வாசகர்கள் கருத்துகள் ( 18 )
கையிலே காசில்லை என்று ஒப்பாரி. ஆனாலும் வரப்போகும் தேர்தலை முன்னிட்டு விடியல் மக்களை ஏமாற்ற இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதையெல்லாம் நம்பும் மக்களே அறிவிலிகள்
கல்வி நிதி தரவில்லை நீட் தேர்வு விலக்கு இல்லவே இல்லை வெள்ள நிவாரண நிதி வரவில்லை எய்ம்ஸ் தாமதம் கீழடி பற்றிய மேலும் சில தரவுகளைக் கேட்டால் மத்திய அரசு வேண்டுமென்றே கேட்கிறது சமஸ்கிருதத்தை ஊக்குவித்து தமிழை ஒழித்துக் கட்ட மத்திய அரசு முயற்சி என்று மக்களை ஏமாற்றுவது மட்டுமே திமுக முதல்வரின் வேலை என்பதை சோற்றாலடித்த பிண்டங்கள் புரிந்து கொள்ளாதவரை இந்தக் கொள்ளை ஆட்சி தான் தொடரும்.
ஓசூர் விமானநிலையத்துக்கு தடையில்லா விமோசனம் கிடைக்கும்
ஓசூர் விமான நிலைய திட்டம் ஒரு சிறப்பான திட்டம். ஓசூர், கிருஷ்ணகிரி, மற்றும் சுற்றுவட்டார தமிழக ஊர்கள் இதனால் மிக மிக பயன் அடையும். அதைவிட பெரிய பலன் அல்லது அதற்கு ஈடான பலன் ஓசூருக்கு அருகில் உள்ள தமிழ்நாடு கர்நாடக எல்லையில் பெங்களூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் சிட்டி, பெங்களூரு கிழக்கு பகுதி மக்களுக்கு அந்த ஓசூர் விமான நிலையம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்பொழுது அங்கு வசிப்பவர்கள் தேவனஹள்ளியில் உள்ள விமானநிலையத்துக்கு செல்ல குறைந்தது இரண்டு மணிநேரம், போக்குவரத்து அதிக நேரங்களில் மூன்று மணி நேரம் ஆகிறது. ஆனால் ஓசூர் விமான நிலையம் அமைந்தால் நான் குறிப்பிட்ட அந்த பெங்களூரு பகுதியில் வசிப்பவர்களுக்கு ஒரு மணி நேரம் கூட ஆகாது.
ஆரம்பிக்குறதுக்கே NOC வேண்டுமே அதான் இங்கு உள்ள பிரச்சினையே. தமிழக அரசியல்வாதிகளின் கண்டுகொள்ளா தன்மை தான் இதுக்கு முக்கிய காரணம்.
ஓசூரில் SIPCOT மூலம் தொழிற்பேட்டை 1 மற்றும் 2 அமைத்து தொழிற்சாலைகள் 30 - 40 ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அப்படியிருக்கும்போது ஓசூரில் விமானநிலையம் அமைக்கும் திட்டம் நமது தமிழக அரசிடம் இருந்திருந்தால் பெங்களூர் தனியார் விமான நிலையம் அமைக்க அனுமதிகேட்டபோதே தமிழகம் ஆட்சேபனை அல்லது பாதகமான அம்சங்களை நீக்க நடவடிக்கை யெடுத்திருக்கலாம். அப்பொழுதெல்லாம் மௌனமாக இருந்துவிட்டு தற்பொழுது மத்திய அரசுமீது புகார்சொல்ல என்ன உரிமை உள்ளது. தமிழகத்தில் புதிய விமான நிலையங்களை கொண்டுவர தற்போதைய ஆட்சி முனைப்புக்கட்டுவதற்கு வேறு காரணங்கள் இருப்பது பொதுமக்களுக்கு நன்கு தெரியும். இந்த திட்ட அறிவிப்பு வருவதற்குமுன்பே தேவையான அளவு நிலங்களை அரசியவாதிகளின் நிறுவனங்கள் வளைத்துபோட்டாச்சு. இது பொதுமக்களுக்கு நன்றாக தெரியும்
2033 தானே. இப்போது ஆரம்பித்தால் தான் 2033 ல் முடிக்க முடியும். எனவே எல்லா வேலையும் ஆரம்பிக்க வேண்டியது தான் . கவலை வேண்டாம்,
கர்நாடக அரசும் மத்திய அரசும் தமிழகத்தை கலந்தாலோசிக்காமல் போட்டுக் கொண்ட ஒரு ஒப்பந்தம் தமிழக அரசை எந்த விதத்திலும் கட்டுப்படுத்த முடியாது. தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தை நாடினால் வழக்கம் போல் மத்திய பாஜக அரசுக்கு குட்டு கிடைக்கும்!
2008ல யாரு மத்தியி்ல் ஆண்டானோ யாரு இப்ப கர்நாடகவை ஆளுகிறானோ எவன் தொளபதியோடு கூட்டணியில் உள்ளானோ... அவனை ஏன் கேட்கவில்லை இந்த கேள்வியை?
முடிந்தால் போய் கேசு போடு
2008 இல் கருணாநிதி தானே முதலமைச்சர்! மத்தியில் திமுகவின் ஊழல் அமைச்சர்கள் தானே இருந்தனர்? இவர்களென்ன தூங்கிக் கொண்டிருந்தனரா? 2008 இல் தமிழக அரசுக்குத் தெரியாமல் இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தினமலர் செய்தி வெளியிடுகிறது.. அப்போது திமுக அரசும் மத்திய திமுக மந்திரிகளும் என்ன செய்தனர்? ஊழலில் முழுகிக் கிடந்தனரோ? எதற்கெடுத்தாலும் மத்திய அரசு மீது பழியைப் போடுவது தான் விடியாத திமுகவின் வேலை..
2008 இல் திமுக காங்கிரஸ் கூட்டணியின் ஆட்சி தனியாரிடம் போட்ட பெங்களூரு விமான நிலைய ஒப்பந்தம் இப்போ இடைஞ்சலாக உள்ளது. இப்போதும் இரு மாநிலங்களிலும் அதே கூட்டணியாட்சி இருப்பதால் காவிரிப் பிரச்சினை போல ஆகும்.