உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / குஜராத்துக்கு ரூ.81; தமிழகத்துக்கு ரூ.88.50- பருப்பு கொள்முதலில் ரூ.45 கோடி இழப்பு

குஜராத்துக்கு ரூ.81; தமிழகத்துக்கு ரூ.88.50- பருப்பு கொள்முதலில் ரூ.45 கோடி இழப்பு

சென்னை: தமிழகத்தில் ரேஷன் துவரம் பருப்பு கொள்முதல் டெண்டரில் பங்கேற்ற நிறுவனங்களுடன், உணவு துறை அதிகாரிகள் விலை குறைப்பு பேச்சு நடத்தினர். இதில், கிலோ பருப்புக்கு, 90 ரூபாய் விலை குறிப்பிட்ட நிறுவனங்கள், 88.50 ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்தன.அதேசமயம், அதே நிறுவனங்கள், குஜராத் அரசுக்கு கிலோ, 81 ரூபாய்க்கு பருப்பு வழங்குகின்றனர். தமிழகத்தில் கூடுதல் விலை கேட்பதால், தமிழக அரசுக்கு, 45 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. இது குறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ரேஷன் கடைகளில் வழங்குவதற்காக, 60,000 டன் துவரம் பருப்பு வாங்க, தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், 'டெண்டர்' கோரியுள்ளது. இதில், இறக்குமதி செய்யப்படும் பருப்புக்கு குறைந்த விலை புள்ளியாக சில நிறுவனங்கள், கிலோவுக்கு, 90 ரூபாய் விலை புள்ளி வழங்கியிருந்தன.முயற்சிகள் அந்த பருப்பின் வெளிச்சந்தை விலை, 75 ரூபாயாக தான் உள்ளது. நிறுவனங்களின் ஆதாயத்திற்காகவும், அதிகாரிகளின் கமிஷனுக்காகவும், அவை கோரிய விலைக்கு பருப்பு வாங்க முயற்சிகள் நடந்தன.இது தொடர்பாக செய்தி வெளியானதால், பருப்பு வாங்குவதற்கான ஆணை நிறுத்தப்பட்டு, விலை குறைப்பு பேச்சு நடத்தப்பட்டது. இதற்கிடையே, வாணிப கழக டெண்டரில், கிலோ பருப்புக்கு, 90 ரூபாய் விலை கேட்ட நிறுவனங்கள், அதே இறக்குமதி பருப்பை, குஜராத் மாநில உணவு துறைக்கு கிலோ, 81 ரூபாய்க்கு வழங்க, 'ஆர்டர்' பெற்றுள்ளன.இந்நிலையில், அந்நிறுவனங்களுடன் விலை குறைப்பு தொடர்பாக, தமிழக உணவுத் துறை உயரதிகாரிகளும், நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகளும் நேற்று மீண்டும் பேச்சு நடத்தினர்.அதில், 90 ரூபாய்க்கு விலை புள்ளி வழங்கிய நிறுவனங்கள், கிலோவுக்கு, 1.50 ரூபாய் மட்டும் குறைத்து, 88.50 ரூபாய்க்கு வழங்குவதாக தெரிவித்தன.அந்நிறுவனங்களிடம், 'குஜராத்தில் கிலோ, 81 ரூபாய்க்கு இதே பருப்பை வழங்குவது ஏன்' என, அதிகாரிகள் கேட்டனர். அதற்கு நிறுவனங்களின் சார்பில், 'தமிழகத்தில் செலவு அதிகம்' என்றனர். 'என்ன செலவு' என்று அதிகாரிகள் கேட்டதற்கு, எந்தவித பதிலும் அளிக்கவில்லை. அந்த பணம் எங்கே செல்கிறது?அரசுக்கு இழப்பு ஒரே பருப்புக்கு குஜராத்தில் கிலோ, 81 ரூபாய்க்கு வழங்குவதாக ஆர்டர் எடுத்துள்ள நிறுவனங்கள், அதே பருப்பை தமிழகத்தில், 88.50 ரூபாய்க்கு வழங்கினால், தமிழக அரசுக்கு கிலோவுக்கு, 7.50 ரூபாய் என, 60,000 டன்னுக்கு, 45 கோடி ரூபாய்க்கு இழப்பு ஏற்படும். எனவே, தொடர்ந்து விலை குறைப்பு பேச்சு நடத்தி, கிலோ பருப்பை, 81 ரூாய்க்கு வாங்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 35 )

Neelachandran
செப் 13, 2025 20:01

ஒரே நிறுவனத்தின் விலை அறிவிப்பில் மாநிலப் பாகுபாடு ஏன்?உண்மை எங்கேயோ ஒளிந்துள்ளது.மக்கள் தெரிந்து தெளிய வேண்டும்.நமது பருப்பு வேகவா போகிறது.அடுப்பை ஊதிக்கொண்டே இருப்போம்.


K.n. Dhasarathan
செப் 13, 2025 17:14

தமிழக உணவு துறை அமைச்சர், மற்றும் முதல்வர் தலையிட்டு, குறைகளை களைந்து, 45 கோடி ரூ. யை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே நிதி பற்றாக்குறையில் தள்ளாடும் தமிழகத்திற்கு இன்னும் குறைந்த, மானிய விலையில் தேடி பருப்பு கொள்முதல் செய்ய வேண்டும்.


Easwar Samban
செப் 13, 2025 12:39

ஒவ்வொரு மாநிலத்திற்காகும்‌ வெவ்வேறு விலையா? விலையை குறைக்கும் வரை விடாதீர்கள்.பாகுபாடு இல்லாமல் நடந்து கொள்ள அறிவுறுத்தவும்.


GANESAN
செப் 13, 2025 08:10

நல்ல நகைச்சுவை.


RAM RAM
செப் 13, 2025 08:06

Good comedy.


RAM RAM
செப் 13, 2025 08:03

சண்டை போடாம கமிஷன பேசி முடிங்க.


RAM RAM
செப் 13, 2025 08:02

சரி.. சரி.. சண்டை போட்டுக்காம கமிஷன பேசி முடிங்க. இந்த மாதிரி பாத்து மக்களுக்கு பழகி போச்சு. இனி தேர்தல் வேற நெருங்குது. செலவுக்கு ரெடி பண்ணணும்ல.


ManiMurugan Murugan
செப் 13, 2025 00:33

பருபபு டெண்டர் விடும் போதே பேரம் பேசப்பட்டிருக்கும் ஊழல் ஆட்சி நடக்கிறது


Balaji
செப் 12, 2025 17:48

தமிழக அரசிடம், பொருட்கள் சப்ளை செய்தபின் பணம் கைக்கு வர அதிகம் செலவு செய்ய வேண்டும்


Azar Mufeen
செப் 12, 2025 15:33

இரு கட்சிகளும் கொள்ளையடிப்பதில் வல்லமை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை