உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

தமிழக மக்களுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்த வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: '' தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் துன்பறுத்தலை மத்திய பா.ஜ., அரசு நிறுத்த வேண்டும்,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்ததாக குற்றம்சாட்டி, அனைத்து ஒன்றியங்களிலும் தி.மு.க., சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது.இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகம் முழுதும் 1,600 இடங்களில் நடந்த போராட்டத்தில் பங்கேற்று ' எங்கள் பணம் எங்கே ?' என்ற இடி முழுக்கக் கேள்வியை எழுப்பிய மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட பணியாளர்களுடன் தி.மு.க.,தோளோடு தோள் நின்றது.கொளுத்தும் வெயிலில் உழைத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை மறுப்பது நிர்வாகத் தோல்வி மட்டும் அல்ல கொடுமை. பா.ஜ., அரசு வேண்டும் என்றே நிதியை நிறுத்தி வைத்து, ஓட்டு மூலம் நிராகரித்த தமிழக கிராமப்புற ஏழை மக்களை தண்டித்து வருகிறது.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட நிதியான ரூ.4,034 கோடியை உடனடியாக விடுவிக்க வேண்டும். தமிழக மக்களுக்கு எதிரான அரசியல் துன்புறுத்தலை நிறுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 40 )

Barakat Ali
மார் 30, 2025 21:03

தமிழர்களைத் துன்புறுத்தி மகிழ்பவர்கள்தானே அந்த இழிசெயலை நிறுத்தவேண்டும் ????


theruvasagan
மார் 30, 2025 17:59

ஊழல் பிராடுத்தனம் செய்கிற மக்களைத்தானே குறிவச்சிருக்காங்க. அதனால சாதாரண மக்களாகிய எங்களுக்கு எந்த கஷ்டமும் இல்லை.


சத்தியநாராயணன்
மார் 30, 2025 10:54

இவனிடம் திறமையும் இல்லை அறிவும் இல்லை எப்படி இருக்கும்போது இவன் ஏன் வீணாகப் பேசி மக்களை குழப்பிக் கொண்டே இருக்கிறான் இதைத்தான் கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது என்று கூறுவார்களோ


vijai hindu
மார் 30, 2025 10:18

மத்திய அரசு துன்புறுத்துகிறது எங்களை துன்புறுத்துகிறது யார் உங்களிடம் சொன்னது நீங்களா எதுவும் உளர வேண்டாம் வயதான காலத்தில் ஓய்வு தேவை


பாரத புதல்வன்
மார் 30, 2025 10:05

முதலில் இந்து கோவிலுக்கு எதிரான துன்புறுத்தலை நிறுத்துங்கள்... அப்புறம் பார்க்கலாம்.2026 ல் மக்கள் வைக்கும் ஆப்பு அப்பா க்கு தெரியாது.....


ramani
மார் 30, 2025 08:52

பஞ்ச பூதங்களிலும் ஊழல் செய்யும் ஒரே ஒரு கட்சி திமுகதான்.


Minimole P C
மார் 30, 2025 08:28

Stalin assumes that TN is still in 1960s. They idiotically think that TN people will definitely believe them that what ever they say. It is due the opposition AIADMK equally corrupted and always keep silence on new and new loots of DMK. Just by election equations DMK by sharing the a portion of the loot to alliance parties like VCK, CPI/CPM, TNMMK etc came to power and talk all nonsences to mislead people. Stalin always cry for money from central Govt just for looting. During last four years Stalin borrowed 4 lakhs crores despite he revised electricity, property, registration of property and vechiles, milk, professional levies and made people to suffer anything. Totally against TN and its people.


Karuppasamy
மார் 30, 2025 08:07

90% மது ஆலை இவங்ககிட்டதான் இருக்கு. கஞ்சா விக்கிறவன் எல்லாரும் இவங்க கட்சிக்காரன்தான். மது கஞ்சானால தினமும் கொலை கொள்ளை கற்பழிப்பு னு தமிழ்நாடு நாசமா போறது உங்களால. இதுல போதையின் பாதையில் செல்லாதீர்னு நாடகம் வேற. இந்த அறிவில்லாத வாக்காளர்கள் இருக்குற வரைக்கும் நாசமாத்தான் போகும்.


தாமரை மலர்கிறது
மார் 30, 2025 00:18

வேலை இல்லாத மாநிலங்களுக்கு மட்டுமே மகாத்மா காந்தி திட்டம். வடக்கே இருந்து தமிழகத்திற்கு வேலைக்கு வரும்போது, அந்த திட்டம் தமிழகத்திற்கு தேவை இல்லை என்பதால், நீக்கப்பட்டுவிட்டது. எந்த மாநிலத்திற்கு எந்த திட்டம் கொடுப்பது என்பது மத்திய அரசின் வேலை. மாநில அரசு மூடிக்கிட்டு இருக்கணும்.


Vijay
மார் 30, 2025 00:11

எல்லாம் வீண். நம்ம ஆட்கள் கடைசியில் பணத்தை வாங்கி கொண்டு திமுகவுக்கு தான் ஓட்டு போடுவார்கள். எவ்வளவு அசிங்கபட்டாலும், அவமானபட்டாலும், ஏமாற்றப்பட்டாலும் திமுகவுக்கு ஓட்டு போடும் திருந்தாத ஜென்மங்கள்.


vijai hindu
மார் 30, 2025 10:29

நீங்க சொல்றது 100% கரெக்ட்


சமீபத்திய செய்தி