உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கலை நுால்கள் பதிப்பிக்க நிதியுதவி

கலை நுால்கள் பதிப்பிக்க நிதியுதவி

சென்னை:தமிழகத்தில், கலை சார்ந்த நுால்களை எழுதும் ஆசிரியர்களை ஊக்குவிக்கவும், அரிய கலை நுால்களை பதிப்பிக்கவும், இயல், இசை, நாடக மன்றம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, நுால் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வீதம், ஐந்து நுால்களை பதிப்பிக்க, 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட உள்ளது.இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் 'உறுப்பினர் செயலர், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம், 31, பொன்னி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, சென்னை - 28' என்ற முகவரியில் 10 ரூபாய் தபால் தலை ஒட்டிய சுயமுகவரியிட்ட உரையில் அனுப்பி விண்ணப்பிக்கலாம். மேலும், விபரங்களுக்கு: 044 - 2493 7471. gmail.com, tn.gov.in


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை