உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்: அண்ணாமலை சபதம்

தி.மு.க., ஆட்சியை அகற்றும் வரை செருப்பு அணிய மாட்டேன்: அண்ணாமலை சபதம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோவை: '' தி.மு.க., ஆட்சி அகற்றப்படும் வரை செருப்பு அணிய மாட்டேன், '' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

கேள்வி

கோவையில் நிருபர்களை சந்தித்த தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியதாவது: நான் உண்மையாகவே அரசியல் செய்கிறோமா? அது மக்களுக்கு பயன்படுகிறதா என எனக்கு நானே கேள்வி கேட்கிறேன். சித்தாந்தம் சித்தாந்தம் என தொங்கிக் கொண்டு ஏதாவது ஒரு விஷயத்தை பேசிக் கொண்டு உள்ளோமா என என்னை நானே கேள்வி கேட்டுக் கொண்டு உள்ளேன். இன்று காலையில் இருந்து எனக்குநானே கேட்டுக் கொள்ளும் கேள்வி, நான் அரசியலில் தொடர வேண்டுமா என்ற கேள்வி.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=i5xaieqv&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

தருணம்

தமிழகத்தில் பட்டப்பகலில் கவர்னர் மாளிகையில் இருந்து 1.5 கி.மீ., தொலைவில் அண்ணா பல்கலையில் ஒரு கட்டடத்திற்கு பின்னால், கொடூரமாக சித்ரவதை செய்து, எதற்கு பெண்ணாக பிறந்தோம் என நினைக்கும் அளவுக்கு ஒரு கொடூரமான செயல் சென்னையில் நடந்துள்ளது. அது வழக்கம் போல் அரசியல் ஆகி உள்ளது. பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறோம் என்று சொல்வதை விட எங்கள் அரசியல் பாதையை தீர்மானிக்கும் தருணமாக இதனை பார்க்கிறேன்

கட்சிப்பதவி

தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகள் பாதுகாப்பாக இல்லை. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையவில்லை. ஞானசேகரன் தி.மு.க.,வில் சைதாப்பேட்டையில் ஒரு வட்டப்பொறுப்பில் உள்ள ஆள் . ஏற்கனவே குற்றங்கள் உள்ள ஆள் தி.மு.க.,வில் இணைத்து கொண்டு முக்கிய நபர்களுடன் புகைப்படம் எடுக்கவும், சமூக வலைதளத்தில் பதிவிடவும் பதவி தேவைப்படுகிறது. அக்கட்சி பத்திரிகையிலும் அவரது பெயர் உள்ளது வந்துள்ளது.எங்களுடைய குற்றச்சாட்டு அவர் தி.மு.க.,வில் இருப்பது இல்லை. ஒரு குற்றவாளி இதேபோல் கொடூர செயலை செய்தவன், தி.மு.க.,வில் தன்னை இணைத்துக் கொண்டு, அமைச்சர் பக்கத்தில் நின்று புகைப்படம் எடுத்து, அதனை உள்ளூர் போலீஸ் ஸ்டேசனில் நான் தி.மு.க.,க்காரன் எனக்காட்ட தேவைப்படுகிறது. ரவுடி ரிஜிஸ்டரில் தனது பெயர் வரக்கூடாது என்பதற்கும், அரசியல் அடையாளத்திற்கும் தேவைப்படுகிறது. அதை வைத்து மறுபடியும் ஒரு குற்றத்தை செய்துள்ளான். இதுதான் எங்களின் கோபம். அவன் தி.மு.க.,வில் இருக்கிறது கோபம் கிடையாது.

தி.மு.க., போர்வை

தி.மு.க., என்ற போர்வை குற்றம் செய்பவர்களுக்கு தேவைப்படுகிறது. தி.மு.க, என்ற போர்வை இருந்ததினால் மட்டும் தான் அந்த குற்றவாளி அந்த பெண் மீது கை வைத்துள்ளான். தி.மு.க., கட்சிப் பதவி இருக்கிறது. அமைச்சர் பக்கத்தில் இருக்கிறான் என்பதற்காக ஸ்டேசனில் விசாரணை நடத்தவில்லை. ஏற்கனவே இதேபோன்ற ஒரு குற்றத்தை செய்திருக்கிறான். அதே குற்றத்தை இரண்டாவது முறை செய்துள்ளான்.தி.மு.க., பொறுப்பில் இருந்ததால் அவனை சோதனை செய்யவில்லை. அதனால் அவன் தைரியமாக வெளியே வந்தான்.

ரத்தம் கொதிக்கிறது

எப்.ஐ.ஆர்., எப்படி வெளியானது. போலீஸ் துறையைத் தவிர வேறு யாரும் எப்ஐஆர்.,ஐ வெளியில் விட முடியாது. அது ஒரு எப்.ஐ. ஆரா. , படிக்காதவன் எழுதினால் கூட ஒழுக்கமாக எழுதுவான். அதை பார்க்கும் போது, குற்றம் செய்தது பெண்ணா? குற்றம் செய்தது அந்த அயோக்கியனா என சந்தேகம் எழுகிறது. அந்த பெண் குற்றம் செய்தது போல் எப்.ஐ.ஆர்., எழுதப்பட்டு உள்ளது. அதை படித்தால் ரத்தம் கொதிக்கிறது. காக்கிச்சட்டை அணிந்து இந்த எப்.ஐ.ஆர்., எழுதியவருக்கு வெட்கமாக இல்லையா ? இந்த எப்.ஐ.ஆர்., கோர்ட்டில் நிற்குமா?மொபைல் எண் அப்பா பெயர், ஊர் பெயர் வெளியாகி உள்ளது. இதற்கு வெட்கப்பட வேண்டும். குடும்பத்தை நாசம் செய்துவிட்டீர்கள். ஏழு தலைமறைக்கு ஒரு கறுப்பு அடையாளம் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் எல்லாம் மனிதர்களா?

மரியாதை

மூன்று மாதம் தமிழகம் அமைதிப்பூங்காவாக இருந்தது. அண்ணாமலை திரும்பி வந்ததால், மறுபடியும் கலவரம் வெடித்தது என அமைச்சர் சொல்கிறார். இதற்கு வெட்கப்படணும். நீங்கள் எல்லாம் அமைச்சராக இருப்பதற்கு வெட்கப்படணும். கட்சிப் பதவியில் இருப்பதால் மரியாதையாக பேசிக் கொண்டு உள்ளேன். தேசிய கட்சியின் மாநில தலைவர் என்ற வெங்காய பொறுப்பில் இருக்கிறேன். அதனால் மரியாதையாக பேச வேண்டும் என சொல்லிக் கொடுத்ததால் மரியாதையாக பேசிக் கொண்டு இருக்கிறேன்.வீதிக்கு தனி மனிதனாக வந்தால் வேறு மாதிரி இருக்கும்.

வீடு முன்பு

கட்சி தலைவராக தொண்டராக நான் ஒரு சபதம் எடுத்துள்ளேன். எத்தனை ஆர்ப்பாட்டம் நடத்துவது. சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்போனால், முன்னாள் கவர்னரை பிடித்து வைத்துள்ளனர். நாயை பிடிப்பது போல் பிடித்து வைத்துள்ளனர். எங்கள் வீட்டிற்கு தண்ணீர் வரவில்லை என ஆர்ப்பாட்டம் செய்கிறோமா? இனிமேல் ஆர்ப்பாட்டம் வேலையெல்லாம் இல்லை. ஒவ்வொரு வீட்டுக்கு வீ டு முன்பு போராட்டம் நடக்கும் வீட்டிற்கு வெளியே வந்து பா.ஜ., தொண்டன் போராட்டம் நடத்துவான்.எனக்கு நானே சாட்டை அடி கொடுக்க கூடிய நிகழ்வை நாளை நடத்தப்போகிறேன். நாளை காலை 10 மணிக்கு 6 முறை சாட்டையால் அடித்து கொள்ளப்போகிறேன். தி.மு.க., ஆட்சியில் இருந்து அகற்றப்படும் வரை செருப்பு போட மாட்டேன். பத்திரிகையாளர் சந்திப்பு முடிந்ததும் செருப்பை கழற்றிவிடுவேன். 48 நாட்கள் விரதம் இருக்க போகிறேன் பிப்.,2வது வாரம் ஆறுபடை வீட்டிற்கு சென்று முருகனிடம் முறையிடப் போகிறேன்.

வேலை

சமூக வலைதளத்தில் என்ன வேண்டுமானாலும் பேசுவீர்கள். கேட்டால் கட்சி போர்வைக்குள் ஒழிந்து கொள்வீர்கள். நாளையில் இருந்து எனது அரசியலும் இப்படித்தான் இருக்கும். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழலில் உங்களுக்கு எதற்கு மரியாதை கொடுக்க வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணை அவமானப்படுத்த எப்.ஐ.ஆர்., வெளியில் விடப்பட்டு உள்ளது. அண்ணாமலைக்கு பொய் சொல்வது மட்டுமே வேலை என அமைச்சர் ரகுபதி சொல்கிறார். எனக்கு இதுதான் வேலையா?சிறைத்துறை கையில் வைத்துக்கொண்டு ஏதாவது ஒரு வேலையை செய்துள்ளீர்களா ? தப்பு நடந்தால், அதை வெளியில் கொண்டு மக்களிடம் கொண்டு வைப்பது எங்கள் வேலை. பதில் சொல்வது உங்கள் வேலை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.பேட்டி முடிந்ததும், அண்ணாமலை செருப்பை கழற்றினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 158 )

ali bhai
ஜன 13, 2025 20:17

May god bless each and everyone in superabundance .


Bahurudeen Ali Ahamed
டிச 28, 2024 10:38

குற்றவாளி பிடிபடாவிட்டால் குற்றம் சாட்டுவது சரியானது குற்றவாளி பிடிபட்டுவிட்டான் இப்ப என்ன செய்யவேண்டும் அவனுக்கு சரியான தண்டனை கிடைக்கவேண்டும் என்று அழுத்தம் தரவேண்டும், அப்புறம் சட்டத்தின் ஓட்டைகளை என்ன செய்ய அதிகபட்ச குற்றவாளிகள் புதிய குற்றங்களில் ஈடுபட்டவர்களாய் இருப்பதில்லை சிறையிலிருந்து ஜாமினிலும் பெயிலிலும் வெளிவந்தவர்களாய்தான் இருக்கிறார்கள் பயங்கர கொலை குற்றவாளிகளை கூட எப்படி காவல்துறை வெளியில் வர அனுமதிக்கிறார்கள், இந்தவிஷயத்தில் இவன்மீது சிலபல குற்றசாட்டுகள் இருந்தபோதும் இவன் மீது கண்காணிப்பை காவல்துறையினர் எப்படி தவறவிட்டார்கள்


ஜெய்ஹிந்த்புரம்
டிச 28, 2024 01:27

அது செருப்பு இல்லை 10,000 ரூபாய் ஷூ. இந்த ஆளையும் மடாதிபதிகளை பல்லக்கில் தூக்கி செல்வது போல யார் தலையிலாவது ஏறி போகலாம் என்று நினைத்தாரா? அதுக்கு சனாதனத்தில் இவருக்கு இடம் தரவில்லையே.


AMLA ASOKAN
டிச 27, 2024 10:00

எதோ ஒரு அப்பாவி பெண் இரவில் பணி முடிந்து தனியாக செல்லும் பொழுது ஒரு காம வெறியனிடம் சிக்கிக்கொண்டாள் , பலாத்காரம் செய்யப்பட்டாள், என்றால் அது காவல் துறையின் கவனக்குறைவு. இந்த சம்பவம் ஒரு 189 ஏக்கர் கொண்ட யூனிவெர்சிடியின் உள்ளே உள்ள மரம் செடி கொடி அடர்ந்துள்ள புதர் அருகே நடைபெற்றுள்ளது. இரவு நேரத்தில் ஒரு அந்நிய வாலிபனுடன் அந்த தனிமையை அவள் ஏன் விரும்புகிறாள்?அந்தப் பயலும் அவளை அம்போ என்று விட்டு விட்டு ஓடி விடுகிறான். அவளை காப்பாற்ற அந்த அயோக்கியன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அந்த பெண்ணின் பெற்றோர் அவளை படிக்க அனுப்பினார்களா, அல்லது காதல் செய்ய அனுப்பினார்களா ? அரசியல் மூலம் ஊதி பெரிதாகி விட்ட இந்த சம்பவத்தால்,காதலில் வீழ்ந்து மானத்தை இழந்த மங்கை, அவர்களது குடும்பத்திற்கு மாபெரும் களங்கத்தை ஏற்படுத்தி பெற்றோரை அவமானப்படுத்தி விட்டாள். போலீஸ் விசாரணை, குற்றவாளி கைது, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி, அரசு மெத்தனம் என்ற எல்லாவற்றையும் தாண்டி தமிழர் பண்பாட்டிற்குரிய தன்மானம், சுயகட்டுப்பாடு இன்றைய கல்லூரி மாணவிகளுக்கு கண்டிப்பாகத் தேவை. அண்ணா யூனிவெர்சிடியின் துணைவேந்தர் & ஆட்சிமன்ற குழுவினர் தான் பெண்களுக்கான பாதுகாப்புகான ஏற்பாடுகள், மற்றும் கடுமையான விதிமுறைகளை அமுல் படுத்த வேண்டும். துணைவேந்தர் அனுமதியின்றி போலீஸ் யூனிவெர்சிட்டிக்குள் உள்ளே நுழைய சட்டத்தில் இடமில்லை என்பதையும் விமர்சகர்கள் அறிந்திருக்க வேண்டும் .


veera
டிச 27, 2024 11:16

இந்த கருத்தை உன் குடும்பத்துடன் பேசிவிட்டு போட்டயா ?


வெள்ளைச்சாமி,அறந்தாங்கி
டிச 27, 2024 11:17

பாவமன்னிப்பு கேட்கிற பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் கூட்டத்தை சேர்ந்த உனக்கும் அந்த புத்திதான இருக்கும் என்பது தெரிந்த கதைதானே உன் குடும்ப பெண்ணுக்கு இப்படியொரு கொடுமை நடந்திருந்தால் நீ இவ்வளவு நீளத்துக்கு குற்றவாளிக்கு வக்காலத்து வாங்குவியா?


Yuvaraj Velumani
டிச 27, 2024 09:51

200 உபி உன் வளர்ப்பு கேவலம்


Mahendran Puru
டிச 27, 2024 08:09

நல்லது. இந்தப் பிறவியில் இனிமேல் செருப்பு வாங்கும் செலவு மிச்சம்.


Ravi
டிச 27, 2024 08:49

No for him but for his friends who were supporting month on month.


Ravi
டிச 27, 2024 09:03

I was thinking about the state of mind of her and her father to what they would be thinking about the people including the dirty…. Politicians who are trying to score publicity from the unfortunate incident. It will be very cruel days with highest level of humiliation. No one should suffer this kind of situation. Handling of this kind of incident should be serious and a capital punishment should be fast enough to pass the message to society.


Prasanna Krishnan R
டிச 27, 2024 10:03

மகேந்திரா, கமெண்ட் போடும் போது சொந்த ஊரின் பெயரை போடாதீர்கள். உன்னைப் பார்க்க வெட்கமாக இருக்கிறது. இது ஒரு நாள் உங்கள் மூத்த சகோதரிக்கோ அல்லது தங்கைக்கோ நடக்கும். பிறகு நீங்கள் என்ன செய்ய முடியும்? உங்கள் இணையை அகற்றவும்


ghee
டிச 27, 2024 10:17

அதை வைத்து உன்னை அடித்தாலும் உனக்கு உரைகாது


சிந்தனை
டிச 27, 2024 10:32

அப்படியே ஆகட்டும்.... சாமிகிட்ட வேண்டிக்கிறேன்...


Tamilselvan,kangeyam638701
டிச 27, 2024 11:20

அப்படியே இந்தப் பிறவியில் உன் குடும்ப பெண்களுக்கும் இதுபோன்று நடக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்...


Suresh Sivakumar
டிச 27, 2024 05:12

Like leader like partymen. Everyone is a rapist. Shame on these people and the women in their families, who support them


Jayaraman Pichumani
டிச 27, 2024 01:45

அப்படி என்றால் இனிமேல் அண்ணாமலை கடைசி வரை செருப்பு போட முடியாது


Yuvaraj Velumani
டிச 27, 2024 09:52

உனக்கு ஏன் 200 உபி எரியுது


P. Siresh
டிச 26, 2024 23:44

துரிமாவளவந்தான் எதிர்க்கட்சியாக எதிர்க்க தையரியம் இல்லாமல் இருக்கிறார்.அதுபரவாயில்லை.எடிற்பவர்களை குறை சொல்லாமல் இருப்பது நல்லது


Saravanan
டிச 26, 2024 23:35

இதே உத்தரபிரதேசமா இருந்திருந்தா போலீஸ் போறதுக்கு முன்னாடி புல்டோசார் போயிருக்கும்


புதிய வீடியோ