உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்லுங்கள்; 3 நாட்கள் கெடு விதித்தது பசுமை தீர்ப்பாயம்!

மருத்துவக் கழிவுகளை கேரளாவுக்கே கொண்டு செல்லுங்கள்; 3 நாட்கள் கெடு விதித்தது பசுமை தீர்ப்பாயம்!

சென்னை: 'திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும். கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்' என தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7k4ep5j7&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தமிழக அரசு வழக்கறிஞர், 'கேரளத்திலிருந்து லாரிகளில் கொண்டு வந்து, தமிழகத்தில் கொட்டப்படும் உயிரி மருத்துவக் கழிவுகளை அகற்றும் செலவுகளை, கேரள அரசு வழங்க தீர்ப்பாயம் உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார். இது குறித்து இன்று (டிச.,19) பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்துள்ள உத்தரவு பின்வருமாறு:* திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை மீண்டும் கேரளாவுக்கே கொண்டு செல்ல வேண்டும்.* கேரளாவுக்கு கொண்டு செல்லாவிட்டால் குப்பை மேலாண்மை நிறுவனத்திடம் கேரளா அரசே ஒப்படைக்க வேண்டும்.* கழிவுகளை கேரளா கொண்டு செல்லலாம் அல்லது திருநெல்வேலி நிறுவனத்திடம் வழங்கலாம்.* திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவக் கழிவுகளை அகற்றுவதற்கு கேரளாவே பொறுப்பேற்க வேண்டும்.* கேரளா அரசே பொறுப்பேற்று 3 நாட்களுக்குள் அகற்ற வேண்டும் என தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 25 )

Ram pollachi
டிச 20, 2024 00:05

கொரோனா ஊசியாகட்டும், ரேசன் பொருள் வாங்குவதாகட்டு எல்லா இலவசத்தையும் வாங்க முதலில் வருவார்கள். பிளாட்பாரம் சீட்டை வாங்க மாட்டார்கள் கேட்டால் மத்திய அரசிற்கு எதற்கு பணம் தர வேண்டும் என கேட்பார்கள். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு....


Ram pollachi
டிச 20, 2024 00:05

கொரோனா ஊசியாகட்டும், ரேசன் பொருள் வாங்குவதாகட்டு எல்லா இலவசத்தையும் வாங்க முதலில் வருவார்கள். பிளாட்பாரம் சீட்டை வாங்க மாட்டார்கள் கேட்டால் மத்திய அரசிற்கு எதற்கு பணம் தர வேண்டும் என கேட்பார்கள். இந்திய சுதந்திர போராட்ட வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு....


Ram pollachi
டிச 19, 2024 23:50

ஆதார் வந்த பிறகு சாயம் வெளுத்து விட்டது. இன்னும் பல தவறுகளை துணிந்து செய்து கொண்டு இருக்கும் அம்மாநில மக்களுக்கு வருங்காலத்தில் அடி பலமாக இருக்கும்..


Ram pollachi
டிச 19, 2024 23:28

கழிவுகளை கொண்டுவந்த லாரி மற்றும் அப்பாவி, பாமரனுக்கு தண்டனை தராமல் நோய்களை பரப்பும் மருத்துவமனைகளை இழுத்து மூட ஆணையிடுங்கள் அதுவே சரியான தீர்வு. நிலைமை இப்படி இருக்க நர்சிங் படிப்பதும் இங்கே நோய் கழிவுகளை கொட்டுவதும் இங்கே.


Ram pollachi
டிச 19, 2024 23:11

எங்குமே குற்றவாளிகள் தப்பி விடுவார்கள் கூலிப்படைகள் மாட்டிக் கொள்ளும். கற்பழிப்பு வழக்கில் கை பாதம் இல்லாதவனுக்கு தண்டனை அளித்த சட்டத்தை நினைத்தால் வியப்பாக இருக்கிறது. பசுமை தீர்பாய அலுவலகத்தையும் திருவனந்தபுரத்திற்கு மாற்றி விடுங்கள் எல்லாம் சரியாகிவிடும்... இந்த தவறுகளை மறைக்க பம்பையில் துணிகளை விட்டு மாசு செய்ய வேண்டாம் என்று ஊருக்கு உபதேசம்...


S. Neelakanta Pillai
டிச 19, 2024 21:00

பசுமை தீர்ப்பாய உத்தரவை படிக்கவில்லை உங்கள் செய்தியின் அடிப்படையில் இதுதான் தீர்ப்பு என்னுடைய அம்சம் என்றால் தீர்ப்பாயம் தனது தகுதியை குறைத்து சிறுபிள்ளை போல் நடந்து கொள்கிறது. துரதிர்ஷ்டம். இந்த மருத்துவக் கழிவுகளை வெளியேற்றிய நிறுவனம் எது என்று கண்டுபிடிக்கவும் கேரளாவில் மருத்துவ கழிவுகளை அப்புறப்படுத்துவதற்கான என்ன நடைமுறை கடைபிடிக்கப்படுகிறது அல்லது கடைப்பிடிக்கப்படவில்லை என்றால் ஏன் கடைபிடிக்கவில்லை அந்த மருத்துவ கழிவுகளை அங்கே இருந்து லாரியில் கொண்டு வந்த லாரியின் உடைய உரிமம் அந்த லாரியை நடத்திய நிறுவனத்தின் உடைய உரிமம் முதலில் சொன்ன மருத்துவமனையின் உரிமம் அனைத்தையும் ரத்து செய்து இருக்க வேண்டும். கூடவே தண்டமும் வசூலிக்க உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும். இதுபோன்ற அபாயகரமான கழிவுகளை ஒரு மாநிலத்திலிருந்து அடுத்த மாநிலத்திற்கு கொண்டு செல்லும் வழியில் இரு மாநில செக்போஸ்ட் மட்டும் காவல் பணியாளர்கள் பணியில் இருந்திருப்பார்களே அவர்களை உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும். இப்படி எதுவுமே செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதிகளை கொண்ட இந்த பசுமை தீர்ப்பாயம் இதற்கு மேல் என் நான் சொன்னால் அசிங்கமாக இருக்கும், மகா கேவலம்


Natarajan Ramanathan
டிச 19, 2024 19:56

நான்கு லாரிகளை பிடித்து கொளுத்திவிட்டால் பிறகு இந்த பக்கமே வரமாட்டார்கள்.


Pandi Muni
டிச 19, 2024 21:46

என் ஊரு பக்கம் கொட்டி இருந்தான்னா வண்டிங்கள கொளுத்தியிருப்பேன்


Ramesh Sargam
டிச 19, 2024 19:46

கெடுவை மீறினால் தீர்ப்பாயம் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் இதுபோன்று கழிவுகளை தமிழக எல்லைக்குள் கொட்டக்கூடாது என்று மிக மிக கண்டிப்பாக ஆணையிடவேண்டும்.


Kundalakesi
டிச 19, 2024 19:28

கேரளா வாகனங்கள், சேட்டன் டீ கடை தமிழகத்தில் இருக்காது. மானம் உள்ள தமிழன் விழித்துக்கொள்ள வேண்டும்.


வைகுண்டேஸ்வரன் V
டிச 19, 2024 18:08

பொய்யான தகவல். கேரளா வில் ரேஷன் வாங்கவில்லை என்றால் முடக்கப்படாது. கடந்த 2, 3 வருடங்கள் நான் ரேஷன் கடைக்கே போகவில்லை. ஆனால் என் கார்டு ஒன்றும் முடக்கப் படவில்லை. நான் இங்கே 36 வருடங்களாக வசிக்கிறேன். கேரளா ரேஷன் கார்டு தான் வைத்திருக்கிறேன். ஆதார் கார்ட் அவசியம் என்பதால், தமிழ் நாட்டில் ஒரு ரேஷன் கார்டு, இங்கே ஒரு ரேஷன் கார்டு வாங்கும் சாத்தியம் இல்லவே இல்லை. வீடு, சொத்துக்கள் வாங்கவும் விற்கவும் கேரளா வில் எந்த கட்டுப்பாடு மண்ணாங்கட்டியும் இல்லை. ரேஷன் கார்டு, புண்ணாக்கு எதுவும் தேவையில்லை. ரேஷன் கார்டு வாங்கும் முன்பே நான் நிலம் வாங்கினேன். வீடு கட்டினேன். மற்ற மாநிலத்தவர் வீடு, நிலம் வாங்க 3 கார் மாற்றி விட்டேன். RTO ஆபீஸில் யாரும் ரேஷன் கார்டு கேட்கவில்லை. சமீபத்தில் பைக் வாங்கினேன். KL07... தான் நம்பர். ரேஷன் கார்டு யாரும் கேட்கவில்லை. நான் RTO ஆபீஸ் போகவும் அவசியம் இல்லை. கார் & பைக் டீலர்களிடம் ஆதார் கார்டு, டிரைவிங் லைசென்ஸ் காப்பி மட்டும் கொடுக்க வேண்டும். 3 ஆம் நாள் நம்ம மொபைலில் வண்டி ரெஜிஸ்ட் ரேஷன் நம்பர் வந்துவிடும். அன்று மாலையே டீலர் வண்டியில் நம்பர் பிளேட் fix பண்ணி வீட்டுக்கு கொண்டு வந்து கொடுப்பார். இங்கே வந்து பார்த்து விட்டு எழுதுங்கள். 20, 25 சரவணபவன், 15, 20 ஆரியபவன், 0, 12 கிருஷ்ணா ஸ்வீட்ஸ், 15, 20 சென்னை சில்க்ஸ்,, 7 பூர்விகா மொபைல்ஸ், 4, 5 GRT தங்கமாளிகை கடைகள் உண்டு. இதன் ஊழியர்கள் பலரும் இங்கே Flat, Car எல்லாம் வாங்கி விட்டார்கள். கிணற்றுத் _____யாக இருந்து கொண்டு பொய்கள் எழுதுகிறார்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை