உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கதேச கலவரத்தில் இருந்து தப்பியது எப்படி?: கண்ணீருடன் விளக்கிய தமிழக மாணவிகள்

வங்கதேச கலவரத்தில் இருந்து தப்பியது எப்படி?: கண்ணீருடன் விளக்கிய தமிழக மாணவிகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கிருஷ்ணகிரி: வங்கதேச கலவரத்தால், தொலைத்தொடர்பு கூட இல்லாமல் மூன்று நாட்கள் பயத்துடன் அவதிப்பட்டோம் என வங்கதேசத்தில் இருந்து கிருஷ்ணகிரி திரும்பிய மாணவியர் கண்ணீருடன் கூறினர்.வங்கதேசத்தில், போரில் உயிர் இழந்தவர்களின் வாரிசுகளுக்கு, அரசு வேலைகளில் 30 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கலவரம் வெடித்து, 130க்கும் மேற்பட்டோர் பலியாகினர். பதற்றத்தை தணிக்க வங்கதேச ராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் படிக்க சென்று தவித்த இந்திய மாணவ, மாணவியரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மீட்டு வருகிறது.வங்கதேசத்தில் மருத்துவம் படிக்க சென்று தவித்த தமிழகத்தை சேர்ந்த, 49 மாணவ, மாணவியர் நேற்று பத்திரமாக திரும்பினர். இதில், கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரை சேர்ந்த பிரீதா வாசுதேவன், 25 (பயிற்சி மருத்துவர்), இறுதியாண்டு மாணவியர்களான ஹவுசிங்போர்டு ஸ்ரீநிதி ராமமூர்த்தி, 23, ஆலப்பட்டி தக்சண்யா ஜேம்ஸ், 22 மற்றும் கிருஷ்ணகிரியில் நால்வர், டேம்ரோடு பகுதியில் இருவர், இருமத்தூர் பகுதியில் ஒருவர், போச்சம்பள்ளியை சேர்ந்த ஒருவர் உள்பட, 12 பேர் அடங்குவர்.

விடுதியில் முடங்கினோம்

கிருஷ்ணகிரி திரும்பிய மாணவியர் நிருபர்களிடம் கூறியதாவது: நாங்கள் அனைவரும் வங்கதேசத்தில் சிலேட் பகுதியில் உள்ள மகளிர் மருத்துவக்கல்லூரியில் படித்து வருகிறோம். இதில், சிலர் மருத்துவம் முடித்துவிட்டு பயிற்சி மருத்துவராகவும் உள்ளனர். எங்கள் கல்லூரியில் மட்டும் இந்தியாவை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். ஜூலை 17ல், வங்கதேசத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி பரவியது. இதன் விபரங்கள், கலவரங்கள் குறித்து முழுமையாக தெரிவிப்பதற்குள் இணையதளம் முடங்கியது. மொபைல் உள்பட அனைத்து தொலைத்தொடர்புகளும் துண்டிக்கப்பட்டது. நாங்கள் தங்கியுள்ள விடுதியில் உணவு கூட வழங்கப்படவில்லை. உங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள் என்று மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. நாங்களே உணவு தயார் செய்தவாறு விடுதியில் தங்கியிருந்தோம்.

நிலைமை மோசம்

கடந்த இரு நாட்கள் முன்பு, கலவரம் தீவிரமடைந்ததை துப்பாக்கி சத்தம் மற்றும் கலவர வீடியோக்களை பார்த்து தெரிந்து கொண்டோம். எங்கள் பெற்றோரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. எங்கள் விடுதியில் இருந்த மாணவி தக்சண்யாவின் மொபைலில் மட்டும் அதிர்ஷ்டவசமாக டவர் கிடைத்தது. அந்த மொபைல் மூலம், 60 மாணவியர் தங்கள் பெற்றோரிடம் பேசி தகவல் தெரிவித்தனர். பயத்துடன் இருந்த எங்களை விடுதி, கல்லூரி நிர்வாகிகள் எவ்வளவு விரைவாக இங்கிருந்து செல்ல முடியுமோ செல்லுங்கள், நிலைமை மோசமாக உள்ளது என்றனர். இதனால் மேலும் பதற்றமடைந்தோம். டி.வி.,யில் பார்த்த ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு இந்திய வெளியுறவு தூதரக அதிகாரிகளிடம் பேசினோம். அவர்கள் உடனடியாக எங்கள் அனைவரையும் தொடர்பு கொண்டு பெயர், விபரங்களை மட்டும் கேட்டனர். அதன்பின் தமிழக அரசு உதவியோடு, எங்களது பாஸ்போர்ட் விபரங்கள் முதல் விமான டிக்கெட் வரை அவர்களே ஏற்பாடு செய்தனர்.

முடிவுக்கு வந்த மூன்று நாள் பதற்றம்

கடந்த, ஜூலை 20, மதியம், 3 மணியளவில் சிலேட் பகுதியிலிருந்து கிளம்பிய நாங்கள், சிலாங், தமாபில், தவுகி எல்லை வழியாக கவுஹாத்திக்கு ராணுவ பாதுகாப்போடு அழைத்து வரப்பட்டோம். பின்னர் கவுஹாத்திலிருந்து விமானம் மூலம் கிளம்பிய நாங்கள் சென்னை வந்தோம். எங்களை தமிழக அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார். மூன்று நாட்கள் துப்பாக்கி சத்தம், கலவர பீதியில் சிக்கியவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு உதவிய மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.வங்கதேசத்தின் டாக்கா, மைமென்சிங் பகுதிகளிலும், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் கல்லூரிகளில், படித்து வருகின்றனர். அப்பகுதிகளில் கலவரம் தீவிரமடைந்துள்ளதால், அவர்களை மீட்கவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 22 )

Natarajan Ramanathan
ஜூலை 23, 2024 00:39

இங்கும் போராட்டம் செய்து கோட்டாவை ஒழித்தால் திறமையான மாணவர்களுக்கு இங்கேயே படிக்க இடம் கிடைக்கும், வேலையும் கிடைக்கும், பிறகு திராவிடமும் அழிந்துவிடும். ஒரேகல்லில் மூன்று மாங்காய்


Kumar Kumzi
ஜூலை 22, 2024 21:31

பங்களாதேஸ்க்கு கொர்ர்ர்ரான் படிக்க போயிருப்பானுங்களோ


Jai
ஜூலை 22, 2024 20:52

இந்திய ராணுவம் அவர்களை மீட்டு கவுகாத்தி கொண்டு வந்திருக்கிறார்கள். சென்னையில் சென்று வரவேற்றது மட்டுமே திமக. ஊபீசுகளும், அரசு ஊழியர்களும் ஏற்கனவே திமிங்க அரசு திறமையாக மீட்டுக் கொண்டு வந்து விட்டது என்று நம்பி விட்டார்கள்.


Duruvesan
ஜூலை 22, 2024 20:37

ஆக நீட் இல்லை னா எல்லோரும் ஜெகத் காலேஜ்ல அந்த காசு குடுத்து சேர்ந்து இருப்பாங்க, நீட் தடை செய்ய விடியல் சூழுரை


Jagan (Proud Sangi)
ஜூலை 22, 2024 20:18

காசு இருந்தா மக்கு பசங்க கூட கண்ட நாடுகளில் படித்து டாக்டர். நாம் தான் ஜாக்கிரதையா இருக்கவேண்டும். எந்த நாட்டு காலேஜ் என்று முதலில் நாம் கேட்கவேண்டும் . பாப்வு நியூ கினியாவில் ஒரு கல்லூரி காசு வாங்கிவிட்டு இடம் தருகிறார்களாம். எல்லா காசு உள்ள மக்கு பசங்க அங்கு ஓடவும்


திண்டுக்கல் சரவணன்
ஜூலை 22, 2024 19:32

/அவர்களை மீட்கவும் அரசு துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்/ - செஞ்சி மஸ்தான் மற்றும் முதல்வர் ஸ்டாலின் இவர்கள் அனைவரையும் கண்டிப்பாக மீட்டு திராவிட மாடல் அரசுக்கு புகழ் சேர்க்கும்


Pandi Muni
ஜூலை 22, 2024 19:30

மருத்துவம் பயில ஒரு மூர்க்க தேசம்தான் கிடைத்ததா?


V RAMASWAMY
ஜூலை 22, 2024 19:21

திராவிட மாடல் அரசுதான் எதிலும் மணல் கொள்ளை உள்பட முதல் இடம் என்று சொல்லும் தமிழ் நாட்டைவிட்டு எதற்கு படிப்பிற்காக அதிலும் பங்களா தேஷ் போன்ற நாடுகளுக்கு செல்லவேண்டும். இந்தியாவில் இல்லாத கல்வியா அதிலும் மற்ற நாட்டு மாணவர்கள் இங்கு கல்வி கேட்க வரும்பொழுது ?


Iniyan
ஜூலை 22, 2024 19:17

பங்களாதேஷ் ஒரு பிச்சைக்கார நாடு. அங்கே கல்வி தரம் மிகவும் கீழே. அங்கே போய் இவர்கள் படிக்கிறார்கள் என்றால் இவர்கள் தகுதி எப்படி பட்டதாய் இருக்கும். இவர்கள் அரசாங்கத்துக்கு அட்வைஸ் வேற.


காஷ்மீர் கவுல் பிராமணன்.
ஜூலை 22, 2024 19:13

அடுத்து ஆப்கானிஸ்தான் ஈராக் சிரியா மாலத்தீவு சென்று படியுங்கள்.


மேலும் செய்திகள்