வாசகர்கள் கருத்துகள் ( 24 )
அவ்வளவு உயரம் பெரியார் சிலையோ அல்லது சிலுவையோ வைக்கிறோம் என்றால் சரி என்று சொல்லி இருப்பார்கள்
கோவில்கள் சுற்றுலாத்தலமாக மாறிவிட்டது.... வார விடுமுறையை முன்னிட்டு என்று ஒரு கூட்டமே சும்மா ஜாலிக்கு கிளம்பிவிடுகிறது.. கூட்டம் நிரம்பி வழியும் எந்த கோவில்களிலும் அமைதியும் இல்லை.. பக்தியும் இல்லை.. மணிக்கணக்கில் கியூ வில் சண்டை சச்சரவுகள் அடிதடிகள், தள்ளுமுள்ளுக்கள் தான் நடக்கிறது..இதில் தின்பண்டங்களை தின்றுகொண்டே வரிசையில் செல்லும் லக்ஷணம் வேறு.. இத்தனை அவலங்களையும் தாண்டி கடவுள் முன்னே சென்றால் 10 வினாடிகள் கூட நின்று தரிசிக்க முடியாது.. ஊழியர்களுக்கு , ப்ரோக்கர்களுக்கு, ஏஜெண்டுகளுக்கு பணம் / லஞ்சம் கொடுப்பவர்கள் மட்டுமே நின்று தரிசனம் செய்யமுடியும்.. இப்படி சிறப்புமிக்க எல்லா கோவில்களையும் கெடுத்து குட்டிச்சுவர் ஆக்கி வைத்து இருக்கிறார்கள்.. பக்தி என்பது அமைதியுலும், ஆத்தாவினாலும் மட்டுமே உணரமுடியும் தவிர.. இப்படிப்பட்ட வியாபார கூட்டநெரிசல்களில் உணர முடியாது.. ஒரு விளக்கு கூட ஏற்றி பூஜை செய்வதற்ற்கு கூட வழியில்லாத எத்தனையோ பண்டைய காலத்து மன்னர்கள் கட்டிய கோவில்கள் சிறிது சிறிதாக அழித்துக்கொண்டு இருக்கின்றன.. அதை பராமரித்தாலே போதும்.. நிஜமான பக்திக்காக, எதையும் எதிர்பார்க்காமல், ஆத்மாவிற்காக, பிறப்பை அறுக்க வேண்டி , முக்தி பெற வேண்டி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் , யாருமே செல்லாமல் பாழடைந்து கொண்டு இருக்கும் அத்தகைய பழமையான ஆள் அரவமற்ற ஒரு பூஜை கூட நடக்க வழியில்லாமல் இருக்கும் கோவில்களுக்கு சென்று உங்களால் முடிந்த கடவுள் / கோவில் கைங்கரியங்களை புரிந்து அந்த கோவில்களை எல்லாம் முதலில் அழிவில் இருந்து காப்பாற்றுங்கள்.... நிச்சயம் நல்லது நடக்கும்.. அதை எல்லாம் விட்டுவிட்டு இப்படி 184 அடிகள் 300 அடிகள் சிலைவைத்து கடவுளை வியாபார பொருளாக கண்காட்சி பொருளாக மாற்றுவதால் சுற்றுசூழலுக்கு மட்டும் அல்ல மக்களுக்கும் கூட்ட நெரிசல்களால் அழிவுதான் ஏற்படும்..
தயவு செய்து கோவில்களை விளம்பர பொருள் ஆக்காதீர்கள்.
வழக்கு போட்ட நபர் ஹிந்து மதத்தை சேர்ந்தவரா என்று முதலில் விசாரிக்க வேண்டும் இப்போது மதம் மாறியவர்கள் அனைவரும் அரசின் சலுகைகளுக்காக ஹிந்து பேரில் இறக்கும் வரை இருக்கிறார்கள், இதுபோல ஆட்கள் தான் ஹிந்துக்கள் விழாக்களை தடுக்க நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார்கள்,
சிறந்த முருக பத்தர்கள், வெளிநாட்டிலிருந்து ஒரு நபருக்கு 1 லட்சம் பணம் மாற்றலாம் என்கிற சலுகைகள் மூலம் பல பேருக்கு வந்து அவர்கள் கமிஷன் போக 90000 ஒன்று சேர்த்து பல ஆயிரம் கோடிகளிலில் பிரமாண்டமான பல சர்ச்சு அமைவதை பார்த்து சந்தோச படுகிறோம். எதிர்ப்பு தெரிவிப்பது இல்லை. செய்திகளும் இல்லை.
இந்த மனு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார், டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அறநிலையத் துறை தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, அறிக்கை தாக்கல் செய்தனர்.
விளம்பரம் ஆடம்பரம் முருகனுக்கு தேவையில்லை. மருதமலை செல்லும் பக்தர்களுக்கு போதுமான வசதிகள் இல்லை. இவைகளை மேம்படுத்தலாம். முருகனை வைத்து காசு பார்க்கும் முயற்சி.
இல்லாத ஊருக்கு வழி தேடுகிறார். அவர் அந்த தேடுதலிலேயே காணாமல் போக வாய்ப்புள்ளது.
எங்களுக்கு பதில் சொல்லப் புடிக்காது ....
முதலில் ஒவ்வொரு கோயில் நுழைவிலும் வாகனங்களுக்கு வசூல் செய்யும் கட்டணக்கொள்ளையை நிறுத்தவேண்டும்.