உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வயதை மாற்றி போலி ஆதார் தயாரிப்பு; திருப்பூரில் ஜார்க்கண்ட் சிறுமியர் மீட்பு

வயதை மாற்றி போலி ஆதார் தயாரிப்பு; திருப்பூரில் ஜார்க்கண்ட் சிறுமியர் மீட்பு

திருப்பூர்: போலி ஆதார் தயாரித்து, ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து, திருப்பூருக்கு குழந்தை தொழிலாளராக பணிபுரிய அனுப்பப்பட்ட ஐந்து சிறுமியர், ரயில்வே ஸ்டேஷனில் மீட்கப்பட்டனர்.கேரளா செல்லும் ரயிலில், கடந்த 6ம் தேதி பயணித்த, ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஐந்து சிறுமியர், திருப்பூர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கினர். ரயில்வே போலீசார், சிறுமியரின் ஆதார் கார்டை பரிசோதித்ததில், 18 வயது பூர்த்தியானது போன்று பிறந்த தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. ஆதார் கார்டு க்யூ.ஆர்., கோர்டை ஸ்கேன் செய்தபோது, ஸ்கேன் ஆகவில்லை.இது குறித்து, ரயில்வே போலீசாரின் தகவல்படி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், ஐந்து சிறுமியரிடம் விசாரணை நடத்தினர். அதில், ஐந்து பேரின் உண்மையான வயது 16 என்பதும், போலி ஆதார் கார்டு வாயிலாக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டதும் தெரியவந்தது.தொடர்ந்து, ஜார்க்கண்டில் இருந்து சிறுமியரின் பெற்றோர், நேற்று திருப்பூர் வரவழைக்கப்பட்டு, கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில், அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. மாவட்ட குழந்தைகள் நலக்குழு தலைவர் ஆறுச்சாமி கூறியதாவது:குறிப்பாக, 14 வயதுக்கு உட்பட்டவர்களை நிறுவனங்களில் பணி அமர்த்தக்கூடாது. 15 முதல் 18 வயதுக்கு உட்பட்டோரை பணி அமர்த்துவதில் ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. இதற்காகவே, வெளி மாநிலங்களிலிருந்து வரும் தொழிலாளர்களை, 18 வயது பூர்த்தியானது போன்று ஆதாரில் மாற்றம் செய்து அனுப்புகின்றனர்.ஜார்க்கண்டிலிருந்து திருப்பூரில் பணிபுரிவதற்காக அனுப்பப்பட்ட ஐந்து சிறுமியரையும் விசாரணை முடிந்த பின் பெற்றோருடன், சொந்த மாநிலத்துக்கு அனுப்பி வைக்கப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

50 ரூபாய்க்கு போலி ஆதார்

ஜார்க்கண்ட் சிறுமியரின் பெற்றோரிடம் விசாரணை நடத்திய குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அலுவலர்கள் கூறுகையில், 'ஜார்க்கண்டில் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் இயங்கும் கம்ப்யூட்டர் சென்டர்களில், போலி ஆதார் தயாரித்துக் கொடுக்கின்றனர். 50 ரூபாய் கட்டணத்தில், ஒரிஜினல் ஆதாரில், போட்டோஷாப் உதவியுடன், பிறந்த தேதியை மாற்றி, வயதை அதிகரித்து, ஸ்கேன் ஆகாத க்யூ.ஆர்., கோடு இணைத்து, போலி ஆதார் தயாரித்துக் கொடுக்கின்றனர். இவற்றை ஸ்கேன் செய்து பரிசோதிக்கும் போதுதான், போலி என்பதைக் கண்டறிய முடியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Rajathi Rajan
மார் 11, 2025 12:55

காசுக்கு எதையும் செய்வர்கள், எதையும் விற்பார்கள்,,, யாரையும் விற்பார்கள் பிறவி இழிகுணம் அது,,,,,


தர்மராஜ் தங்கரத்தினம்
மார் 11, 2025 12:54

ஹிந்தியை தாய்மொழியாக உடைய வடக்கன்ஸ் பிழைக்க இங்கே வர்றான் .... இப்படி எழுதுறவன் ஆயுசு முழுக்க ஓசி குவாட்டர், ஓசி பிரியாணி, கொஞ்சம் சில்லறை இதை நம்பித்தான் வாழ்க்கை நடத்தணும் .....


Raghavan
மார் 11, 2025 12:48

நான் இதுவரை மூன்று தடவைகள் விலாச மாற்றத்திற்கு 150 பணம் காட்டினேன். ஒவ்வொரு தடவையும் என்னுடைய விலாச மாற்று சான்று சரியாக தெரியவில்லை என்று கூறிய புறம் தள்ளி விட்டனர். நானும் இந்த பழம் புளிக்கும் என்று விட்டுவிட்டேன். இவர்கள் ரோகிங்க பேர்வழிகளுக்கு அட்டை கொடுப்பதில்தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள் என்று ஒரு சிறு சந்தேகம் வருகிறது. எப்போது சான்று சரியாக தெரியவில்லையோ உடனே பணத்தையும் திருப்பி அனுப்புவதுதானே உண்மையான சேவை. நானும் ஒரு 5 அல்லது 6 மின்னஞ்சல் அனுப்பியும் அவர்கள் பணத்தை திருப்பி அனுப்பவில்லை.


பல்லவி
மார் 11, 2025 10:54

வடக்கன்ஸ் எல்லாம் ஒரே இனம் போல ப்ராடு பயலுக போல


Mecca Shivan
மார் 11, 2025 10:01

ஆதார் இணைதளத்தில் தேவையான உண்மையான மாற்றம் செய்வதது கடினமாக உள்ளது. ஒவ்வொருமுறையும் ஐம்பது நூறு என்று ஒன்லைனில் வாங்கிக்கொண்டு பொதுஜனங்களை ஏமாற்றும் ஆதார் மந்திரியை என்ன சொல்வது ?


கோமகன்- யாதவன்
மார் 11, 2025 09:47

நல்லா கவனமா சோதனை செய்தால் பக்கத்துக்கு பங்களா தேசம் பக்கிகளாக இருக்கலாம். அவ்வளவு சீக்கிரமா விட்டுராதீங்க.


Kanns
மார் 11, 2025 08:51

These Social Welfare Officials MUST Provide Money-Livelihoods to them even from their Fat Salaries as They Will Comeback Again For Working Due to Poverties& EducationUnFitness Promoted by False Propaganda Politicians inclModi.


Venkatesh
மார் 11, 2025 10:41

Many arrogant stupids are complaining about BJP government and Modi for the current state of Eastern States and few other underdeveloped states. BJP government ruling the country for the past 11 years. Congress government ruled for over 60 years. Now those states are under recovery. Majority of the people are against congress and dont want them back in power. Its only because of people like you just for the sake of anti BJP mindset congress is into all sorts of drama and efforts to come back to power.


अप्पावी
மார் 11, 2025 08:02

ஆதாரில் ஏமாற்ற முடியாதுன்னு சொன்ன ப்ளூ கிணறை வரச்சொல்லுங்க. ஆதாரை திருடவே வாணாம். முழுசாவே மாத்திருவோம். திருட்டு இந்தியனுங்கடா. தண்டனை ஒண்ணும் கிடையாதுடா... முப்பதாயிரம் பக்கத்துக்கு நியாய சம்ஹிதை வெச்சுருக்கோம்டா.


A.a. Bhuvanesh
மார் 11, 2025 08:31

தங்கள் கூற்றுக்கே வருவோம் இப்பொழுது எதை வைத்து அவர்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் என்று கண்டுபிடித்தார்கள்,... ஒரு சாதாரண மொபைல் செயலியை பயன்படுத்தி பயன்படாத கியூ ஆர் கோடை நமது எந்த ஒரு ஆதாரத்துடனும் சேர்த்துக் கொள்ள முடியும் ஆனால் அதனை சரி பார்க்கும் பொழுது தெரிந்துவிடும்...


Dharmavaan
மார் 11, 2025 08:37

காரணம் நீதித்துறையே


Anand
மார் 11, 2025 10:33

ஏமாற்ற முடியாது என்பது உண்மை.. எனவே தான் அது போலியானது என கண்டுபிடித்தார்கள்.. அப்பாவி போன்ற கூறுகெட்டவனுங்களுக்கு இது புரியாது.....


Pandi Muni
மார் 11, 2025 10:55

கள்ள குடியேறிகளை வெளியேற்றுவோம்