உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இடுகாட்டுக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்? பாதைக்கு பட்டா கொடுத்தா இதுதான் நிலை!

இடுகாட்டுக்கு ஹெலிகாப்டர் சர்வீஸ்? பாதைக்கு பட்டா கொடுத்தா இதுதான் நிலை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை மாநகராட்சி எல்லையில், வருவாய் துறை ஆவணங்களில் உள்ள இடுகாடு, பாதை, பொது வகைப்பாடு போன்ற நிலங்களில் வசிப்போருக்கு வீட்டுமனை பட்டா வழங்க மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. அதேபோல், மழைநீர் வடிகால்வாய்களில் கழிவுநீர் விட்டால், 10,000 முதல் 5 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சியின் மாதாந்திர கவுன்சில் கூட்டம், மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது. 40க்கும் குறைவான கவுன்சிலர்கள் மட்டுமே வந்திருந்தனர்.கூட்டம் துவங்கியதும், உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்து பேசிய தி.மு.க., எம்.பி., - ஆ.ராஜாவை கண்டித்து, பா.ஜ., கவுன்சிலர் உமா ஆனந்த் பேச முயன்றார். ஆ.ராஜா பெயரை உச்சரித்ததும், அலறிய தி.மு.க., கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின், 'கேள்வி நேரத்தில் பேசக்கூடாது; உங்களுக்கான நேரம் வரும்போது பேசுங்கள்' என, துணை மேயர் மகேஷ்குமார் கூறினார்.மாநகராட்சி பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும் என அறிவித்த திட்டம் என்னானது என, கவுன்சிலர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு, மாநகராட்சி மேயர் பிரியா, ''சென்னை மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளிலும், 6.50 கோடி ரூபாயில், 245 பள்ளிகளில், 'சிசிடிவி' கேமரா பொருத்தும் பணிகள் துவங்கப்பட உள்ளன. அரசு கொண்டு வந்துள்ள, 'வாட்டர் பெல்' திட்டம், மாநகராட்சி பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும்,'' என்றார்.மாநகராட்சி துணை மேயர் மகேஷ்குமார் பேசியதாவது: சென்னை மாநகராட்சியில், 10 இடங்களில் மட்டுமே வாகனங்கள் நிறுத்த கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மற்ற இடங்களிலும் வாகன நிறுத்த கட்டணம் வசூலிக்க வேண்டும். மாநகராட்சி சொந்தமான இடங்களை வணிக தளமாக மாற்றி, வருவாய் ஈட்டக்கூடிய பணிகளை மேற்கொள்ள குழு அமைக்க வேண்டும். மெரினாவை போல், பெசன்ட் நகர் கடற்கரையிலும் நீலக்கொடி சான்றிதழ் பெற்று, கடற்கரையை மேம்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து சென்னை மாநகராட்சியில், வருவாய் துறை ஆவணங்களில் உள்ள பாதை, வண்டி பாதை, பாட்டை, களம், மயானம் - இடுகாடு, கார்ப்பரேஷன் பொது ஆகிய வகைப்பாடு நிலங்களில் வசிப்போருக்கு வீட்டு மனை பட்டா வழங்க அனுமதி அளித்தல் உட்பட கூட்டத்தில், 110 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மேலும் முக்கிய தீர்மானங்கள்:* சென்னை மாநகராட்சியில், 567 ஆசிரியர்கள் நியமிக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.* வடபழனி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான காந்திநகர் ராஜாஜி தெரு, சாலிகிராமம் பகுதியில் மாநகராட்சிக்கு சார்பில் கோசாலை அமைக்க அனுமதிக்கப்படுகிறது.* மறைந்த இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, லுாப் சாலைக்கு பதிலாக, 125வது வார்டில் உள்ள டிமான்டி சாலைக்கு, எம்.எஸ்.விஸ்வநாதன் பெயர் சூட்டப்படும்.* பேராயர் எஸ்றா சற்குணம் வசித்து வந்த கீழ்ப்பாக்கம் வாடல்ஸ் சாலை, தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் சாலை என மாற்றப்படும்.* போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண கிண்டி ரேஸ்கோர்ஸ் சாலை விரிவாக்கப்படும்.* சென்னையில் முதற்கட்டமாக, 155 மயான பூமிகள் தனியார் வாயிலாக பராமரிக்க மாநகராட்சி அனுமதித்து உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

8 இடங்களுக்கு அனுமதி

சென்னையில் குழாய் வாயிலாக எரிவாயு விநியோகம் செய்ய, 27 இடங்களில், 'டிட்கோ' என்ற தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனம் அனுமதி கோரியிருந்தது. அதில், அம்பத்துார் மண்டலம் வடக்கு அவென்யூ 26வது தெரு கண்ணாத்தாள் சாலை, ஆபீஸ் காலனி டி.வி.எஸ். அவென்யூ.அண்ணா நகர் மண்டலம் பிளாக் 40வது தெரு, ஸ்பர் டேங்க் சாலை; தேனாம்பேட்டை மண்டலம், டாக்டர் பெசன்ட் சாலை, கோடம்பாக்கம் மண்டலம் ஜெய் நகர், நாடேசன் மேற்கு ஆகிய எட்டு இடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறது.

ரூ.5 லட்சம் அபராதம்

சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால்களில் சட்ட விரோதமாக கழிவுநீர் விடுவோருக்கு 200 ரூபாய்; தெருவில் விட்டால் 20 ரூபாய் என்ற நிலையில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. நீதிமன்ற உத்தரவுப்படி, மழைநீர் வடிகால்வாய்ளில் சட்ட விரோத இணைப்பு கொடுப்பவர்கள், கழிவுநீரை விடுபவர்களுக்கான அபராத தொகை உயர்த்தப்படுகிறது.அதன் விபரம்: சாதாரண கட்டடங்கள்வகைகள் - அபராதம் (ரூபாயில்)குடியிருப்பு கட்டடங்கள் - 10,000வணிக கட்டடங்கள் - 25,000*சிறப்பு கட்டடங்கள்வகைகள் - அபராதம் (ரூபாயில்)குடியிருப்பு கட்டடங்கள் - 50,000வணிக கட்டடங்கள் - 1,00,000* அடுக்குமாடி கட்டடங்கள்வகைகள் - அபராதம் (ரூபாயில்)குடியிருப்பு கட்டடங்கள் - 2,00,000வணிக கட்டடங்கள் - 5,00,000.

துரைப்பாக்கத்தில் கடல் பாசி பூங்கா

சென்னையில் ஏழு இடங்களில் கடற்பாசி பூங்கா அமைக்கப்படும் என, அரசு அறிவித்தது. தற்போது பாடி, துரைப்பாக்கத்தில் கடற்பாசி பூங்கா, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்படும் என, மாநகராட்சி அறிவித்து உள்ளது.

மாநகராட்சி தலைவர் குற்றச்சாட்டு

சென்னை மாநகராட்சி ஆளுங்கட்சி தலைவர் ராமலிங்கம் பேசியதாவது:சென்னை கொளத்துார் பகுதியில், சாலையில் இருந்த பள்ளத்தால் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த குழந்தை நிலைதடுமாறி கீழே விழுந்தது. அப்போது, பின்னால் வந்த தண்ணீர் லாரி ஏறியதில், குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுபோன்ற விபத்துகள் ஏற்படாத வகையில், மாநகராட்சி சாலைகளில் உள்ள பள்ளங்களை, 'பேட்ச்வொர்க்' செய்து சீரமைக்க வேண்டும். மாநகராட்சி வளாகத்தில் கருணாநிதி சிலை அமைக்க வேண்டும். எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கருணாநிதி பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Padmasridharan
ஜூலை 02, 2025 08:11

சாமியோவ், பெசன்ட்நகரில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்ட மரப்பலகை சாதாரண மக்களின் நடைக்கு பயன்படுத்துகிறார்கள். மயான பூமிக்கு எடுத்துச்செல்லப்படும் நபர்களிடம் 20/30 ஆயிரங்களில் பணம் வசூலிக்கப்படுகின்றது. போட்ட ரோட்டையே மறுபடியும் போடறாங்க. மேட்டில் மாற்றுத்திறனாளிகளின் வண்டியை ஏற்றி இறக்கும் சிரமம் அவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்


seshadri
ஜூலை 01, 2025 14:49

இவனுக்கெல்லாம் தெரு பெயர்


Ramesh Sargam
ஜூலை 01, 2025 12:21

உயிரோடு இருந்தபோது அவன் ஹெலிகாப்டரில் பறந்திருக்க வாய்ப்பில்லை. ஆகையால் அரசு அவன் இறந்த பிறகாவது ஹெலிகாப்டரில் பயணிக்கட்டும் என்கிற ஒரு நல்ல எண்ணத்தில் இப்படி செய்கிறது. அதை புரிந்துகொள்ளாமல் கேலி பேசலாமா?


Svs Yaadum oore
ஜூலை 01, 2025 09:04

தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் சாலை என மாற்றப்படுமாம் ....தந்தையாம் ....யார் இந்த ஆசாமி ??....


நாஞ்சில் நாடோடி
ஜூலை 01, 2025 13:26

தி மு க வினரின் தந்தை ...


Svs Yaadum oore
ஜூலை 01, 2025 09:01

கீழ்ப்பாக்கம் வாடல்ஸ் சாலை, தந்தை பேராயர் எஸ்றா சற்குணம் சாலை என மாற்றப்படுமாம் ..யார் இந்த ஆசாமி ??....தந்தையாம் ...இது என்ன இவனுங்க அப்பன் வீட்டு சாலையா இவனுங்க இஷ்டத்திற்கு பெயர் மாற்றம் செய்ய ??....


Minimole P C
ஜூலை 01, 2025 08:14

No discussions to benefit people. Only to increase the revenue and loot. Why pathais are to be converted in housing plots?


நசி
ஜூலை 01, 2025 08:10

இன்று இந்து மயானங்கள். அரசு கட்டுமானங்கள் உனக்கு பறி போய்விட்டது.சென்னையில் உள்ள திநகர் கண்ணம்மா பேட்டை சுடுகாடு மின்துறை நிலையம் வெட்டினரி ஹாஸ்பிடல் மற்றும் குடிசை மாற்று வாரியங்கள் எடுத்து கொண்டு விட்டன..காம்பவுண்ட் சுவர் ஓட்டி கடைகள் அமைக்கப்படவுள்ளது..இன்னும் 5_10 வருடங்களில் ஆட்சியாளர்கள் பிணங்களை எரிக்க கிளாம் பாக்கம் தாண்டி மின்மயானங்கள் கட்டுவர்..இல்லையெணில் மெரினா கடற்கரையில் எரிக்க ₹50000 கட்டணம் வசூலிப்பர் அதிலும் கொள்ளையடிக்க அர்பேசர் சயிட் மாதிரி கம்பெனிகளை அமர்த்துவர்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 09:37

இதெல்லாம் நமக்கு முக்கியமா ? டாஸ்மாக் திறக்கும் நேரம் வந்துவிட்டது ..தமிழ்குடிமகன்கள் டாஸ்மாக்கை முற்றுகையிடும் நேரத்தில் .. மயானம் கியானம் என்று சொல்கிறீர்கள் .. இங்கே அவனவன் உடனடியாக மட்டையாக எதை சாப்பிடலாம் என்று திண்டாடுகிறான் அதர்க்கு ஒரு வழி சொல்லுங்கள் ...சினிமாக்காரர்கள் உபயோகிக்கும் உயர்ந்த விலையுள்ள பொருளை குறைந்த விலையில் பெற வழி சொல்லுங்கள் ...


Rajan A
ஜூலை 01, 2025 07:17

தமிழ்நாடு என்ற பெயரை மாற்றி கலைஞர் நாடுனு வைச்சிட்டா நல்லா இருக்கும்.


S.kausalya
ஜூலை 01, 2025 08:06

அதுக்கு தான் முயற்சி செய்து கொண்டு இருக்கிறோம். காசு வாங்கி கொண்டு அடுத்த தேர்தலிலும் எங்களுக்கே ஓட்டு போடுங்க . மெரினா பீச் முதல் மாநில பெயர் வரை அவரின் பெயரில் மாற்றி விடுவோம். அப்புறம் வக்ப் வாரியம், கோயில் நிலம் கூட அவர்களது என்று சொல்வது போல் கருணாநிதி பெயரில் உள்ள எல்லாமும் எங்கள் குடும்ப சொத்து என பதிவு செய்து விடுவோம். மக்களின் இலவசம் பணத்தாசை இப்படியே இருந்தால் எங்களுக்கு எல்லாமே சாத்தியம் தான்.


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூலை 01, 2025 09:44

என்னது தமிழின துரோகி போல் சொலிக்கிறீர்கள் கலைஞர் நாடுனு வைச்சிட்டா போதுமா ? உதயநிதி மாவட்டம் , இன்பநிதி மாவட்டம் , அருள் நிதி மாவட்டம் , தயாநிதி மாவட்டம் , கனிமொழி மாவட்டம் அரவிந்தன் ஒன்றியம், சபரீசன் ஒன்றியம் ,இதெல்லாம் வேண்டாமா? தன்வாழ்க்கையை தமிழினத்திற்காக தியாகம் செய்த தமிழின தலைவர் குடும்பத்திற்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா ?


சமீபத்திய செய்தி