உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கருணாநிதியால் கூட முடியவில்லை; ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,

கருணாநிதியால் கூட முடியவில்லை; ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்கிறார் இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கள்ளக்குறிச்சி: 'எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா ஆட்சியின் போது, அ.தி.மு.க.,வை அழிக்க நினைத்த கருணாநிதியின் அனைத்து முயற்சிகளும் முறியடிக்கப்பட்டது. ஸ்டாலினின் பகல் கனவு ஒருபோதும் பலிக்காது,' என்று அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.உளுந்தூர்பேட்டையில் நடந்த அ.தி.மு.க., பாகக் கிளை நிர்வாகிகளின் கூட்டத்தில் பங்கேற்ற போது அவர் பேசியதாவது; ஸ்டாலின் பகல் கனவு கொண்டிருக்கிறார். எதிர்வரும் 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். நமக்கு பலமான கூட்டணி அமையும். நிர்வாகிகள் கவலைப்பட தேவையில்லை. முதற்கட்டமாக பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளோம். நமது கூட்டணியை பார்த்து முதல்வர் ஸ்டாலின் சட்டசபையில் பதறுகிறார். அவருக்கு பயம் வந்துவிட்டது. கூட்டணி வைக்கும் நோக்கமே, ஓட்டுகள் சிதறாமல் நமது வேட்பாளர் ஜெயிக்க வேண்டும். தி.மு.க., எனும் தீயசக்தி, மக்கள் விரோத அரசை அகற்ற கூட்டணி வைத்துள்ளோம். இன்று எதிர்க்கட்சி வரிசையில் இருப்பவர்கள் பேசுகிறார்கள், 'இ.பி.எஸ்., பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து விட்டார்,' என்று கூறுகிறார்கள். பா.ஜ., அ.தி.மு.க.,வை கபளிகரம் செய்து விடும் என்று சொல்கிறார்கள். அ.தி.மு.க., பொன் விழா கண்ட கட்சி. தமிழகத்தில் 31 ஆண்டுகள் ஆண்ட கட்சி. எந்த கொம்பனாலும் ஏதும் செய்ய முடியாது. எம்.ஜி.ஆர்., இருந்த காலத்திலேயே அ.தி.மு.க.,வை அழிக்க கருணாநிதி பல முயற்சி செய்தார். அத்தனையும் தூள் தூளாக உடைத்தவர் எம்.ஜி.ஆர்.,. அவரது மறைவுக்குப் பிறகு, கருணாநிதி அ.தி.மு.க.,வை அழிக்க முயற்சித்தார். அத்தனை முயற்சிகளையும் ஜெயலலிதா முறியடித்தார். கருணாநிதியாலேயே முடியலை. ஸ்டாலினின் கனவு ஒருபோதும் பலிக்காது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.,வை உடைக்க ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். சில துரோகிகள், எட்டப்பர்கள் தி.மு.க.,வோடு சேர்ந்து ஜெயலலிதா ஆட்சியை கவிழ்க்க நினைத்தார்கள். ஆனால், மக்களின் ஆதரவால், அ.தி.மு.க., ஆட்சி தொடர்ந்தது. இதனை பொறுக்க முடியாமல் ஸ்டாலின் சட்டையை கிழித்துக் கொண்டு வெளியே போனார். அ.தி.மு.க.,வை ஒருபோதும் வீழ்த்த முடியாது. அ.தி.மு.க.,வின் தலைமை பொறுப்பேற்ற இ.பி.எஸ்., 10 தேர்தல்களில் தோல்வியடைந்ததாக ஸ்டாலின் சொல்லுவார். 2011 முதல் 2021 வரையில் எத்தனை தேர்தல்களில் நீங்கள் தோல்வியடைந்தீர்கள் என்பதை எண்ணிப் பாருங்கள். 2011ல் எதிர்க்கட்சி வரிசையில் கூட அமர முடியாத கட்சி தி.மு.க.,. எங்களை விமர்சிக்க எள் அளவு கூட தகுதியில்லை. 2021 தேர்தலில் 525 அறிவிப்புகளை வெளியிட்டீங்க. அதில், எத்தனையை நிறைவேற்றி உள்ளீர்கள். அத்தனையும் பொய்யான வாக்குறுதி. மக்களை ஏமாற்றி, கொல்லைப் புறம் வழியாக தி.மு.க., ஆட்சிக்கு வந்தது. தி.மு.க., ஆட்சிக்கு வந்த பிறகு விலைவாசி உயர்வு, மின்கட்டண உயர்வு, வீட்டுவரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு என வரி மேல் வரி போட்டு மக்களை வாட்டி வதைக்கிறது. பெண்கள், மக்களை ஏமாற்றி வருகிறார் ஸ்டாலின்.ஸ்டாலின் ஆட்சியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றங்கள் நடக்காத நாட்களே இல்லை. போதைப்பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது. ஒரு கேவலமான ஆட்சி இது. பொம்மை முதல்வராக இருக்கும் போது இந்த குற்றங்களை எப்படி கட்டுப்படுத்த முடியும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

சத்தியமூர்த்தி
ஜூன் 30, 2025 06:38

"கொம்பனாலும் அசைக்க முடியாது" என்பது சவடால் பேச்சு. உங்கள் தலைவியே பர்கூரில் தோற்றதை மறக்கவேண்டாம். மாற்றம் தேவை என வாக்காளர்கள் முடிவு செய்து விட்டால் எதுவும் நடக்கும். ஆணவம் வேண்டாம்.


தாமரை மலர்கிறது
ஜூன் 30, 2025 04:31

விரைவில் பிஜேபி தலைமையிலான கூட்டணி வெற்றி பெறும் . எடப்பாடி முதல்வர், நயினார் துணை முதல்வர் ஆவார். ஆட்சியில் அமர்ந்தவுடன், அறநிலை துறை, தொல்லியியல் துறை உடனடியாக மூடப்படும். மும்மொழி கொள்கை கொண்டுவரப்படும். பட்டிதொட்டியெல்லாம் ஏழை எளிய மாணவர்கள் ஹிந்தி பேசும் வாய்ப்பு உருவாகும். தமிழ்நாடு என்ற பெயரை நீக்கி, தக்ஷிண பிரதேஷ் என்ற அழகான தமிழ் நிலத்திற்கு பொருத்தமான பெயர் சூட்டப்படும்.


Thiagarajan
ஜூன் 29, 2025 23:40

அதிமுக வெற்றி நிச்சயமே


Anantharaman Srinivasan
ஜூன் 29, 2025 23:16

MGR ஜெயலலிதா காலத்து அதிமுகவும் இன்றய அதிமுக வும் ஒண்ணா..? கமுதை தேய்ந்து கட்டெறும்பு போலாகிவிட்டதே பழனியப்பா.. ..


V Venkatachalam
ஜூன் 29, 2025 22:44

யாருக்கு பதட்டம் இருக்கோ இல்லையோ முழு நேர க.உ.பி.திகழ் ஓவியனுக்கு பதட்டம் ஜாஸ்தியாவே இருக்கு.


Natarajan Ramanathan
ஜூன் 29, 2025 22:27

அம்மா முதல்வராக இருந்தவரை சட்டசபைக்கே வர அஞ்சி பயந்த தீயசக்தியின் வாரிசு இப்படி எல்லாம் சவால் விடுவது அபத்தமாக இருக்கிறது.


திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 21:56

வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்து உள்ளார். அதிமுகவை எந்த கொம்பனாலும் கபளீகரம் செய்ய முடியாது என்று கூறியுள்ள எடப்பாடி பழனிசாமி, . இது அமித்ஷா விற்கு சொன்னதா


திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 21:47

நீர் இப்படி சொல்லுகிறீர் ஸ்டாலின் இந்தியா லெவெல்க்கு பேமஸ் ஆகி வருகிறார், 3வது மொழியாக பள்ளிகளில் இந்தி..? கடும் எதிர்ப்பால் முடிவை கைவிட்டது மகாராஷ்டிரா பாஜக அரசு அங்கு உள்ளவர்கள் TN போல நாங்களும் ஏற்க மாட்டோம் என்று சொல்லி விட்டார்கள் , இதற்கு ஸ்டாலின் தான் காரணம் என்று ஷா கடுப்பாகி இருக்கிறார்


திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 21:42

இப்படி தான் 2021 அவர் ஜாதகத்தை அலசி அவருக்கு கட்டம் சரியில்லை என்று சொல்லி முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சிக்கு வந்து விட்டார் , இப்ப நீர் பேசும் தகுதி இல்லை , மேலே சொன்னதே கூட நீர் ஷா விடம் பெர்மிஸ்ஸின் வாங்கி விட்டு தான் பேசி இருக்கனும் ,இது தான் உங்க நிலை , ஜூலை 7 ஷா சென்னை வருகிறார் என்றதும் நீர் ஓடுகிறீர் சுற்றுப்பயணம் பாவம் உங்க நிலை


திகழ்ஓவியன்
ஜூன் 29, 2025 21:39

பிஜேபி அமித் ஷா சொல்லுகிறார் STALIN IS MORE DANGEROUS THAAN KALANJAR AND THEIR IT WING AND LEGAL WING STRONGER THAN ANY OTHER PARTY என்று புலம்பல் , ADMK வை அழிக்க தேவை இல்லை , அது அமித்ஷா DMK ஆகி பலமாதம் ஆகிறது , இனி நீங்க என்ன பேசணும் என்று அமித்ஷா சொல்லுவார் , உங்க கூட இருக்கும் வேலுமணி தங்கமணி இருவருக்கும் MONEY பிரச்சனை வரக்கூடாது என்று உங்களை காலி செய்து விட்டார்கள் , இனி ஆண்டவனே வந்தாலும் ஆண்ட கட்சி ADMK காப்பாற்ற முடியாது , ஸ்வாஹா


JAMES
ஜூன் 29, 2025 22:50

மக்களுக்கு நல்லா செய்து இருந்தா பேச தேவை இல்லை மக்கள் மாலை (வாக்கு) போடு வாஙக 2026 வரை தொண்டை தண்ணி வற்றி போக கத்தி கொண்டு இருக்க வேண்டும். MR EPS


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை