உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விமர்சனம் என்ற பெயரில் அவதுாறு பரப்பினால் போலீசில் புகார் தரலாம்: ஐகோர்ட்

விமர்சனம் என்ற பெயரில் அவதுாறு பரப்பினால் போலீசில் புகார் தரலாம்: ஐகோர்ட்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'சினிமா என்ற பெயரில் அவதுாறு பரப்பினால் போலீசில் புகார் அளிக்கலாம்' என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.தியேட்டர்களில் ரசிகர்களின் விமர்சனங்களாலும், ஊடகங்களின் விமர்சனங்களாலும் படம் வசூல் கடுமையாக பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. திரைப்பட விமர்சனங்களை யு-டியுப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் வெளியிட மூன்று நாட்களுக்குத் தடை விதிக்க மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று(டிச., 3) விசாரணைக்கு வந்தது. விசாரித்த ஐகோர்ட் நீதிபதி சவுந்தர் கூறியதாவது: * விமர்சனம் என்ற பெயரில் அவதூறு பரப்பினால் போலீசாரிடம் புகார் அளிக்கலாம்.* திரைப்படங்கள் வெளியான 3 நாட்களுக்குள் விமர்சனங்களை வெளியிடத் தடை விதிக்க முடியாது.* விமர்சனம், கருத்து சுதந்திரம் என்பதால் பொத்தாம் பொதுவாக உத்தரவு பிறப்பிக்க முடியாது.* மத்திய, மாநில அரசுகள் , யூடியூப் நிறுவனம் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கை நீதிபதி ஒத்திவைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

Kanns
டிச 04, 2024 13:56

Freedom of Expression MUST for Healthy Democracy-Supreme Peoples Rule. However, Opposition ViewPoints Can Counter& MUST


Rajasekar Jayaraman
டிச 04, 2024 01:54

ஆளும் கட்சிக்கு மட்டுமே உதவும் சட்டம் இது.


Ravichanran
டிச 03, 2024 22:35

சூப்பர்


sankaran
டிச 03, 2024 21:44

கருத்து சுதந்திரம் பேசியவர்கள் எங்கே ?..


Kundalakesi
டிச 03, 2024 21:37

குடியை ஞாபகபடுத்தி இப்போது எல்லாரும் குடிக்காமல் இருப்பது குற்றம் என்று கூறும் அளவிற்கு வந்து விட்டது.


Anantharaman Srinivasan
டிச 03, 2024 19:41

பொதுவாழ்க்கையிலிருப்பவர்களை விமர்சிக்க முடியும். அதுபோல் பொது உலகத்தில் ரீலீஸ் செய்யப்படும் படங்களை விமரிசனம் செய்ய ஒவ்வொரு குடிமகனுக்கும் உரிமையுண்டு. சட்டம் போட்டு தடுக்க முடியாது.


kantharvan
டிச 03, 2024 21:11

அப்படியா ?? பொது வாழ்க்கையில் இருந்தால் அவதூறு பரப்பும் வகையில் பேசினால் மான நஷ்ட ஈட்டு வழக்குகளை சந்திக்க வேண்டியது வரும். திரைப்படம் என்பது படைப்பு அது வியாபாரப்பொருள் அதனால் விமர்ச்சத்திற்கு உட்பட்டதே? ஆனால் அந்த குறிப்பிட்ட திரை கலைஞரின் கொள்கைகளுக்காக அவரை அவர் குடும்பத்தினரை இஷ்டத்திற்கு வஞ்சகம் கொண்டு விமர்ச்சிப்பது அதுவும் தனி மனித தாக்குதல் செய்வது எத்தகைய அயோக்கியத்தனம் என்பதை எப்போதுதான் சில அறிவுகுருடர்கள் உணர்வார்களா??


ஆரூர் ரங்
டிச 03, 2024 18:51

ஜிஎஸ்டி பற்றி தவறான விவரங்களுடன் அவதூறாக சினிமாவில் பேசியவர் எங்கே?. அவர் மீது வழக்கு போடலாமா?


Brahamanapalle murthy
டிச 03, 2024 18:46

இவங்க மட்டும் சினிமாவில் என்ன வேண்டுமானாலும் காட்டலாம். யாரையும் கிண்டல் செய்யலாம். ஆனால் மக்கள் எதையும் விமசரிக்க கூடாது என்று சொல்வது தப்பு. எவ்வளவ்வோ படத்தில் போலீசை தரம் தாழத்து காட்டியிருக்கற்கள், ஹிந்து சமய பழக்கங்களை கிண்டல் செய்தார்கள்.


sridhar
டிச 03, 2024 18:31

ஒவ்வொரு படத்துக்கும் விமர்சனத்தை நீதிமன்றம் எழுதிக்கொடுத்தால் அதை பொதுமக்கள் படித்துக்காட்டலாம்


Raa
டிச 03, 2024 18:31

சினிமாவே எடுக்கக்கூடாது என்று தடை போடுங்கள் ஜட்ஜு அய்யா


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை