உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்: ஓ.பி.எஸ்.,

தே.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன்: ஓ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

தென்காசி: ''தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டேன். இருப்பினும் அடுத்து எது வேண்டுமானாலும் நடக்கலாம்,'' என பன்னீர்செல்வம் தெரிவித்தார். தென்காசியில் சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் பிறந்த தின விழாவில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அளித்த பேட்டி: வரும் காலத்தில் எத்தகைய கூட்டணி வரும் என்பதை, என் தொண்டர்கள் தீர்மானிப்பர். தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டேன். தமிழக அரசியல் வரலாற்றில், எல்லா கட்சிகளும், எல்லாரிடமும் கூட்டணி வைத்துள்ளனர்; எதிர்த்தும் நின்றுள்ளனர். அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி முதுகில் குத்தி விட்டார் என தே.மு.தி.க. பொதுச்செயலர் பிரேமலதா கூறியிருக்கிறார். அது சரியானது. அ.தி.மு.க., ஒன்றிணைய வேண்டும் என்ற சசிகலாவின் அறிக்கையை வரவேற்கிறேன். அ.தி.மு.க.,வில் இருந்து பிரிந்து சென்ற அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறேன். முதல்வர் ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பதற்காக வெளிநாடுகள் சென்றுள்ளார். அவரது ப யணம் வெற்றி பெற வாழ்த்துகிறேன். நடிகர் விஜய் கட்சி யுடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு, எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம் என்பதே பதில். இவ்வாறு அவர் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 23 )

Durai Kuppusami
செப் 03, 2025 10:31

இது ஒரு வெத்து வேட்டு பில்டப் ஜாஸ்தி கட்சியிலேயே இன்னொரு வெத்து வேட்டு 5 தேதி மனம் திறந்து.. அதுவரை பொறுத்துக்கொள்ள வேண்டுமாம். யாருக்கும் அவசரம் இல்லை அந்த வெத்து வேட்டு மீடியாக்கள் அவர் வீட்டு வாசலில் காத்துக் கெடப்பாங்க .நீ எங்கே போரியோ போ ஒண்ணும் பிரளயம் வராது தூ....


anonymous
செப் 02, 2025 20:13

பழைய டீக்கடை கைகொடுக்கும்.


Kulandai kannan
செப் 02, 2025 19:45

அப்பாடா...


பாரத புதல்வன்
செப் 02, 2025 15:32

என்னடா இது தர்ம யுத்தத்திற்கு வந்தசோதனை.....


அப்பாவி
செப் 02, 2025 14:49

விஜய் கட்சியில் ஐக்கியமாயிடுங்க. 10 சீட்டு தாராளமா கிடைக்கும். 8 ஜெயிக்க வாய்ப்பு இருக்கு.


Ragupathy
செப் 02, 2025 13:47

ஏன் எடப்பாடி ஓபிஸ்ஸை சேர்க்கவில்லை என்றால் அதிமுக தலைமை நிலையத்திற்குள் நுழைந்து சூறையாடினர் ஓபிஎஸ் கும்பல்... அதுதான் காரணம்.... அமைதியாக இருந்திருந்தால் அதிமுகவில் நம்பர்2 வாக இருந்திருக்கலாம்...


திகழ்ஓவியன்
செப் 02, 2025 12:51

இவர் விலகி விட்டார் , TTV விலகி விட்டார் அப்போ இந்த கேக் WALK தான் DMK வுக்கு


Abdul Rahim
செப் 02, 2025 12:21

அதை நம்பியது உங்கள் தவறு...


BALAJI
செப் 02, 2025 11:25

பாஜக வை நம்பினால் நடுத்தெரு நிச்சயம்


Anand
செப் 02, 2025 10:38

காமெடி piece


புதிய வீடியோ