உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரூ.10,000த்தை மீட்கும் முயற்சியில் 1 லட்சம் ரூபாயை இழந்த விவசாயி

ரூ.10,000த்தை மீட்கும் முயற்சியில் 1 லட்சம் ரூபாயை இழந்த விவசாயி

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பாகலுார் அருகே பி.முதுகானப்பள்ளியை சேர்ந்தவர் திம்மராயப்பா, 46. இவர், தன் நண்பரான பட்டவாரப்பள்ளி சீனிவாசன், 35, என்பவரிடம், 10,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அதை மே 25ம் தேதி மாலை, 'போன் பே' என்னும் மின்னணு பண பரிவர்த்தனை வாயிலாக பணம் அனுப்பியபோது, மாறுதலாக வேறொரு நபருக்கு பணம் சென்றது. அந்த எண்ணுக்கு போன் செய்தபோது, அந்த நபர் போனை எடுக்கவில்லை. பாகலுார் போலீசுக்கு திம்மராயப்பா தகவல் தெரிவித்தார். அவர்கள், 1930 என்ற எண்ணில் புகார் செய்ய கூறியுள்ளனர். அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, போலி, 'கஸ்டமர் கேர்' எண்ணுக்கு போன் சென்றது. எதிர் தரப்பில் பேசிய விஜயகுமார் என அறிமுகம் செய்து கொண்ட நபர், தன்னை போலீஸ் அதிகாரி எனக் கூறினார்.திம்மராயப்பா எண்ணுக்கு அடையாள அட்டையை அனுப்பினார். திம்மராயப்பாவின் வங்கி கணக்கு, ஆதார் எண் போன்ற விபரங்களை பெற்றார். வங்கி விபரங்களை சரிபார்ப்பதாகக் கூறி, ஒரு எண்ணை கொடுத்து, அதற்கு 1 ரூபாய் அனுப்புமாறு கூறியுள்ளார். திம்மராயப்பாவும், 1 ரூபாயை, 'போன் பே'வில் அனுப்பினார். அப்போது, 'அடுத்த நாள் உங்கள் வங்கி கணக்கிற்கு பணம் வந்து விடும்' என, திம்மராயப்பாவிடம் அந்த நபர் கூறினார். ஆனால், பணம் வராத நிலையில், அடுத்தடுத்த நாட்களில் போன் செய்து, ஒரு மொபைல் போன் எண்ணை கொடுத்து, 4,999 ரூபாய் மற்றும் 95,000 ரூபாய் என, இருமுறை திம்மராயப்பாவிடம் இருந்து, 'கூகுள் பே' வாயிலாக, அந்த நபர் பணத்தை பெற்றார். அப்போது, 'நீங்கள் எங்களுக்கு அனுப்பிய, 1 லட்சம் ரூபாய், வேறொரு எண்ணுக்கு தவறுதலாக அனுப்பிய, 10,000 ரூபாய் சேர்த்து உங்கள் வங்கி கணக்கிற்கு வந்து விடும்' எனக்கூறி, அந்த நபர் போனை துண்டித்தார்.ஆனால், பணம் வராததால் மீண்டும், 1930 என்ற எண்ணிற்கு திம்மராயப்பா போன் செய்தார். அப்போது தான், சரியான சைபர் கிரைம் எண்ணுக்கு போன் சென்றது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த திம்மராயப்பா, கிருஷ்ணகிரி 'சைபர் கிரைம்' போலீசில் புகார் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Elango S
ஜூன் 04, 2025 13:25

ஆமாம் உள்ள கண்ணும் போச்சு நொள்ளை கண்ணணுக்கு ஏமாற தயாராக இருந்தால் ஏமாற்ற தான் செய்வார்கள்


Padmasridharan
ஜூன் 03, 2025 18:03

1930 எண்ணுக்கு ஃபோன் செய்தால் தவறாக சென்றதை, அவரை காவலர் என்று அறிமுகப்படுத்தி பணத்தை ஏமாற்றியுள்ளார். காவலர் என்று சொல்லி நிறைய குற்றங்கள் நடக்க காரணம் இவங்கள்ள sincerity & dedication குறைந்து corruption அதிகமானதுதான் காரணமா.


Anantharaman Srinivasan
ஜூன் 03, 2025 11:29

1930. என்ற போலி, கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் சென்றது. How is it..? what is going on in the country?


Pmnr Pmnr
ஜூன் 03, 2025 10:45

உள்ள பணமும் போச்சா


Ganesh
ஜூன் 03, 2025 09:45

This is my doubt tooo... How first call made to 1930 got connected to wrong persons?


சுந்தரம் விஸ்வநாதன்
ஜூன் 03, 2025 09:40

அப்போ 1930 நம்பரும் போலியா? அதுக்குத்தான் அவசரத்துக்கு யாரையும் யாரும் போனில் கூப்பிடமுடியாதபடி விளம்பரம் செய்யுறாங்களா


முத்துபதி
ஜூன் 03, 2025 09:04

ஒவ்வொரு தடவையும் யாரையாவது போனில் அழைத்தால் இந்த 1930 போன் நம்பரைப் பத்திப் பேசிப் பேசி டார்ச்சர் குடுக்கறாங்க. ஒரு ஆக்‌ஷன் மண்ணும் கிடையாது. இந்தியாவில் அவனவன் கொக்ளையடிக்கலாம். தப்பே கிடையாது. ஜி.எஸ்.டி கட்டிடுங்க. இல்லேன்னா வந்து ரெய்டு நடத்துவாங்க


Columbus
ஜூன் 03, 2025 08:42

How come the 1930 call can go to the fraudulent people. Reporting not clear.


shiva
ஜூன் 03, 2025 08:21

திம்மராயப்பா...உங்களின் ஏமாளித்தனத்திற்கு எல்லையே இல்லையா? இனிமேலாவது திருந்துங்கள்.


VENKATASUBRAMANIAN
ஜூன் 03, 2025 07:26

தெரியாத நபருக்கு பணம் பரிவர்த்தனை செய்ய கூடாது. தெரிந்த இருக்கே முதலில் 1ரூ அனுப்பி சரி பார்க்க வேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை