உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்க மாட்டீர்கள்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்

முருக பக்தர்கள் மீது கை வைத்தால் இருக்க மாட்டீர்கள்: தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை ஆவேசம்

சென்னை: ''இரும்புக் கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், நீங்கள் இருக்க மாட்டீர்கள்,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை எச்சரித்தார்.அவர் அளித்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kycczo37&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திருப்பரங்குன்றம் சரித்திரம், அமைச்சர் சேகர்பாபுக்கு தெரியுமா? கடந்த, 1926ம் ஆண்டு இதே பிரச்னை வந்தபோது, அங்கிருந்த சப்- ஜட்ஜ் அளித்த தீர்ப்பில், 'திருப்பரங்குன்றம் கோவில், எந்த சந்தேகமுமின்றி தேவஸ்தானத்திற்கு சொந்தமானது; நிலங்கள் கோவிலுக்கு சொந்தமானவை' என, தெளிவாக கூறப்பட்டுள்ளது. அந்த வழக்கில் அப்பீலுக்கு சென்றபோது, இரு தரப்பினரும் சமாதானமாக செல்ல அறிவுறுத்தப்பட்டது.ஆங்கிலேயர்கள், ஹிந்து மக்களுக்காக தற்காத்த ஒரு கோவிலை, தி.மு.க., தாரைவார்க்க தயாராக இருக்கிறது. புதிதாக இன்னொரு மதத்தை சேர்ந்தவர்கள் பிரச்னையை ஆரம்பிக்கின்றனர். ஆடு எடுத்து சென்று சாப்பிடுகின்றனர். ஒரு எம்.பி., மீது நடவடிக்கை எடுக்க துப்பு இல்லை. இரும்புக்கரம் கொண்டு அடக்குவோம் என, அமைச்சர் ரகுபதி சொல்கிறார். அவர் அடக்கிய லட்சணத்தை பார்த்தோம்.

அடக்கி காட்டுவோம்

பெண்கள், குழந்தைகள் ஆகியோரிடம் தவறு செய்பவர்களை பிடிக்க வேண்டிய காவல் துறையை, பா.ஜ.,வினரை, 350 இடங்களில் நள்ளிரவில் கைது செய்து, வீட்டுக் காவலில் வைத்து உள்ளனர். அந்தந்த ஊரில் உள்ள பா.ஜ., தலைவர்களை, வளர்த்து கொண்டு இருக்கிறீர்கள். மதுரை ஐகோர்ட் தீர்ப்பு வந்த ஒரு மணி நேரத்தில், மக்கள் எழுச்சியோடு வந்துள்ளனர். காவி வேட்டி கட்டி கொண்டு முருக பக்தன், சிவ பக்தன் என்று சொல்லி கொண்டு இருக்கக் கூடாது. சனாதன தர்மம், ஹிந்து தர்மம் வேறு இல்லை. இஸ்லாமியர்கள் சகோதரர்கள் தான். பிரச்னையை ஏற்படுத்தியது யார்? இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம் என, 'சீன்' போட்டு சுற்றினால், உங்களை எப்படி அடக்க வேண்டும் என்பது, எங்களுக்கு தெரியும்; அடக்கி காட்டுவோம். அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதியாக இருப்பதால், மரியாதை தருகிறோம். வார்த்தைகள் சரியாக இருக்க வேண்டும். லோக்சபாவில் ஒரு கேள்விக்கு அளித்த பதிலில், தமிழகத்தில் போதை பொருள் விற்றதாக, 2021ம் ஆண்டில் 9,632 பேர்; 2022ம் ஆண்டு 588; 2023ல் 421; 2024ம் ஆண்டு 113 பேர் மீது வழக்கு போடப்பட்டு இருப்பதாக கூறப்பட்டு உள்ளது. ஒரு ஆண்டில், 9632 வழக்குகள், 3 ஆண்டுகளில், 1,122 வழக்குகள்தான் என்றால், எப்படி கஞ்சா விற்பனையை கட்டுபடுத்துவீர்கள்? கஞ்சாவின் தலைநகரமாக தமிழகம் உள்ளது. இரும்புக் கரம் கொண்டு முருக பக்தர்கள் மீது கை வைத்தால், நீங்கள் இருக்க மாட்டீர்கள். நீதிமன்றம் அனுமதி தந்த வழியில், போராட்டம் நடக்கிறது. அவ்வளவு பேர் கூடினரே... பஸ்சை உடைத்தனரா, தீ வைத்து கொளுத்தினரா? அமைதியான முறையில் பேசி சென்று உள்ளனர்.

பாடம் புகட்டப்படும்

பிரச்னையை உருவாக்குவது தி.மு.க.,தான். நவாஸ் கனி அங்கு செல்ல, என்ன உரிமை இருக்கிறது? அவரை கைது செய்தீர்களா? சிறுபான்மையினர் ஓட்டு வேண்டும் என்பதற்காக, அமைதியான முறையில் ஹிந்து பக்தர்கள் வந்தால் கை வைக்கிறீர்கள். காவல் துறையை, போதைபொருள் கடத்தலை தடுக்க, அனுப்புங்கள். சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து, ஆட்டோவில் பெண்ணை கடத்தி செல்வதை பார்த்த ஒரு நபர், போலீஸ் கட்டுபாட்டு அறைக்கு தகவல் சொல்லிய பின், அப்பெண்ணை மீட்க வேண்டி உள்ளது. சென்னையில் அதிகமான போலீசும், ரோந்து போலீசும் இருந்தும், பொது மக்கள் தந்த தகவலில்தான், குற்றவாளியை பிடிக்க முடிவதை பார்த்து, அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு வெட்கப்பட வேண்டும். முருக பக்தர்களை பார்த்து இரும்புக் கரம் கொண்டு அடக்கும் முன், குற்றங்களை செய்பவர்களை இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டியதுதானே? ஹிந்துக்கள் மீது தான் இரும்புக்கரமா? மற்றவர்கள் மீது இருக்காதோ? ஹிந்துகள், பிரித்து ஓட்டு போடுவர் என்பதால் அவமானப்படுத்தலாம்... எழுச்சி என்பது ஆரம்பம் தான்; வருங்காலத்தில் தி.மு.க.,வுக்கு தக்க பதிலடி தந்து, பாடம் புகட்டப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 39 )

Sampath Kumar
பிப் 07, 2025 16:48

ஆவேசம் ஆட்டுக்குட்டிக்கு ஆகாது 1926 தீர்ப்பு பற்றி பேசும் நீ அந்த மலை மீது தர்க்க கட்ட யாரு அனுமதி கொடுத்தது ?/ முதல அதை சொல்லு பார்க்கலாம் அப்போ இருந்த ஹிந்துக்கள் என்ன பண்ணிக்கொண்டு இருந்தார்கள் ? ஏதாவது தகவல் உண்டா ? அதை சேகரித்து விட்டு அப்புறம் போராடினால் நல்லது அன்று இருந்த ஆட்சி முஸ்லீம் மன்னர்களின் ஆட்சி அப்போ மதுரை கோவில் ஏதிலும் வழிபாடு கிடையாது என்று வரலாறு கூறுகிறது அப்போ தும்பை விட்டு விட்டு இப்போ வாலை பிடித்தல் என்ன அருத்தம்


SAMANIYAN
பிப் 07, 2025 08:14

சிக்கந்தர் என்பவர் யார் என்று தெரிஞ்சால் ஹிந்துக்களுக்கு ரோசம் இருந்தால் அந்த இடத்தில சிக்கந்தர் ஷா தர்கா இருக்க வாய்ப்பில்லை ..மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நாசம் செய்யப்பட்டு 60 ஆண்டு காலம் அடைக்கப்பட்டு இருந்தது இவரது வம்ச வழி ஆட்சி காலத்தில் தான் ..அதாவது மாலிக் கபூர் ஆட்சி காலம் ..டெல்லி சுல்தான் தலைமையில் ..ஹிந்து கோவில்களை சூறை ஆடியதும் எரித்து நாசமாகியதும் அவர்கள் ஆட்சியில் தான் ..அவர்களை தோற்கடித்து இன்று மீனாட்சி அம்மன் என்று ஒரு கோவில் இருப்பதற்கு காரணம் விஜயநகர பேரரசு ..அதாவது திருமலைநாயக்கர் வம்சாவளி ..வரலாறு மறைக்க பட்டு மாத்தி எழுத பட்டுள்ளது ..


pmsamy
பிப் 06, 2025 14:22

இந்த அக்யூஸ்ட் பிக் பாக்கெட் மூஞ்சிய ஏன்டா இவ்ளோ பெருசா போடுற


RAMAKRISHNAN NATESAN
பிப் 06, 2025 13:34

அண்ணாமலை தமிழக கட்சித் தலைமைப் பதவியை இழந்துவிடக் கூடாது என்கிற தவிப்பில் இருக்கிறார் ....


murugan
பிப் 06, 2025 12:42

ஒரு பொய்யன். ஆட்டை தூக்கி கொண்டு போனது யார் ? இது கூடவா உனது கண்ணுக்கு தெரியவில்லை. முட்டு கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு. திருட்டு மு கட்சி


madhes
பிப் 06, 2025 11:37

தமிழகத்தில் அண்ணாமலை போன்றவர்கள் இப்படித்தான் பண்ணுவாங்க,


madhes
பிப் 06, 2025 11:35

அண்ணாமலை போன்றவர்கள் இனிமேலும் இப்படி மதக்கலவரம் ஏற்படுத்த நினைத்தால்.....


rameshkumar natarajan
பிப் 06, 2025 11:14

First he should understand that he will be removed shortly from BJP leadership. As far as, Thiruparamkundram issue, for ages, Hindus were worshiping here and Muslims are doing thier religious activites without any issue. As far as the local people are concerned they have no issues. The cattle which is carried to the hill , is done by hindus only. People those who dont know the histroy , especially the people from outside Madurai should go out, peace and solution will be found by the local people. As far as, Ganja in TN is concerned. We need to understand , the drugs are caught in Gujarat. When the drug smugglers know that drugs are caught in Gujarat, Adani port, why they are trying to go again and gain to the same port? Kindly think, twice. The drugs which are comming to south india, especially, Tamil Nadu, Kerala and Karnatak are comming through Gujarat ports. Who is the gaurdian of the borders. Central Government. I Thinnk, BJP chief is accusing central government.


chettan
பிப் 06, 2025 17:14

we don't listen to your stupid comments chetta....better be a good beggar in cochin


M. PALANIAPPAN
பிப் 06, 2025 11:12

அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்


Oviya Vijay
பிப் 06, 2025 11:00

முருகன் மைண்ட் வாய்ஸ்: என்ன என்ன கோமாளித் தனம் எல்லாம் பண்ண முடியுமோ பண்ணுங்கடா... பார்க்குறதுக்கு ஜாலியா தான் இருக்கு... உங்க கட்சிக்குன்னு வேற வேலை வெட்டி ஏதாவது இருந்தா தான... இதுக்காக எல்லாம் நீங்க 2026 எலெக்ஷன்ல ஆட்சிக்கு வருவீங்க அப்படின்னு உங்களுக்கு வரம் எல்லாம் கொடுக்க மாட்டேன்... ஏன்னா அது நடக்காத ஒன்னு... என்ன புரிஞ்சுதா...


புதிய வீடியோ