உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ்: 20 பேர் தகுதி நீக்கம்; 3 ஆண்டுகள் தடை

மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ்: 20 பேர் தகுதி நீக்கம்; 3 ஆண்டுகள் தடை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:மருத்துவ படிப்பில் சேர போலி சான்றிதழ் அளித்த 20 பேர் நீக்கப்பட்டதுடன், மூன்று ஆண்டுகள் கவுன்சிலிங்கில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.சென்னை சைதாப்பேட்டை, ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், 5.25 கோடி ரூபாய் மதிப்பில் நவீன கலையரங்கம் கட்டு மான பணியை, அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று துவக்கி வைத்தார்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:அரசு மற்றும் தனியார் மருத்துவ படிப்புகளுக்கு, 72,743 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்தபோது, ஏழு மாணவர்கள், பிறப்பிட சான்றிதழ்களை போலியாக தந்திருப்பது தெரியவந்தது. மேலும், ஒன்பது பேர் ஜாதி சான்றிதழ்களையும், நான்கு மாணவர்கள் என்.ஆர்.ஐ., எனும் வெளிநாட்டு வாழ் இந்தியருக்கான துாதரக சான்றிதழ்களையும் போலியாக தயாரித்து தந்துள்ளனர். இந்த 20 பேர் போலி சான்றிதழ் தந்திருப்பது கண்டறியப்பட்டதால், அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளதுடன், மூன்று ஆண்டுகள் மருத்துவ கவுன்சிலிங் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல், வரும் 25ம் தேதி வெளியிடப்படும். மத்திய அரசின் கால அட்டவணைப்படி, 30ம் தேதி முதல் கவுன்சிலிங் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

2,814 பேருக்கு மறுவாய்ப்பு

மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியலை சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. இதில், 2,814 மாணவர்களின் விண்ணப்பங்களில் ஏதாவது ஒரு ஆவணம் இல்லாமல் இருப்பதால், தரவரிசை பட்டியலுக்கான தகுதி பெறவில்லை. இவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கும் வகையில், நாளை வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தகுதி பெறாத மாணவர்கள் குறித்த பட்டியல், https://tnmedicalselection.net என்ற இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், தங்களது விண்ணப்ப எண் இருந்தால், தேவையான ஆவணங்களை, 'ஆன்லைன்' வழியாக மாணவர்கள் நாளை வரை பதிவேற்றம் செய்யலாம் என, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் தேரணிராஜன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

பெரிய குத்தூசி
ஜூலை 18, 2025 07:51

தலையில் கூந்தல் இல்லாமால் மேலே புகைப்படத்தில் இருக்கிறாரே அவர்தான் அந்த சார், தமிழகத்துக்கே தெரியும் இவர்தான் அந்த சார் என. திராவிட மடலை ஓண்ணும் பண்ணமுடியாது.


ஆரூர் ரங்
ஜூலை 17, 2025 12:28

போலித் தகவல்கள் மூலம் SIDCO இடத்தை அபகரித்த நபர் மந்திரியா இருக்கிறாரே.


Mani . V
ஜூலை 17, 2025 05:01

அதுபோன்றே போலி ஆவணங்கள் கொடுத்துதுள்ள கல்வித் தகுதி சொத்து மதிப்பு,...... அரசியல்வாதிகளை பதவி நீக்கம் செய்தால் நல்லது. ஏனென்றால் பலர் டிகிரி படித்துள்ளேன் என்கிறார்கள். ஆனால் 2500+1500=5000 என்கிறார்கள்.


நிக்கோல்தாம்சன்
ஜூலை 17, 2025 04:32

ஞானசேகரங்களின் சார் க்கு எப்படா தகுதி நீக்கம் கிடைக்கும் , பொது நிகழ்வுகளில் பங்கேற்க தடை விதிக்கப்படுமா ?


Kasimani Baskaran
ஜூலை 17, 2025 04:04

அந்த சார் யார் என்பதை வெளியிட வேண்டும்.


Kumar Kumzi
ஜூலை 17, 2025 02:04

சார் உங்கள தா தேடிட்டு இருக்காங்க


சமீபத்திய செய்தி