உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

சுவாமி சன்னிதிக்கு இணையாக செயல் அலுவலர் அலுவலகம்; ஹிந்து தமிழர் கட்சி கண்டனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவிலில், சுவாமி சன்னிதிக்கு இணையாக, அறங்காவலர் மற்றும் செயல் அலுவலர் அலுவலகங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக, ஹிந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராம ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

திண்டுக்கல் காளகத்தீஸ்வரர் கோவிலில் உள்ள பிள்ளையார் சன்னிதிக்கு இடதுபுறம் செயல் அலுவலர் அலுவலகமும், வலது புறம் அறங்காவலர் அலுவலகமும் அமைக்கப்பட்டுள்ளது. தெய்வத்திற்கு இணையாக, செயல் அலுவலரும், அறங்காவலர் குழுவினரும் அமர்ந்து பணியாற்றுவது அநியாயம். நாத்திகவாதிகள் கூட செய்ய தயங்கும் இந்த கொடும் செயலை, இந்த கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். இக்கோவிலில் ஏற்கனவே இரண்டு அலுவலகங்கள் இருக்கும் போது, பிள்ளையார் சன்னிதிக்கு இணையாக, புதிதாக இரண்டு அலுவலகங்கள் அமை த்தது எப்படி? உடனடியாக இது மாற்றி அமைக்கப்பட வேண்டும். இல்லையெனில், பக்தர்களை திரட்டி போராட்டம் நடத்துவோம். இவ்வாறு ராம ரவிக்குமார் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

subramanian
ஆக 10, 2025 19:12

அறம் அழிக்கும் துறை உள்ள கோயில்களில் எவரும் உண்டியலில் பணம் போடவேண்டாம் .


visu
ஆக 09, 2025 20:51

மடத்தனமான செயல்


Anantharaman Srinivasan
ஆக 09, 2025 14:26

50 ஆண்டுகளுக்கு முன்னால் கோவில் பிராகாரத்தின் உள்ளே இருக்கும் நிர்வாக அலுவலர் ஆபீஸ்சில் Toilet வசதி கிடையாது. இப்பொழுது சர்வசாதாரணமாக அதிகாரிக்கு தனியாகவும் ஊழியர்களுக்கு தனியாகவும் எல்லா கோவில்களிலும் கட்டியுள்ளளனர்.


Ramona
ஆக 09, 2025 08:53

மக்கள் அளிக்கும் கோயில் காணிக்கையாக கொடுக்கும்பணத்தை ,அ நி து ,விளையாட்டாக செலவு செய்வதில் கிடைக்கும் மகிழ்ச்சிக்கு அளவே கிடையாது.


N Annamalai
ஆக 09, 2025 08:27

விதவிதமாக கொள்ளை அடிப்பதில் வித்தியாசமானவர் கள் .திமுக கட்சியினர்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை