்டர் பட்டங்கள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை. இவ்வாறு அவர் பேசினார்.

விளக்கம்

பட்டம் பெற்றவர்களை நாய் என்றும், பட்டப்படிப்புகள் திராவிட இயக்கம் போட்ட பிச்சை எனவும் ஆர்.எஸ்.பாரதி பேசியது சர்ச்சையாக வெடித்த நிலையில், தனது பேச்சு குறித்து அவர் கூறுகையில், ''பிச்சை, நாய் என்ற வார்த்தைகளை உள்நோக்கத்துடன் பயன்படுத்தவில்லை; அனைவருக்கும் கல்வி கிடைத்திருப்பதைத் தான் எடுத்துரைத்தேன்.'' என விளக்கம் அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 121 )

RAMKUMAR
ஆக 02, 2024 14:53

அவர் சொன்னது ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச, அப்படி தான சார், சரிதானே? அவர் சொன்னது ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்சவங்கள .


cpraghavvendran
ஆக 02, 2024 11:30

இப்படி பேசுவதுதான் திராவிட நாகரீகம்


karutthu
ஆக 01, 2024 18:28

R S பாரதி இப்படி பேசுவது நாகரீகமல்ல முதல்வர் /தி மு க தலைவர் அவருக்கு வாய் பூட்டு போட்டு அறிவாலயத்தில் ஒSரு ஓரத்தில் உட்காரவைக்கவேண்டும் சட்டம் படித்தவர் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசுவது ஓர் மூன்றாம் தர பேச்சாளர் போல உள்ளது அப்போஆர் எஸ் பாரதி பட்டம் வாங்கியது யார் போட்ட ???


ArGu
ஜூலை 30, 2024 20:07

அவர் சொன்னது ஓட்டு போட்டு ஜெயிக்க வெச்ச நாய்கள என்ன RSB?? சரிதானே ?


skv srinivasankrishnaveni
ஜூலை 24, 2024 08:08

படிப்பே ஏராதவர்களெல்லாம் ஒரு தகுதியும் இல்லாமல் மக்களை வாட்டிவதைக்குதுங்கோ எங்கே முட்டிண்டு அழுவறது .கேவலமா பேசற வாயைக்கிழிக்கணும் சொன்னவரே இதுங்களோட படிப்பே ஏறாத பெரியாருதானே வாயிலே வரதைப்பேசும் இந்த மனுஷங்களிலெல்லாம் நாக்கு இழுத்துண்டு சாவானுங்க ஏழைகள் எல்லாம் நன்னாவே படிச்சு மேலுக்குவந்துடக்கூடாதுன்ற பெரிய மனம் படைச்ச வெத்துவேட்டுக்களே


TSRSethu
ஜூலை 07, 2024 15:02

இது போன்ற ஆட்களை தூக்கிப்பிடிக்கும் திமுக விற்கு ஓட்டு போட்ட தமிழக மக்கள்தான் யோசிக்க வேண்டும். நல்ல வேளை நான் டிப்ளோமா படிப்போட நிறுத்திட்டேன்.


skv srinivasankrishnaveni
ஜூலை 24, 2024 08:12

கரெக்ட்டா சொன்னீங்க குடிகாரணுக்நுகதான் வோட்டுப்போட்டாக ஓட்டுபோட்டவாளுக்கு அரசுதான் கள்ளசாராயம்னு சொல்லுறாங்க குடிவரதுக்கு முன்னாடி குடிகாரனுக்கு பெண்ணே தரவேமாட்டாங்க இது 100%உண்மையைத்தான் ஆனால் இப்போ யாருக்காண்டா பொண்ணுகளும் குடிக்குறாளுகபோல


Mahalingam Laxman
ஜூலை 06, 2024 14:41

Congrats. He frankly and ly and indirectly admits that they have not written exam and passed but the degrees are given as donation PICHCHAI from DMK. So, one can well understand the efficiency of the so-called degree holders.


P.M.E.Raj
ஜூலை 06, 2024 13:44

திமுக ஆட்சியே மக்கள் போட்ட பிச்சை. இதுபோன்ற பேச்சுக்கள் திமுக கோமாளிகளிடமிருந்து வருவது சகஜமே.


peeyesyem
ஜூலை 06, 2024 08:51

He has lost his brain .All are trying to become an educated person so that they can know the happenings in the world.in such case do he want that people should round the pot which was already damaged?


vbs manian
ஜூலை 06, 2024 08:48

அரசியலில் இ ருக்கவே தகுதியில்லை.


மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ