உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 8 மாவட்டங்களில் இன்று கனமழை

8 மாவட்டங்களில் இன்று கனமழை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: வளி மண்டல சுழற்சி உள்ளிட்ட காரணங்களால், கோவை, நீலகிரி உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த மையத்தின் அறிக்கை: நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் அதிகபட்சமாக, 12 செ.மீ., மழை பெய்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில், 10; அதே மாவட்டம் திருபுவனம், ஈரோடு மாவட்டம் கொடுமுடியில் தலா, 8; மதுரை மாவட்டம் இடையப்பட்டியில், 7; ராணிப்பேட்டை மாவட்டம் மின்னல், தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் ஆகிய இடங்களில் தலா, 6 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. ராயலசீமா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேலும் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. https://x.com/dinamalarweb/status/1953256201908830529இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இன்றும், நாளையும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, விழுப்புரம், செங் கல்பட்டு, திருவண்ணாமலை, திருப்பத்துார், வேலுார், ராணிப்பேட்டை மாவட்டங்களில், இன்று கன மழை பெய் ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை