உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புதிதாக 8 மணல் குவாரிகள் நவ., 1ல் திறக்க அரசு முடிவு

புதிதாக 8 மணல் குவாரிகள் நவ., 1ல் திறக்க அரசு முடிவு

சென்னை: தமிழகத்தில் ஐந்து மாவட்டங்களில், எட்டு மணல் குவாரிகள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில், 12 இடங் களில், ஆற்று மணல் குவாரி கள் செயல்பட்டு வந்தன. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=lce78f7l&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0குவாரியில் இருந்து, 'யார்டு'க்கு மணல் அள்ளி போடும் ஒப்பந்ததாரர்கள் முறைகேடு செய்வதாக புகார் எழுந்தது. அவர்கள் சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டது. இதனால், குவாரிகள் மூடப்பட்டன. இதையடுத்து, 30க்கும் மேற்பட்ட இடங்களில் மணல் குவாரிகள் திறக்க, நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்தது. சுற்றுச்சூழல் அனுமதி உள்ளிட்ட பணிகள் முடிந்த நிலையில், ஒப்பந்ததாரர்களை தேர்வு செய்வதில் பிரச்னை ஏற்பட்டது. இதனால், புதிய குவாரிகள் திறப்பு நடவடிக்கை பாதியில் முடங்கியது. இந்நிலையில், ஏற்கனவே, சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்ட எட்டு இடங்களில், புதிதாக மணல் குவாரிகளை திறக்க அரசு முடிவு செய்துள்ளது. புதுக்கோட்டையில், 3; கடலுாரில், 2; தஞ்சாவூர், நாமக்கல், ராணிப்பேட்டை மாவட்டங்களில் தலா ஒன்று என மொத்தம் எட்டு இடங்களில், மணல் குவாரிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நவ., 1 முதல் மணல் விற்பனை துவங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து, அனைத்து எம்.சாண்ட் மற்றும் மணல் லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் கூறுகையில், ''மணல் குவாரிகள் தொடர்பாக, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கு, கடந்த வாரம் முடிவுக்கு வந்தது. ''இதையடுத்து, புதிய குவாரிகள் திறக்க முறையிட்டோம். அதன் அடிப்படையில், மணல் குவாரிகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

sathis
அக் 28, 2025 17:24

அரசுக்கு மக்கள் மீது எவ்வளவு பாசமும் பண்பும் நிலத்தடி ஆற்று மணல் அள்ளி நிலத்தடி நீரை குறைத்து பின்பு தனியார் நிறுவனம் ஒன்று உருவாக்கி குடம் ஐந்து ரூபாய் என்று தண்ணீர் விற்கப்படுகிறது


sengalipuram
அக் 28, 2025 12:41

இப்ப பணம் கல்லா கட்டி, தேர்தல் சமயத்தில் பணம் பட்டுவாடா செய்ய சரியாயிருக்கும். இதல்லாம் முன்னச்சரிக்கையா செய்ய தெரிந்த இவர்கள் மழை வரும்முன் ஏன் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கவில்லை?


Vasan
அக் 28, 2025 12:25

அடுக்கு மாடி கட்டடங்கள் மற்றும் பல லட்சம் கோடி அந்நிய முதலீடு தொழிற்சாலைகள் தொடர்பான கட்டுமான வேலை நிறைய இருக்கிறது, அதற்க்கெல்லாம் நிறைய மணல் தேவைப்படுகிறது.


karthik
அக் 28, 2025 11:04

ஆட்சியை விட்டு போறதுக்குள்ள மொத்தத்தையும் முடிச்சிவிட்டுட்டு தான் போகணும் என்று நினைக்கிறார்கள் போல


ديفيد رافائيل
அக் 28, 2025 10:36

மண் அனைத்துமே சுரண்டி எடுத்துடுவானுங்களே


RAVINDRAN.G
அக் 28, 2025 10:32

இவர்களை தேர்ந்தெடுத்த மக்களைத்தான் குறை சொல்லவேண்டும். ஊசி இடம் கொடுத்தால்தான் நூல் நுழையமுடியும். ஓட்டுக்கு இலவசங்களை வாரி விட்டால் கொள்ளையடிக்கத்தான் செய்வார்கள் . பத்தவில்லை என்றால் வரி போடு மக்களை கஷ்டப்படுத்துவார்கள். இவர்கள் கொள்ளையடிப்பதில் ஒரு 5% பணம் தேர்தலின் போது கொடுத்து மீதும் ஆட்சிக்கு வருவார்கள். மீண்டும் கொள்ளையடிப்பார்கள். கடன் வாங்குவார்கள் நாட்டை திவால் ஆக்குவார்கள். யார் கேட்டார்கள் பெண்கள் கேட்டார்களா இந்த 1000 ரூபாயும் விடியாத இலவச பயணங்களும். கொடுக்கிற மாதிரி கொடுத்து வேற வகையில் பிடுங்கிவிடுவார்கள் டாஸ்மாக் மூலமாக.


நிக்கோல்தாம்சன்
அக் 28, 2025 09:56

இயற்கையை சுரண்டி அழிப்பதில் இந்த அரசுக்கு நிகர் இந்த அரசுதான்


c.mohanraj raj
அக் 28, 2025 09:47

எலக்சன் செலவுக்கு வேண்டுமல்லவா திருட்டு மாடல் திருடிக் கொண்டே தான் இருக்கும் ஏதோ ஒரு வகையில்


Samy Chinnathambi
அக் 28, 2025 07:31

ஆமாம் தேர்தலில் தாராளமாக வாக்காளர்களுக்கு விநியோகிக்க இன்னும் கூடுதல் நிதி தேவை படுகிறது.. அணிலுக்கு பத்து ரூபாய் தலைவலி உள்ளதால் இந்த வகையில் நிதி திரட்ட வேண்டும்.


Nathan
அக் 28, 2025 07:13

அப்படியே தமிழ்நாடு விற்பனைக்கு என்று அறிவித்து விடுங்கள் பாலைவனத்தில் வாழவேண்டும் என்று தமிழர்கள் தலையில் எழுதியிருக்கிறது அதனால் தான் இதுபோன்ற பணத்தாசை பிடித்த பேய்கள் ஆட்சியில் அமர்கின்றனர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை