உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கஞ்சா கடத்தலில் சர்வதேச கும்பல்: பிடிக்க முடியாமல் சுங்கத்துறை திணறல்

கஞ்சா கடத்தலில் சர்வதேச கும்பல்: பிடிக்க முடியாமல் சுங்கத்துறை திணறல்

சென்னை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்தி வரப்படுவதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியாமல், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் திணறி வருகின்றனர்.சென்னை விமான நிலையத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்தபடி உள்ளன. சுங்கத்துறை அதிகாரிகள், கடத்தலில் ஈடுபடுவோரை பிடித்து, கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர். சுற்றுலா விசாவில் வெளி நாடுகளுக்கு செல்வது போல், பலர் கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பிடித்தாலும், அவர்களின் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். புதுப்புது வழிகளில் கடத்தல் நடப்பதால், எந்த வியூகத்தை பயன்படுத்தி பிடிப்பது என்று தெரியாமல், அதிகாரிகள் குழப்பம் அடைந்துள்ளனர். கடந்த ஆக., மாத இறுதியில் இருந்து தற்போது வரை சென்னை விமான நிலையத்தில், 48 கோடி ரூபாய் மதிப்புள்ள, 48 கிலோ உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடத்தலில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொதுவாக கைது செய்யப்படுவோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அதிகாரிகள் சிறையில் அடைப்பர். கடத்தல் பின்னணியில் உள்ளவர்களை பிடிக்க, தனி குழு அமைத்து தேடுவர். ஆனால், சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் சரியான முயற்சி எடுக்காமல் இருப்பதே, கடத்தல் அதிகரிப்பதற்கு காரணம் என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால், வரும் நாட்களில் கஞ்சா புழக்கம் தமிழகத்தில் அதிகரிக்க வாய்ப்புள்ளது.இது குறித்து, சுங்கத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபடுவோருக்கு, தங்கத்தை விட நான்கு அல்லது ஐந்து மடங்கு கமிஷன் தொகை அதிகமாக கிடைக்கிறது. இதனால் புது வியூகங்களை வகுத்து, கடத்தலில் ஈடுபடுகின்றனர். முன்பு குறிப்பிட்ட சில நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் அதிகம் கஞ்சா கடத்தப்படும். கடத்தி வருவோரை எங்களுக்கு கிடைக்கும் உளவு தகவல் அடிப்படையில் பிடித்து விடுவோம். சமீப மாதங்களாக, கடத்தல்காரர்கள் புது வழிமுறையை பின்பற்றுகின்றனர். முன்பு, அதிக அளவில் தாய்லாந்தில் இருந்து நேரடியாக, சென்னை வரும் விமானத்தில் கடத்தல் நடக்கும்; தற்போது தாய்லாந்தில் இருந்து இலங்கை சென்று, அங்கிருந்து சென்னை வரும் விமானத்தில் போதைப் பொருட்களை கடத்தி வருகின்றனர். கடத்தல்காரர்கள் பிடிபட்டாலும், அவர்களின் சர்வதேச 'நெட்வொர்க்' விபரங்களை கண்டறிவது சவாலாக இருக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

G.Kirubakaran
அக் 31, 2025 14:53

may be support from ruling party members


Barakat Ali
அக் 31, 2025 13:53

சுங்கத்துறை அதிகாரிகள் பலர் விலைபோயிருக்கலாம்.. அதைக் கண்டறிய வேண்டியது மத்திய உளவுத்துறையின் பொறுப்பு .......


ஆரூர் ரங்
அக் 31, 2025 10:57

அயலக அணியை மீறி வேறெவரும் கடத்த முடியுமா?


Ramesh Sargam
அக் 31, 2025 09:55

உலகமெங்கிலும் இருந்து கஞ்சா மற்றும் பல போதைப்பொருட்கள் ஏன் சென்னைக்கு வருகிறது? சென்னையில் அவற்றை விநியோகம் செய்பவர்கள் இருப்பதால்தானே? ஆகையால் சென்னை காவல்துறையினர் முதலில் அந்த விநியோகஸ்தர்களை பிடித்து சிறையில் அடைத்து கடுமையாக தண்டிக்கவேண்டும். பிறகு பார்க்கலாம் எப்படி சென்னைக்குள் போதைப்பொருள் வருகிறது என்று.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 11:15

ஒரு அஜெண்டாவோட வேலை நடக்குது போல இருக்கு


raja
அக் 31, 2025 07:16

ஒட்டு மொத்த திருட்டு திராவிட. ஒன்கொள் கோவால் புற கொள்ளை கூட்டத்தையும் அவனின் தொப்பில் கொடி உடன் பிறப்புகலையும் உள்ள தூக்கி போட்டு குமுறினால் அனைத்து வகையான கடத்தலும் தானா நிக்கும்...


அப்பாவி
அக் 31, 2025 06:32

பிடிபட்டவனை போட்டுத் தள்ளினால் கடத்தல் குறையும்.இல்லே, இது சின்ன மீன். திமிங்கிலத்தை புடிக்கப் போறோம்னு டயலாக் பேசினா திணறிக்கிட்டே இருக்க வேண்டியதுதான்.


Ravi Manickam
அக் 31, 2025 04:19

இந்த 11 பேரும் என்ன சமூக சேவையாற்ற வந்தா கைதானர்கள்? வரும்கால இளைய சமுதாயத்தை காப்பாற்ற இந்த கைதிகளை ஒரே இடத்தில் வைத்து பாதி கைதிகளை சுட்டுத்தள்ளுங்கள், அப்புறம் பாருங்கள்.


ஜெய்ஹிந்த்புரம்
அக் 31, 2025 04:19

சுங்கத் துறை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் உள்ளது என்பது சங்கித வித்வான்கள் கணக்கில் எடுத்து கொண்டு பதில் சொல்வது நல்லது. ஊழல் தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பது ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் சுங்கத் துறை தான் என்பதையும் மறந்து விடக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன்.


raja
அக் 31, 2025 07:21

போட்டு தள்ளினாலும் தானா நிக்கும்


naranam
அக் 31, 2025 04:06

இதெல்லாம் சும்மா கட்டுக் கதை.. கடத்திக் கொண்டு வருபவர்களை உடனுக்குடன் சுட்டுக் கொன்று விட வேண்டும். பிறகு எவன் கடத்த ஒத்துக் கொள்வான்? கமிஷன் கரப்ஷன் போன்ற விஷயங்களால் தான் கடத்தல் தொடர்கிறது.


Kasimani Baskaran
அக் 31, 2025 04:00

குடிசைத்தொழில் போல ஆகிவிட்டது... மீள்வது சிரமம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை