உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவராத்திரி நான்காம் நாள்

நவராத்திரி நான்காம் நாள்

மதுரை மீனாட்சியம்மன் இன்று வெள்ளி ஊஞ்சல் அலங்காரத்தில் காட்சியளிக்கிறாள்.முருக பக்தரான குமரகுருபரர் மூன்று வயது வரை பேசும் திறன் அற்றவராக இருந்தார். பின்னர் திருச்செந்துார் முருகனருளால் குறை நீங்கப் பெற்றார். மதுரையை ஆட்சி செய்த மன்னர் திருமலைநாயக்கர், அவரை மதுரைக்கு வரவழைத்து, முருகனின் தாயான மீனாட்சியம்மன் மீது பிள்ளைத்தமிழ் பாடும்படி கேட்டுக் கொண்டார். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழைப் பாடிய குமரகுருபரர், ஊ(ஞ்)சல் பருவத்தில், மீனாட்சியம்மன் ஊஞ்சலில் ஆடும் அழகையும், அவள் அருள்புரியும் தன்மையையும் வியந்து போற்றினார். ஊஞ்சலில் ஆடும் மீனாட்சியை தரிசித்தால் கவலை தீரும். மகிழ்ச்சி நிலைக்கும். பாட வேண்டிய பாடல்கைக்கே அணிவது கன்னலும் பூவும் கமலம் அன்னமெய்க்கே அணிவது வெண்முத்து மாலை விட அரவின்பைக்கே அணிவது பன்மணிக்கோவையும் பட்டும் எட்டுத்திக்கே அணியும் திருவுடையான் இடம் சேர்பவளே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை