உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 4 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

4 மாவட்டங்களில் 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (மே 05), நாளை மறுநாளும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோவை, நீலகிரி, அரியலுார், பெரம்பலுார், கரூர், திருச்சி, கடலுார், விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இன்று (மே 04) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=smafeist&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் நாளையும் (மே 05), நாளை மறுநாளும் (மே 06) கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் இன்று 4ம் தேதி துவங்கி வரும் 28ம் தேதி நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Nada Rajan
மே 04, 2025 16:44

மழை பொழியட்டும் நாடு செழிக்கட்டும்


திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானஸ்கந்தன்
மே 04, 2025 15:34

சைவ சித்திதாந்தங்கள் சமஸ்க்ருதத்தில் இருந்தது அவை மக்களை சென்றடையவில்லை நாயன்மார்கள் அவற்றையெல்லாம் தமிழில் கொண்டு வந்ததாக ஆளுநர் ஆர் என் ரவி சொல்கிறார். இதை அங்கு கூடியிருந்த ஆதீன குருமார்கள் சரியென்று ஆமோதிப்பார்களா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை