உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தவறாக விளக்கம் சொன்ன துரைமுருகன்; திருத்தம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

தவறாக விளக்கம் சொன்ன துரைமுருகன்; திருத்தம் சொன்ன முதல்வர் ஸ்டாலின்!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கவர்னர் ரவி பாதியில் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது 2023ம் ஆண்டு என்பதற்கு பதில் 2003ம் ஆண்டு என குறிப்பிட்ட துரைமுருகனுக்கு, 2023ம் ஆண்டு என்று சொல்லுமாறு முதல்வர் ஸ்டாலின் திருத்தம் சொன்னார். பின்னர் துரைமுருகன் திருத்தம் செய்து கொண்டார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=zjfkiuw0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கவர்னர் ரவி சட்டசபையில் இருந்து பாதியில் வெளியேறியது குறித்து, அமைச்சர் துரைமுருகன் அளித்த விளக்கம்: 2023ம் ஆண்டு ஜனவரி திங்கள் 9ம் தேதி கவர்னர் ரவி உரையாற்றிய போது, அவை குறிப்பில் அச்சிடப்படாத சிலவற்றை சேர்த்தும் உரையாற்றினார். 2024ம் ஆண்டும் இதே நிலை நீடித்தது. 2023ல் அவையின் கண்ணியத்தை காக்க ஆளுநருக்கு எதிராக முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு கவர்னர் பதவி குறித்த மாறுபட்ட கருத்து இருந்தாலும், கவர்னருக்கு உரிய மரியாதை அளித்தார். கடந்த ஆண்டு கவர்னர் அனுப்பிய கடிதத்திற்கு சட்டசபை மரபுகளை விளக்கி பதில் அனுப்பப்பட்டது.பதில் கடிதத்தில், தேசிய கீதம் கடைசியாக தான் பாடப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்சிடப்பட்ட பகுதிகள் மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும் அரசமைப்பு சட்டத்தின் 176வது பிரிவின் கீழ் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் கவர்னர் உரை நிகழ்த்துவார். தேசிய கீதம் பாடப்படவில்லை என்ற கருத்தை கவர்னர் ரவி கூறியுள்ளார். தமிழக சட்டசபை மரபுகளின்படி, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், இறுதியில் தேசிய கீதமும் பாடப்படுவது வழக்கம்.தேசிய கீதம் மற்றும் அரசியலமைப்பு மீது தமிழக அரசு மிகுந்த மரியாதை கொண்டுள்ளது. அவையின் புகழை காக்க வேண்டிய பொறுப்பு நமக்கு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். கவர்னர் ரவி பாதியில் வெளியேறியது குறித்து அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். அப்போது 2023ம் ஆண்டு என்பதற்கு பதில் 2003ம் ஆண்டு என குறிப்பிட்ட துரைமுருகனுக்கு, 2023ம் ஆண்டு என்று சொல்லுமாறு முதல்வர் ஸ்டாலின் திருத்தம் சொன்னார். பின்னர் துரைமுருகன் திருத்தம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 20 )

Amjath
ஜன 07, 2025 07:54

இவனுக்கு இவ்வளவு அறிவு உண்டா... சரி...


Ramesh Sargam
ஜன 06, 2025 20:47

துரைமுருகன் போதையில் உளறி இருக்கலாம்.


Karthikeyan Palanisamy
ஜன 06, 2025 20:23

...உபயோகிப்பதால் pant


Krishnamurthy Venkatesan
ஜன 06, 2025 20:10

ஒண்ணா Govrrnor மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லது மாநில அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இது என்ன கண்ணா மூச்சி விளையாட்டு.


Kumar Kumzi
ஜன 06, 2025 16:19

அடேங்கப்பா சீனிசக்கர சித்தப்புக்கு எம்பூட்டு ஞாபக சக்தி


கோமாளி
ஜன 06, 2025 15:24

அண்ணா பல்கலை. விவகாரத்தில் திமுக-வை காக்க பா.ஜ.க-வும் உதவி. கள்ளக்கூட்டணி


visu
ஜன 06, 2025 16:55

என்ன உளறல் பாதுகாத்து பிஜேபி க்கு என்ன லாபம்


GMM
ஜன 06, 2025 14:56

தமிழக சட்ட பேரவை மரபில் / தமிழக பள்ளி, / விழாவில் தமிழ் தாய் வாழ்த்து திராவிட இடை சொறுகல். கவர்னர் பதவி அரசியல் சாசன பதவி. நிரந்தரம். சட்ட பேரவை கலையும் . முடங்கும். ராஜினாமா செய்யும் . கூட்டணி ஆட்சி, ஜனாதிபதி ஆட்சி எதுவும் எப்போதும் நிகழும். கவர்னர், தலைமை செயலர், தலைமை நீதிபதி, ... 24/7 பதவி நிரந்தரம். மாநிலம் பிரிக்க முடியும். யூனியன் ஆகும். அப்போது தமிழ் தாய் வாழ்த்து மாறும். 1947 முதல் தேசிய கீதம் பாட வேண்டியது கட்டாயம். முதலில் பாட மறுப்பது குற்றம். முதலில் பாடி, உமது எதிர்ப்பை முறையான அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். தேசத்தை பொறுத்த வரையில், சட்ட பேரவை ஒரு சிறிய அமைப்பு. குறைந்த அதிகாரம் பெற்றது. அதிகார தவறை திருத்தம் வேண்டும். கட்சியில் அடங்க மறுக்கலாம். சட்டம் முன் அடங்கி தான் ஆக வேண்டும்.


Kumar Kumzi
ஜன 06, 2025 14:49

துண்டுசீட்டு தோற்று நோய் எல்லாருக்கும் பரவும் போலருக்கே எல்லாரும் வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை நைனா மட்டும் மட்டும் கருப்பு சொக்கா ட்ராக் ஸூ ஹாஹாஹா ஒருவேள இங்கிலீஸ்ல பேசுவரோ


sridhar
ஜன 06, 2025 14:46

ஈயத்தை பார்த்து இளிச்சிதாம் பித்தளை .


RAMAKRISHNAN NATESAN
ஜன 06, 2025 14:39

2003 இல் இருந்தது ஜெ ஆட்சி ......... துரை யால இன்னும் அம்மையாரை மறக்க முடியல .....


SRITHAR MADHAVAN
ஜன 06, 2025 16:29

அந்த நாட்களை எப்படி மறப்பது? அந்த நாட்களில் எத்தனையோ உண்மையான துச்சாதனன் வாழ்ந்தார்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை