உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்தது: உதயகுமார் கிண்டல்

ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்தது: உதயகுமார் கிண்டல்

மதுரை : ''அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமியின் தேர்தல் வியூகத்தால் முதல்வர் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்துவிட்டது'' என முன்னாள் அமைச்சர் உதயகுமார் கிண்டலடித்துள்ளார்.அவரது வீடியோ அறிக்கை: சட்டசபைக் கூட்டத்தில் தி.மு.க., அரசு, ஜனநாயக படுகொலை செய்துள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலாளர் பழனிசாமி மக்கள் பிரச்னையை பற்றி விவாதிக்க அனுமதி மறுக்கப்படுகிறது. வாய்ப்பு பெற்று பேசினால் நேரலை துண்டிக்கப்படுகிறது. அவரது விவாதத்திற்கு பதில் கூறமுடியாமல் ஸ்டாலினுக்கு குளிர்காய்ச்சல் வந்துவிட்டது.மக்கள் தி.மு.க., அரசுக்கு தண்டனை கொடுக்க தயாராகி விட்டனர். அதற்கு சபாநாயகர் முட்டுக் கொடுத்தாலும் தடுக்க முடியாது. இதை மறைக்க தீர்மானம் நிறைவேற்றுவது, குழு போடுவது, பாராட்டு விழா நடத்துவது என முதல்வர் செயல்படுகிறார்.தமிழகத்தில் மீண்டும் ஜெ., ஆட்சி மலர, பழனிசாமி ராஜதந்திரத்துடன் பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்துள்ளார். இதைக் கண்டு ஸ்டாலின் நாலாந்தரமாக விமர்சிக்கிறார். சட்டசபை, பொதுக் கூட்டம், மாவட்ட செயலாளர் கூட்டங்களில் நடுக்கத்தைப் போக்கும் வகையில் அவதுாறு பேசுகிறார்.குடும்ப வாரிசு அரசியலில் இருந்து தமிழகத்தை மீட்க பழனிசாமி போராடுகிறார். அவர் இன்று தனது சேவை, கருணையால் நிலைத்து நிற்பதே சாதனை. நீங்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்திருப்பது வேதனை. கருணாநிதியின் மகனாக பிறந்ததால் உங்களுக்கு அங்கீகாரம். மக்களிடம் திணிக்கப்பட்ட தலைவர் நீங்கள்.இந்த நாட்டில் சட்டம் ஒழுங்கு, பாலியல் பலாத்காரம், சொத்து, மின் கட்டண வரிகள் பற்றி கவலைப்பட வேண்டிய நீங்கள், பழனிசாமியின் கூட்டணி பற்றி ஆராய்ச்சி செய்கிறீர்கள். அடுத்தாண்டு தேர்தலில் தமிழக முதல்வர் பழனிசாமிதான் என மக்கள் தீர்மானித்து விட்டனர்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

தமிழ் மைந்தன்
மே 05, 2025 11:17

இன்று திமுக ஊழல் அமைச்சர்கள் பற்றி விவாதம் நடத்தலாம்


Yes your honor
மே 05, 2025 08:24

நேற்று, அதாவது 04-05-25 அனைத்து உடன் பிறப்பு டிவி சேனல்களிலும் பாஜக - அதிமுக கூட்டணிபற்றித்தான் காரசாரமாக விவாதம் நடைபெற்றது. இதுபோன்ற காரசார விவாதத்தை பொன்முடி பெண்களுக்கு முன்பாகவே, பொதுமேடையில், அசிங்க அசிங்கமாக பேசியபோது ஏன் இந்த டிவி சேனல்கள் செய்யவில்லை. இதிலிருந்தே இவர்களின் அஜெண்டா ட்ரிவன் ஒளிபரப்பு நமக்குத் தெளிவாக புரிகிறது. இதுபோன்ற ஒன்சைட் ஊடகங்களின் செய்திகளின் நம்பகத் தன்மையைத் தான் சந்தேகிக்கப் படவேண்டியதாகிறது. சுடாலின் அன்ட் கோ, அரண்டு மிரண்டு கிடப்பதால்தான் மக்கள் முன்பு பாஜக - அதிமுக கூட்டணிபற்றி அவதூறு பரப்புகிறார்கள். ஆனாலும், அனைத்து சேனல்களிலும் யார் யாருடன் கூட்டணி வைத்தால் உனக்கென்ன என்னும் கேள்வி கேட்கப்பட்டு விட்டதால், இந்த அனைத்து ஒன்சைட் டிவி சேனல்களும் தாமாகவே பாஜக - அதிமுக கூட்டணிக்கு இலவச விளம்பரம் தேடிக் கொடுத்துள்ளனர். மக்களும் இப்பொழுது இதே கேள்வியைத்தான், அதாவது, யார் யாருடன் கூட்டணி வைத்தால் உனக்கென்ன? என்னும் கேள்வியை கேட்க ஆரம்பித்துவிட்டனர். ஆகமொத்தம், ஆபாச பேச்சாளர்களை மட்டுமே நம்பி இருக்கும் திமுகவிற்கு டிசன்ட்ரி ஸ்டார்ட்டேட்.


S.L.Narasimman
மே 05, 2025 07:38

அருமையான கருத்து. மக்கள் ஆதரவு அதிமுக கூட்டணிக்கு நாளுக்கு நாள் பெருகுவதால் விடியலுக்கு தேர்தல் ஜன்னியே தற்போது வந்து விட்டது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை