உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கிறிஸ்துவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மாநாடு நடத்த ஹிந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு

கிறிஸ்துவ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு கோரி மாநாடு நடத்த ஹிந்து மக்கள் கட்சி கடும் எதிர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'கிறிஸ்துவ வன்னியர்களுக்கு, எம்.பி.சி., பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, திண்டுக்கல்லில் நடத்த உள்ள மாநாட்டுக்கு அனுமதி அளித்தால், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும்' என, ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

'கிறிஸ்துவ மதம் சார்ந்த வன்னியர்களுக்கு, எம்.பி.சி., பிரிவில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில், வரும் 24ம் தேதி மேட்டுப்பட்டியில், மாநாடு நடத்தப்படும்' என அறிவிக்கப்பட்டுள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=f5pahdhd&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0கிறிஸ்துவ மதத்தில் ஜாதி இல்லை எனக் கூறி மதமாற்றம் செய்தபின், தங்களை வன்னியர்கள் என அழைத்துக் கொள்வது மோசடியாகும்; சட்டப்படி குற்றமாகும். ஹிந்து சமயம் சார்ந்தவரே, வன்னியராக வாழ முடியும். கிறிஸ்துவ மதத்திற்கு மாறி விட்டால், அவர் கிறிஸ்துவராகத்தான் வாழ முடியும்; வன்னியராக வாழ முடியாது. ஹிந்து வன்னியர் அமைப்புகள் போராடி, எம்.பி.சி., பிரிவில் இடம்பெற்று, அதன் வழியே கிடைக்கும் இட ஒதுக்கீட்டு உரிமைகளை, சலுகைகளை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துவ மதத்திற்கு மாறியவர்களை, இப்பட்டியலில் சேர்த்தால், வன்னியர்கள் பாதிக்கப்படுவர். வாய்ப்புகளை, கிறிஸ்துவர்கள் ஆக்கிரமித்துக் கொள்வர். இதை கிறிஸ்துவ பாதிரியார்களே முன்னெடுப்பது, அப்பாவி கிறிஸ்துவ மக்களை துாண்டி விட்டு, சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாகும். கிறிஸ்துவத்தில் ஜாதி இல்லை என சொல்லிவிட்டு, இரட்டை வேடம் போடுவது என்ன காரணத்திற்காக?திண்டுக்கல் மாவட்டம், மேட்டுப்பட்டியில், கிறிஸ்துவ அமைப்புகளால் நடத்தப்படும், வன்னிய சமூக மக்களுக்கு எதிரான மாநாட்டை தடை செய்ய வேண்டும். இந்த மாநாடு நடத்தப்பட்டால், ஜனநாயக வழியில், சட்டத்திற்கு உட்பட்டு, ஹிந்து மக்கள் கட்சி சார்பில், முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். முதல்வர் இவ்விஷயத்தில் கவனம் செலுத்தி, வன்னிய சமூக மக்களுக்கான, எம்.பி.சி., இட ஒதுக்கீட்டு உரிமைகளை பாதுகாக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

morlot
மே 28, 2025 15:57

It is not true,there are es in christian religion.For public they say that there in e in their religion. But at inner they are also following ,community differences.Even amongst the priests there are community e problem. CASTE belong to all indians only.


JAYACHANDRAN RAMAKRISHNAN
மே 22, 2025 13:38

இனி வீதிக் வீதி ஜாதிக்கு ஜாதி இட ஒதுக்கீடு கேட்டாலும் கேட்பார்கள் சமூக நீதி திராவிட மாடலில்.


Apposthalan samlin
மே 22, 2025 12:39

படித்தது கிறிஸ்தவ பள்ளி கல்யாணம் பண்ணினது கிறிஸ்தவ பெண் பேசுறது கிறிஸ்தவத்துக்கு எதிராக கேட்டால் வயிற்று பிழைப்புக்கு ஆக என்று சொல்லுவது .


ஆரூர் ரங்
மே 22, 2025 14:31

ஆங்கிலேயர்கள் இந்து அரசர்களின் நிலங்களைப் பிடுங்கி தமது மத நிறுவனங்களுக்கு அளித்தனர். இப்போ ஆசிரியர் சம்பளம் கூட மாநில அரசுதான் கொடுக்குறாங்க. பாடத்திட்டமும் அரசு உருவாக்கியதுதான். இதிலென்ன பெருமை?.


Mecca Shivan
மே 22, 2025 17:38

வயிறுபிழைப்புக்காக்க எதிர்ப்பது அரிசிமூட்டைகளின் வேலை..


Rathna
மே 22, 2025 12:01

தமிழ் நாட்டில் பாவ மன்னிப்புகாரன்தான் அனைத்து அரசு, ஆசிரியர், கல்லூரி பேராசிரியர்களில் அமர்ந்து உள்ளனர். இதில் கிரிப்டோக்கள் அதிகம்பேர். அதாவது ஹிந்து பெயரை வைத்து வேலையை பிடிப்பது. இதனால் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பின் தங்கியோர் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.


ஜெகதீசன்
மே 22, 2025 21:32

சரியாக சொன்னீங்க. கிரிப்ட்டோக்களால் பல வகையில் சமுதாயத்தில் தற்சமய மற்றும் நீண்ட கால பிரச்சினைகள். இதற்கு முடிவுகட்ட வழி தேடனும்.


D Natarajan
மே 22, 2025 11:43

ஹிந்துவாக இருந்து மதம் மாறியபின், ஹிந்துகளுக்காக உள்ள உரிமையை கோரக்கூடாது. கிருத்துவத்தில் ஜாதியே கிடையாது . ஹிந்துக்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும்


Sundar R
மே 22, 2025 11:43

தமிழகத்தில் உள்ள அராஜகங்கள் அனைத்தும் திமுக, நாதக, தவெக, விசிக, மதிமுக மற்றும் மநீம ஆகிய கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளால் மட்டுமே நடைபெறுகிறது. தேசவிரோத, பிரிவினைவாத, சமூகவிரோதப் போக்கும் இந்த கிறிஸ்தவ மிஷனரி அரசியல் கட்சிகளால் தான் நடைபெறுகிறது. இவர்கள் செய்யும் ஒவ்வொரு அராஜகங்களை ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒன்று சேர்ந்து எதிர்த்து தடுக்க வேண்டும். தமிழ்த்திரு அர்ஜுன் சம்பத் ஐயா அவர்களோடு இணைந்து போராட வேண்டும். இல்லாவிட்டால், கிறிஸ்தவ மிஷனரிகள் ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் முழுசாக முழுங்கி விடுவார்கள்.


joe
மே 22, 2025 11:24

This is correct As Christianity has no e differences then how come a particular e can claim rights that too by priests who should be a role model and not to mislead the people. The so called crypto Christian's who still Hindu name and certificates in Hindu name for getting benefits not only cheating the government but also the God and other Hindu brothers in grabbing their opportunities. They should repent and become true Christians by giving up their rights what they enjoyed earlier for God


Sivaprakasam Chinnayan
மே 22, 2025 11:20

Read the news properly


joe
மே 22, 2025 11:18

இது மிகத் தவறு சாதி இல்லை என்று சொல்லும் மதத்தில் எங்கிருந்து சலுகை கோரி உரிமை கோருவது கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசையா மத தலைவர்கள் இது போன்று சாதி அடிப்படையில் போராட முனைவது கிறித்துவத்திற்கு இழுக்கு் மேலும்இது போன்ற மதம் மாறிய சிலர் இன்னமும் இந்து பெயரை சலுகைக்காக வைத்து கொண்டு சர்டிபிகேட்டிலும் இந்து என்று வைத்து கொண்டு அரசையும் ஏமாற்றி கடவுளையும் ஏமாற்றி இந்து சகோதர்ரகளின வாய்ப்புகளையும் ஏமாற்றி கொண்டு உள்ளனர் இவர்கள் இனியாவது திருந்தி கிரிப்டோ கிறித்தவர்களாக இல்லாமல் உண்மையான கிறித்தவர்களாக மாற வேண்டும்


metturaan
மே 22, 2025 11:05

சபாஷ்...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை