வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்த பெண்மணிக்கு வாழ்த்துக்கள். மக்கள் கவர்னர் ரவி அவர்களுக்கு வணக்கங்கள் நன்றிகள் மத்திய அரசு, மாநில கவர்னர்களுக்கு, கீழ்கண்ட கூடுதல் அதிகாரங்களை வழங்க வேண்டும். 1 அரசியல் வேறுபாடு, சாதி, மத, இனப்பாகுபாடு காரணமாக, மாநில அரசால், உதவி மறுக்கப்படும், தகுதியான ஏழை மக்களுக்கு, கவர்னர் மூலமாக, பொருளாதார உதவி, தொழில் உதவி வழங்க, மத்திய அரசின் நிதி துறையில் இருந்து, கூடுதல் நிதி ஒதுக்கப் பட வேண்டும். அதற்கு மாற்றாக, மாநில அரசுக்கு ஒதுக்கப் படும் நிதியை குறைக்க வேண்டும். 2 மாநில அரசால், அரசியல் காரணங்களுக்காகவோ, அரசின் மீதான அதிருப்தியை திசை திருப்புவதற்காக, "சிறு குற்றங்களில்" கைது செய்யப்படும், அப்பாவிகளை பொது மன்னிப்பு கொடுத்து, விடுதலை செய்யக்கூடிய அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். மேற்கத்திய நாடுகளில் இந்த முறை, அமலில் உள்ளதை நாம் அறிவோம். தற்போது, தூக்கு தண்டனை கைதிகளுக்கு மட்டுமே இந்த ஏற்பாடு உள்ளது. அதை, Non-Congnizable Offence-க்கும் விரிவுபடுத்தலாம். 3 மாநில அரசு தொடர்ச்சியாக தவறிழைக்கும் போது, மாநில அரசை ஒரு ஆண்டுக்கு "சஸ்பெண்ட்" செய்யக் கூடிய அதிகாரம் வழங்கப் பட வேண்டும். அந்த ஒரு வருடம், கவர்னர் தலைமையில், அனைத்து அதிகாரங்களுடன், கூடிய ஆட்சி நடத்தப்பட வேண்டும். ஒரு வருடம் முடிந்ததும், மீண்டும் மாநில அரசின் கைகளில் பொறுப்பு ஒப்படைக்கலாம். இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், மாநில அரசு, கவர்னர்-க்கு, பயந்து, ஒழுங்காக ஆட்சி நடத்த முயலும் அல்லவா ?