வாசகர்கள் கருத்துகள் ( 76 )
The only concern is being in prison itself doesnt determine that he/she is a culprit? If a particular person is found to be guilty be the court, than he/she can be discqualified. Now, the Law is given to Government officers, who can decide wthether a people elected person can continue in office or not. Its agaisnt the spirit of Constitution.
நல்ல சட்டங்களை கொண்டு வர நல்லவர்கள் வேண்டும், இங்கே அவசரமாக கொண்டு வருவதும், மோசமான சட்டங்களை கொண்டு வருவதும் யாருடைய வேலை ? ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் குட்டு வாங்கியதை, வெட்கமேயில்லாமல், மறுபடி அதே வேலைகளை செய்கிறார்கள். கேவலப்பட போகிறார்கள்.
தசரதா. இங்கே விஜய் உங்களுக்கு ஆப்பு வைக்க ரெடி ஆகிட்டாரு
ராஜிவ் வழக்கில் சோனியா சாரி அந்தோனியா மைனாவை விசாரிக்க வேண்டும் ரெடியா
குஜராத்துக்குள்ள அமித்ஷா தலைமறைவா இருந்து கடைசில் பிடிபட்டு ஜெயிலுக்கு போன, அமித்ஸாவுக்கு என்ன யோக்கியதை இருக்கு
பொய்.ராஜினாமா செய்து விட்டு வழக்கை தைரியமாக எதிர் கொண்டவர் ஷா. வழக்கிலிருந்து விடுதலை யான பிறகே மீண்டும் பதவி ஏற்றார்.
தூய்மை இந்தியா திட்டம் இதல்லவோ... கலையெடுக்கும் நல்ல தீர்மானம். என் மோடியை வாழ்த்த வார்த்தைகள் கிடையாது..
பிரதமர் மேல கேஸ் யாரு போடுவா .எத்துணை பிஜேபி முதல்வர் அல்லது கட்சிக்காரர்கள் மீது வழக்கு போட்டுருக்கிறீர்கள் ? எதிர் கட்சி மீது வழக்கு போட வில்லை ?
இந்த சட்டம் அமுலுக்கு வந்தால் அடுத்த நாளே பிஜேபி அல்லாத மாநில முதல்வர்கள் , அமைச்சர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தங்களது பதவி இழந்து விடுவார்களோ என்ற சந்தேகமும் அச்சமும் பெரும்பாலானவர்களுக்கு வருவது இயற்கையே. முதலாவது இது சட்டம் ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினை. சட்டம் ஒழுங்கு எல்லாமே மாநில பட்டியலில் வரும். எனவே ஒரு மாநில காவல்துறை நினைத்தால் மட்டுமே அந்த மாநில முதல்வரையோ அமைச்சரையோ கைது செய்யும். நேரடியாக மத்திய அரசு கைது செய்ய முடியாது. உதாரணத்துக்கு நமது செந்தில் பாலாஜி வழக்கில் காவல்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வரின் நிலைப்பாட்டை ஞாபகபடுத்திக்கொள்ளலாம். இரண்டாவது, தொடர்ச்சியாக 30 நாட்கள் நீதிமன்ற காவலில் இருந்தால் மட்டுமே இந்த சட்டத்தின் பிரிவு செயல்படும். உபயோகப்படுத்தப்படும். இதற்கு காவல்துறை ஒருவரை கைது செய்ய வேண்டும். நீதிமன்றத்தில் கஸ்டடி எடுக்கவேண்டும். சாதாரணமாக கஸ்டடி 14 நாட்கள் கேட்பார்கள், குற்ற பத்திரிகை தாக்கல் செய்யமுடியவில்லை என்றால் இரண்டாவது முறையாக 14 நாட்கள் கேட்பார்கள் . மூன்றாவது முறையாக ஒருவர் மீது நீதிமன்றக்காவல் நீட்டிப்பு இருக்கும் போதுதான் தொடர்ச்சியாக 30 நாட்கள் காவலில் இருந்ததாக சொல்லப்பட்டு இந்த சட்டபிரிவு செயல்படமுடியும். இப்படி மூன்று முறை ஒரு மந்திரி மீதோ , முதலமைச்சர் மீதோ காவல் நீட்டிப்பு செய்யும் அளவுக்கு தனது அதிகாரம் மூலம் நாட்டின் அனைத்து நீதிமன்றங்களையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறதா என்ன ?? மூன்றாவதாக குற்றத்தின் தன்மையை சொல்லியிருக்கிறார்கள். அதாவது குறைந்தபட்சம் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தண்டனை வழங்கக்கூடியவகையில் அவர் குற்றம் புரிந்திருக்கவேண்டும். அந்த குற்றத்திற்காக உண்டான சட்டப்பிரிவின் கீழ் கைதுசெய்யப்பட்டிருக்கவேண்டும். காவலில் இருந்து வெளிவந்தவுடனே அவர் மீண்டும் பழைய பதவியை தொடரலாம். இதில் எங்கே பாரபட்சம் உள்ளது.?? நடைமுறையில் மத்திய அரசு ஒரு மாநில அமைச்சர்மீது உடனே நடவடிக்கை எடுக்கமுடியாது. அதற்கு செந்தில் பாலாஜி வழக்கே சாட்சி. ஆனால் அமித்ஷா , இந்த சட்டத்தில் பிரதமர், மத்திய அமைச்சர், இணையமைச்சர், மாநில முதல்வர் , மாநில அமைச்சர்கள் என்று மட்டுமே சொல்லி உள்ளார். எம்பிக்கள், எம்.எல்.ஏ. க்களை கணக்கில் சேர்க்காமல் விட்டு விட்டார். அப்படி விட்டதுதான் தவறு. அவர்களையும் சேர்த்திருக்கவேண்டும். மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் படி இரண்டு ஆண்டுகள் தண்டனை பெற்ற எம்பி அல்லது எம்.எல்.ஏ. தனது பதவியை இழக்கிறார். ஆனால் இந்த சட்டத்தில் ஒருவரின் பதவி பறிபோகிறது என்றால் அவர் ஐந்து ஆண்டுகள் தண்டனை தரத்தக்க குற்றம் புரிந்தவராக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை மாற்றி இரண்டு ஆண்டுகள் என்று சொல்லியிருக்கவேண்டும். அப்போதுதான் இது ஒரு முழுமையான மசோதா என்று சொல்லலாம். அப்படி சொல்லாமல் விட்டுவிட்டார்கள்.
இது தற்போது உள்ள ஆளும் கட்சிக்கும் பொருந்தும் என்று நீங்கள் ஏன் கருதவில்லை? ஆக, பாஜகதான் நிரந்தர ஆளும் கட்சி என ஒத்துக்கொண்டதற்கு நன்றி.
நம்மாளு யாரோ எழுதி கொடுத்த வசனத்தை ஒப்பிக்கிறார் என்பது மிகவும் தெளிவு
இந்த நாட்டுக்கு இது மிகவும் அவசியமான சட்டம்னு புருஞ்சிக்கலாம்