உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கோவை, திருப்பூர், நீலகிரியில் கொட்டியது கனமழை!

கோவை, திருப்பூர், நீலகிரியில் கொட்டியது கனமழை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில், 15 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழகத்தில் பல்வேறு இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடலுார், சிவகங்கை மாவட்டங்களில், அதிகபட்சமாக, 13 செ.மீ., வரை மழை பதிவாகி உள்ளது. வங்கக்கடலில் ஆந்திர கரைக்கு அப்பால் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி சில நாட்களுக்கு முன் உருவானது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=hfpp653b&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது, தெற்கு ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வட மாவட்டங்களை ஒட்டிய, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகள் மற்றும் புதுச்சேரியில், இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அக்., 12 வரை, இதே நிலை தொடரும்.

இன்று கனமழை

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, விருதுநகர், கன்னியாகுமரி, ஈரோடு, தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை.

நாளை கன மழை

நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, கரூர், விருதுநகர், துாத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.தமிழகத்தில் இன்று காலை 8 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை விபரம், மில்லி மீட்டரில்: சிறுவாணி அடிவாரம்- 43,கோவை தெற்கு தாலுகா ஆபிஸ்- 39,சின்கோனா- 27,சின்னக்கல்லார்- 26,சூலூர்- 24.2,பில்லூர் அணை- 22,கிணத்துக்கடவு- 20,வேளாண் பல்கலை.,- 20,குருந்தன் கோடு- 34,தங்கச்சிமடம்- 37.2,மண்டபம்- 23.2,பார்வுட்- 65,கெத்தை- 42,கிண்ணக்கொரை -39,தேவாலா- 37,கூடலூர் பஜார் -34,பந்தலூர்- 34,அப்பர் கூடலூர்- 32,குந்தா பாலம்-30,கீழ்க்கோத்தகிரி-26,கோடநாடு-25,குன்னூர்-21,நல்லதங்காள் ஓடை-40,குண்டடம்-32,ஆசனூர்-32.4,நாயக்கன்பாளையம்- 80,ராம பட்டினம்- 73.6,நெகமம்- 56.8,துடியலூர்- 37.6,தோலம்பாளையம்- 36,எலவந்தி- 97.6,கொளத்தூர் பாளையம்- 58.8,சங்கரண்டாம்பாளையம்- 54,மடத்து பாளையம்- 36.4.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

mahalingamssva
அக் 07, 2024 08:28

மாவட்ட விபரங்கள் முழுமையாக உள்ளன நன்றி


Lion Drsekar
அக் 07, 2024 08:05

இங்கு நாங்கள் படகு, வாக்கி டாக்கி எல்லாம் தயாராக இருக்கிறோம், அதே நேரத்தில் ஒரு சொட்டு நீர்கூட தேங்காமல் கடலுக்கு அனுப்பவும் தயாரக இருக்கிறோம், மழைதான் வரவேண்டும், யானை வரும் முன்னே என்பது போல் மழை வரும் முன்பே சாக்கடை நீர் ஆங்காங்கு எப்போதும்போல் கொப்பளித்து ஆறாக ஓடிக்கொண்டு மழைநீருக்காக காத்துக்கொண்டு இருக்கிறது, குடிநீர் கிணற்று நீரில் கலந்து கொண்டு குத்தாட்டம் போட தயாரக உள்ளது எப்போதும் போல் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கூறினால் கிணற்று நீரில் சாக்கடை நீர் கலப்பது தவரிக்க முடியாதது என்றும், சிலருக்கு அது எங்கள் துறை இல்லை என்றும் கூறுவதற்கும் தயாரக இருக்கிறோம், மழைதான் வரவேண்டும், வந்தே மாதரம்


புதிய வீடியோ