உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முறையாக வேலை செய்யாத பாஸ்ட்டேக்; டோல்கேட்களில் வாகனங்கள் காத்து கிடப்பு

முறையாக வேலை செய்யாத பாஸ்ட்டேக்; டோல்கேட்களில் வாகனங்கள் காத்து கிடப்பு

சென்னை: சுங்கச்சாவடிகளில், 'பாஸ்ட்டேக்' முறையாக வேலை செய்யாததால், சரக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. போக்குவரத்து போலீசாரின் நேர கட்டுப்பாடு காரணமாக, காலை முதல் மாலை வரை, சரக்கு வாகனங்கள் சென்னைக்குள் நுழைய முடியாத நிலை உள்ளது. இதனால், இரவு நேரங்களில் மட்டுமே சரக்கு வாகனங்கள் சென்னையில் வலம் வர முடிகிறது. இது போதாதென்று, சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்தவும் சரக்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.

அவலம்

சுங்கச்சாவடிகளில் ஏற்படும் நேர விரயத்தை குறைப்பதற்கு, மின்னனு முறையில் கட்டணம் செலுத்தும், 'பாஸ்ட்டேக்' நடைமுறை உள்ளது. ஆனால், பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கும் கருவிகள், கண்காணிப்பு கேமராக்கள் முறையாக வேலை செய்வதில்லை. சென்னை பைப்பாஸ் சாலையில் சூரப்பட்டு, வானகரம்; சென்னை - கொல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில் நல்லுார்; சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ் சாலையில் ஸ்ரீபெரும் புதுார்; சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பரனுார்; எண்ணுார் விரைவு சாலையில் உள்ள மாத்துார் உள்ளிட்ட சுங்கச்சாவடிகளில் இந்த அவலம் தொடர்கிறது. சரக் கு வாகனங்கள் போக்குவரத்து அதிகமுள்ள மதுரை , கோவை, விழுப்புரம், கிருஷ்ணகிரி , சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், பல சுங்கச்சாவடிகளிலும் இதே பிரச்னை உள்ளது. இதனால், கட்டணம் செலுத்துவதற்கான வழிகள் அமைக்கப்பட்டு, சில வழிகளில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு சுங்கச்சாவடியிலும், ஊழியர்கள் கண்ணால் பார்த்து, கணினியில் வாகன பதிவெண்ணை குறித்து அனுப்புகின்றனர். இதனால், 10 முதல் 15 நிமிடம் வரை சுங்கச்சாவடிகளில் காத்திருக்க வேண்டியுள்ளது.

அதிருப்தி

கட்டணம் வசூலிப்பில் ஆர்வம் காட்டும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் அதன் ஒப்பந்த நிறுவனங்கள், இதை கண்டுகொள்ளாமல் உள்ளன. இது வாகன ஓட்டிகள், பயணியர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கேட்டபோது, சென்னை பைபாஸ் சாலை திட்ட இயக்குனர் ரவீந்தர் ராவ், 'இப்போதுதான் இந்த பிரச்னை என் கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Jayee Jagan
செப் 27, 2025 21:10

Not only the NHAI the tolls but also the TamilNadu Road Development Corporation is collecting tolls in state high ways tolls in Chennai outer ring road are also in the same condition. All because of corrupted tender tem. If government runs them without giving contracts to 3rd parties the looting in toll gates, Railway rest rooms, railway parking all will be set right to a justifiable tem. Contractors are mind fixed for maximum earnings by any way without any ethics. You see, Chennai outer ring road 3 toll gates within 40 km.


Jayee Jagan
செப் 27, 2025 21:09

Not only the NHAI the tolls but also the TamilNadu Road Development Corporation is collecting tolls in state high ways tolls in Chennai outer ring road are also in the same condition. All because of corrupted tender tem. If government runs them without giving contracts to 3rd parties the looting in toll gates, Railway rest rooms, railway parking all will be set right to a justifiable tem. Contractors are mind fixed for maximum earnings by any way without any ethics. You see, Chennai outer ring road 3 toll gates within 40 km.


சிந்தனை
செப் 24, 2025 17:03

அரசுத் துறைகள் எவ்வழியோ தனியார் துறைகளும் அவ்வழியே


VENKATASUBRAMANIAN
செப் 24, 2025 08:50

இது பெரும்பாலான டோல் பூத்துகளில் நடக்கிறது. பழைய ஸ்கேனரை வைத்து செயல்படுகின்றன. இதுபோன்ற கோல்களை கேன்சல் செய்யவேண்டும்.


Kalyanaraman
செப் 24, 2025 08:44

ஏதோ ஒரு சாவடி இல்லை, பல சாவடிகளில் இது போல் நடக்கிறது என்றால் அதிகாரிகளின் மெத்தனமே காரணம். மேலும் தனி நபர் தவறு செய்தால் அபராதம் & தண்டனை விதிக்கும் நமது சட்டங்களும் நீதிமன்றங்களும் ஒரு அரசு துறை தவறு செய்தால் கடும் தண்டனையோ அபராதமோ இல்லை…


venugopal s
செப் 24, 2025 08:12

இதற்கு மத்திய பாஜக அரசின் கீழ் உள்ள தேசிய நெடுஞ்சாலை துறையின் மெத்தனப்போக்கு தான் ஒரே காரணம். இதற்கும் தமிழக அரசையும் தமிழக மக்களையும் வழக்கம் போல் குறை சொல்ல வேண்டாம்!


நிக்கோல்தாம்சன்
செப் 24, 2025 06:44

அங்கிருக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்தால் போதும் எல்லாம் சரியாக வேலை பார்க்கும்


iyyappan siva
செப் 24, 2025 06:43

தூத்துக்குடி - திருநெல்வேலி டோல் கேட் எப்பவுமே Problem தான் . Even passenger vehicles like Bus, car to passing the toll gate have struggled a lot.


Subramanian
செப் 24, 2025 05:49

Many toll gates in TN deliberately do this. Then only they can collect cash and did not show it in account. This is going on for ages


Kasimani Baskaran
செப் 24, 2025 03:41

ஒழுங்காக வேலை செய்யவேண்டிய கருவிகள் ஏன் வேலை செய்யவில்லை என்று ஆய்வு செய்ய அதிகாரிக்கு நேரமில்லை... என்ன ஒரு காமடி.


புதிய வீடியோ