உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

 கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டம்

சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். த.வெ.க., அரசின் தேர்தல் வாக்குறுதியின்படி, கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்; மாத ஊதியத்தை, 50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும்; மே மாதம் உட்பட 12 மாதங்களும் ஊதியம் வழங்க வேண்டும் உட்பட, 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடந்தது. அரசு கல்லுாரி கவுரவ விரிவுரையாளர்கள் நலச்சங்க பொதுச்செயலர் அருணகிரி கூறியதாவது: த.வெ.க., அரசு, தேர்தல் வாக்குறுதியின்படி, கவுரவ விரிவுரையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் என்று நம்புகிறோம். வரும் மானிய கோரிக்கையில் இதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். இல்லையேல், அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

தமிழ் நாட்டு அறிவாளி
ஆக 09, 2026 16:33

இது என்ன கிளெர்க் போஸ்ட் அ அப்படியே நிரந்தரம் செய்ய.


krishnaraj
ஆக 09, 2026 10:34

Abolish AllGovtPosts WithOverFattened PayPerks


krishnaraj
ஆக 09, 2026 10:34

Abolish AllGovtPosts WithOverFattened PayPerks 95%UselessWasteExpensrs For InflatingEconomicStatistics,


நிக்கோல்தாம்சன்
ஆக 09, 2026 09:10

கவுரவ விரிவுரையாளர்கள் என்பது கல்வி துறையை சீரழிக்க வந்த சக்தி என்பது எனது கருத்து , அவர்களுக்கான சட்டம் திட்டங்கள் செம்மைப்படுத்தப்பட்டு பின்னர் அவர்களை பணிக்கு எடுப்பது தான் சிறந்த வழி . பல GF வேலையே செய்யாமல் பாலிடிக்ஸ் செய்து கொண்டு அலைந்து கொண்டிருப்பது தான் இப்போதைய நிலை


சமீபத்திய செய்தி